மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு மொட்டு சிதைவு நோய்

Unknown Pathogen

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இந்த நோயானது தண்டில் பழுப்பு அல்லது சாம்பல் நிற பூசணத்தால் மூடிய திட்டுகளாகத் தோன்றும்.
  • சிதைந்த பகுதிகள் மொட்டுகளை மூடி, அவற்றின் முளைக்கும் திறனைக் குறைத்துவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு

அறிகுறிகள்

பாதிக்கப்படக்கூடிய வகைகளில், மரவள்ளிக்கிழங்கு மொட்டுச் சிதைவு நோயின் முக்கிய அறிகுறி, தண்டின் மேற்பரப்பில் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்திட்டுக்கள் தோன்றுவது. இந்தத் திட்டுகள் தண்டு முழுவதும் பரவி, படிப்படியாக மேல்தோலில் வளரும் பூஞ்சை வெகுஜனங்களுடன் ஒத்திருக்கும். எப்போதாவது அவை இலைகளிலும் தோன்றும். பூஞ்சை தாவர திசுக்களை உண்டு வளருவதால் தாவர திசுக்கள் சிதைந்து போகும். இந்தச் சிதைந்த பகுதிகள் பெரும்பாலும் தண்டுகளில் உள்ள மொட்டுகளை மூடி விடுவதால், மொட்டுகள் இறந்தும் விடுகின்றன, இது தண்டு துண்டுகளின் முளைக்கும் திறனைக் குறைத்து விடுகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த பூஞ்சைக்கு அறியப்பட்ட உயிரியல் கட்டுப்பாட்டு தீர்வுகள் எதுவும் இல்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் தயவுசெய்து எங்களிடம் தொடர்பு கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் இருந்தால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். பொதுவான பூஞ்சைக் கொல்லிகள் தெளிப்பது அரிதாகவே பரிந்துரைக்கப்படுகிறது, எனவே தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நல்ல வயல்வெளி நடைமுறைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

மரவள்ளிக்கிழங்கின் மொட்டுச் சிதைவு நோயானது தண்டுகள் மற்றும் இலைகளின் மேற்பரப்பில் ஏற்படும் பூஞ்சையால் ஏற்படுகிறது. நோயைப் பரப்பும் பொருளின் முக்கிய ஆதாரம் பாதிக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு செடிகள் ஆகும். அறுவடைக்குப் பிறகு நிலத்தில் எச்சங்களாக இருக்கும் தண்டுகளும் இலைகளும் நோயை பரப்ப உதவும். இந்தக் குப்பைகளில் உற்பத்தி செய்யப்படும் பூஞ்சை வித்துக்கள் பின்னர் காற்றின் வாயிலாக ஒரு தாவரத்திலிருந்து இன்னொரு தாவரம் அல்லது மற்ற விளைநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படும். இருப்பினும், நோய் பரவுவதற்கான முக்கியக் காரணி நடவிற்குப் பாதிக்கப்பட்ட தண்டு துண்டுகளைப் பயன்படுத்துவதேயாகும். பாதிக்கப்பட்ட மொட்டுகளுடன் கூடிய இந்தத் தண்டு துண்டு முளைக்காது, மேலும் இதனை வயலில் எளிதாகக் கண்டறியலாம். பூஞ்சைக்கான மாற்றுப் புரவலன்கள் புற்கள், தானியங்கள், வாழைப்பழம் மற்றும் மாம்பழம். இந்த நோய் பொதுவாக ஈரப்பதமான சூழலில் வளரும் மரவள்ளிக்கிழங்கு செடியில் காணப்படுகிறது. குறிப்பாக, அதிக ஈரப்பதம் உள்ள மோசமான வேளாண் சுகாதாரம் உடைய வயல்வெளியில் நோய் ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.


தடுப்பு முறைகள்

  • நடவு செய்ய நோய் இல்லாத தண்டு துண்டுகளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்க (சான்றளிக்கப்பட்ட ஆதாரங்கள்).
  • கிடைக்கப்பெற்றால் எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகளை நடவு செய்யவும்.
  • களை மேலாண்மை மற்றும் தாவரங்களுக்கு இடையில் போதுமான இடைவெளி காற்றோட்டத்தை உறுதி செய்வதற்கு முக்கியமானது, இவ்வாறு செய்வது வயலில் பூஞ்சையின் அளவைக் குறைக்கிறது.
  • கண்காணித்து, நோயுற்ற துண்டுகளை உடனடியாக நீக்கி, அழித்து விடவும் (எரிப்பதன் மூலம் அல்லது புதைப்பதன் மூலம்), அவற்றுக்குப் பதிலாக ஆரோக்கியமானதை பயன்படுத்தவும்.
  • தாவர குப்பைகளை அகற்றி, வயலுக்குத் தூரமாக எடுத்துச் சென்று, அழித்துவிட வேண்டும்.
  • புரவலன் அல்லாத தாவரங்களுடன் பயிர் சுழற்சி செய்வதானது வயலில் பூஞ்சை உயிர்வாழ்வதைத் தவிர்க்கிறது.
  • களப்பணிக்குப் பிறகு உங்கள் கருவிகளைக் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட வயல்களில் இருந்து மற்ற விளைநிலங்களுக்குத் துண்டுகளை எடுத்துச் செல்ல வேண்டாம்.
  • நோய் பரவுவதைத் தவிர்க்க, வேளாண் கருவிகளைப் பயன்படுத்திய பிறகு அதனைப் பொதுவான ப்ளீச் கரைசலில் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க