மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு பைட்டோபிளாஸ்மா நோய்

Phytoplasma spp.

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • மரவள்ளிக்கிழங்கு செடிகளின் மேல் உள்ள குறிப்பிடத்தக்க சிறிய தளிர்கள் தாவரத்திற்கு "சூனியக்காரர்களின் துடைப்பம்" அம்சத்தை அளிக்கிறது.
  • ஆழமான விரிசல்களுடன் வேர்கள் மெல்லியதாகவும் மரத்தைப் போன்றும் ஆகலாம்.
  • தண்டுகளின் கீழ் பகுதியில் வீக்கங்கள் ஏற்படக்கூடும்.
  • இலைகள் சுருட்டையாகி, சில தோற்ற அமைப்புகளுடன் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு

அறிகுறிகள்

பைட்டோபிளாஸ்மா நோய்த்தொற்றால் பல நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன, ஆனால் மரவள்ளிக்கிழங்கு செடிகளின் மேற்புறத்தில் ஏற்படும் துடைப்பம் போன்ற இலை பெருக்கம் காரணமாக இந்த நோய் இப்பெயர் பெற்றது. பெரும்பாலும், இது வழக்கமாக செயலற்ற தளிர்களை வளரச் செய்து, சிறிய, மஞ்சள் இலைகளை உருவாக்கி, செடியின் உச்சியில் "சூனியக்காரர்களின் துடைப்பம்" வடிவத்தில் காட்சியளிக்கும். கீழ் தண்டுகளில் இலேசான வீக்கம் ஏற்படலாம், அத்துடன் இலைகள் சுருட்டையாகி, அவற்றில் பச்சை மற்றும் மஞ்சள் நிற புள்ளியமைவு காணப்படும். வேர்கள் மெல்லியதாகவும் மரத்தைப் போன்றும் ஆகி, தடிமனான வெளிப்புற அடுக்குகள் மற்றும் ஆழமான விரிசல்களுடன் வளரலாம். சில நேரங்களில் விரிசல்கள் வேரைச் சுற்றி ஒரு வளையத்தை உருவாக்கி, தாவரத்தின் காற்றில் அசையும் பகுதிகளுக்கு நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டு செல்வதைத் தடுத்து, விசித்திரமான வளர்ச்சியைத் தரக்கூடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நடவு செய்வதற்கு முன்பு, மரவள்ளிக்கிழங்கு துண்டுகள் அல்லது விதைகளை 0.01 % ஸ்ட்ரெப்டோமைசின் கரைசல் கொண்டு ஆறு மணி நேரம் சிகிச்சை செய்வது மரவள்ளி செடிகளின் இறப்பைக் குறைக்கவும் விதைகளைப் பொறுத்தவரை முளைப்பு விகிதத்தை அதிகரிக்கவும் சிறந்த வழிமுறையாகும். சில ஒட்டுண்ணி குளவிகள் நோய்ப்பூச்சி காரணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். மரவள்ளிகிழங்கு பைட்டோபிளாஸ்மா நோய்க்கு, தற்போது 100% பயனுள்ள இரசாயன சிகிச்சை முறை இல்லை. துண்டுகள் மற்றும் விதைகளின் நுண்ணுயிர்கொல்லி சிகிச்சைகள் வேர் மகசூல் மற்றும் ஸ்டார்ச் (மாச்சத்து) உள்ளடக்கத்தை கணிசமாக அதிகரித்தது, மேலும் பைட்டோபிளாஸ்மாவின் தொற்றுநோயை கட்டுப்படுத்தவும் இதனைப் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

பைட்டோபிளாஸ்மா எனப்படும் பாக்டீரியா போன்ற உயிரினங்களால் அறிகுறிகள் தூண்டப்படுகின்றன, இது தாவரங்களின் கடத்துத்திசு அமைப்புக்குள் மட்டுமே வாழும். மாவுப்பூச்சிகளின் மத்தியில் இது மரவள்ளிக்கிழங்கு செடிகளின் சாற்றை உறிஞ்சும் சில பூச்சிகளின் உண்ணும் பழக்கத்தால் அவை முக்கியமாகப் பரவுகின்றன. பரவுவதற்கு மற்றொரு முக்கியமான வழி, வயல் அல்லது பகுதிகளுக்கு இடையில் பாதிக்கப்பட்ட தாவரப் பொருட்களின் பயன்பாடு அல்லது அவற்றைக் கொண்டு செல்வது ஆகும். இந்த நோய் பல நாடுகளில் உள்ள மரவள்ளிக்கிழங்கு தொழிலுக்குக் கடுமையான அச்சுறுத்தலாக இருக்கலாம். பைட்டோபிளாஸ்மா நோயின் பரவலானது சில சமயங்களில், மரவள்ளிக்கிழங்கு செடிகளை அவற்றின் வளர்ச்சியின் ஆரம்பத்தில் பாதித்தபோது மொத்த விளைச்சல் இழப்பை விளைவித்தன. நோயுற்ற தாவரப் பொருட்களை நோயில்லாத இடங்களுக்குக் கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்தும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் சில நாடுகளில் உள்ளன, இதனை மேலும் வலுப்படுத்தலாம்.


தடுப்பு முறைகள்

  • சான்றிதழ் பெற்ற ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட நோய் இல்லாத நடவுப் பொருளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்க.
  • உங்கள் பகுதியில் கிடைக்கும் என்றால் எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளை நடவு செய்யவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயலைத் தவறாமல் கண்காணிக்கவும்.
  • வயல், விவசாய கருவிகள் மற்றும் உபகரணங்கள் விஷயத்தில் உயர் சுகாதார தரத்தை பராமரிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட தனிப்பட்ட தாவரங்களை வயலுக்கு அப்பால் எடுத்துச் சென்று எரித்து அல்லது புதைத்து உடனடியாக அழித்து விடவும்.
  • மற்ற வயல்களுக்கு அல்லது பண்ணைகளுக்கு சந்தேகத்திற்கிடமான தொற்று பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம்.
  • வயல்களில் அறிகுறிகள் ஏதேனும் தோன்றினால் அதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க