அரிசி

அரிசித் தண்டு பச்சாடைப் பூச்சி

Tibraca limbativentris

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இளம் பக்கக்கன்று இலைகள் இறந்து போகும், தண்டுகள் சேதமடையும் (இறந்த இதயம்) மற்றும் பூப் பூக்கும் நிலையில் வெள்ளைக் கதிர்கள் (வெள்ளைத் தலைகள்) காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

இவை நீர்ப்பாசன நிலங்கள் மற்றும் உலர்நில பயிர்சாகுபடி ஆகிய இரண்டிலும் காணப்பட்டாலும், இந்த அரிசித் தண்டு பச்சாடைப்பூச்சி உலர்நிலங்களின் பயிர்சாகுபடியிலேயே கடுமையானதாக இருக்கிறது. முதிர்ந்த மற்றும் இளம் பூச்சிகள் இரண்டும் இளம் அரிசி பயிர்களைத் தாக்கி, "இறந்த இதயங்கள்" மற்றும் "வெள்ளைத் தலைகள்" என்றழைக்கப்படும் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. "இறந்த இதயங்கள்" எனப்படுவது இளம் பக்கக்கன்று இலைகள் இறந்து போகுதல் ஆகும், மற்றும் சில சமயங்களில் முழுத் தண்டுகளும் இறந்துவிடக்கூடும். இதே மாதிரியான அறிகுறிகள் டையேட்ரியே இனங்களின் சில அந்துப்பூச்சிகளும் ஏற்படுத்துகின்றன. பூக்கும் நிலைகளில், இந்தப் பூச்சிகள் கதிர்களைத் தாக்கி, "வெள்ளைக் கதிர்கள்" மற்றும் "வெள்ளைத் தலைகள்" என்ற அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன, கதிர்கள் வளருகையில் டி.லிம்பாடிவென்ட்ரிஸ் இலைச் சாறுகளை உறிஞ்சி தானியங்களை நஞ்சாக்குவதால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன. நோய்க் கட்டுப்பாடு இல்லாமல், மற்றும் நோய்த் தாக்கம் அதிகமாக இருந்தால், 80% வரை இழப்பு ஏற்படக்கூடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

டெலெனோமஸின் இனங்கள் இந்த நோய்ப் பூச்சியின் முட்டைகளை ஒட்டுண்ணிகளாகப் பற்றிப் படருகின்றன. இந்த இனங்களை வயல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அறிமுகப்படுத்துகையில், சில சந்தர்ப்பங்களில், 90% வரையிலான ஒட்டுண்ணித்துவம் காணப்படுகிறது. எபிரியா இனங்களின் சில ஈக்களும் பிற இயற்கை இரைப்பிடித்துண்ணிகளுள் அடங்கும். மெட்டார்ஹீலியம் அனிசோபிலியே, பௌவேரியா பாசியானா, பேசிலிமைசஸ் எஸ்பி. கார்டிசெப்ஸ் நுடன்ஸ் ஆகியவற்றின் அடிப்படையிலான தயாரிப்புகள். இவற்றினை நிறுத்தி வைப்பதற்கு கொனிடியாவினை அரிசிப் பயிர்களின் மீது திரவங்களாகத் தெளிக்கலாம். பைபரின் (0.25 முதல் 4.0%) அனைத்து வகை இனங்களின் வாசனை எண்ணெய்க் கரைசல்கள் நோய்ப்பூச்சியின் முட்டைகளைப் பாதிக்கிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருதில் கொள்ளுங்கள். வேறு வழிமுறைகள் ஏதேனும் இல்லையென்றால், பாஸ்பரஸ், பைரித்ராய்ட்ஸ் அல்லது கார்பாமிக் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் டிப்ராக்கா லிம்பாடிவென்டிரிஸ் என்னும் அரிசித் தண்டு பச்சாடைப் பூச்சியால் ஏற்படுகிறது. இந்த நோய் மத்திய மற்றும் தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளது, அரிசியைத் தவிர்த்து, இது சோயாபீன், தக்காளி மற்றும் கோதுமைப் பயிர்களையும் தாக்குகிறது. பொதுவாக, இந்தப் பூச்சிகள் அறுவடைக்கு இடையேயான காலங்களை வயல்களுக்கு வெளியில் கழிக்கும், புதிய நாற்றுகள் நடவு செய்யப்பட்டவுடன் வயல்களுக்குத் திரும்பும். முதிர்ந்த மற்றும் இளம் பூச்சிகள் இரண்டும் தாவரங்களை உண்டு, வெள்ளைத் தலை மற்றும் இறந்த இதயங்கள் என்றழைக்கப்படும் நிலைமையை ஏற்படுத்துகிறது. இந்த அறிகுறிகளானது முறையே தானியங்கள் மற்றும் தண்டுகளைச் சேதப்படுத்தும். உலர்ந்த சூழல் அல்லது குறைந்த ஈரப்பதத்தின் கீழ் வளரும் அரிசி பயிர்களில் இந்தச் சேதங்கள் அதிகமாக இருக்கும். தண்ணீர் இல்லாத சூழல் பூச்சிகளை தாவரங்களின் அடிப்பகுதியிலேயே இருக்கச் செய்துவிடும். பயிர்கள் முதிர்ச்சியடையும்போது, தண்டுகள் கடினமாகுதல் (லிக்னின் மிகுதல்), பூச்சிகள் உண்ணுவதைத் தடுத்து, மற்றும் அவற்றின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்கிறது.


தடுப்பு முறைகள்

  • மண்ணைத் தயார் செய்யும்போது பயிர்க் கழிவுகள் மற்றும் களைகளை அழித்துவிடவும்.
  • கவனிக்கப்படாத வயல்கள் பூச்சிகளுக்கு ஆதரவாக இருப்பதால், உங்கள் வயல்களைச் சுற்றியுள்ள பகுதிகள் நன்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • அடர்த்தியாக நடப்பட்ட தாவரங்கள் நோய்ப் பூச்சியின் இயற்கை எதிரிகளைத் தடுப்பதால், தாவரங்களுக்கு இடையேயான இடைவெளியை அதிகரிக்கவும் (சதுர அடிக்கு 150 செடிகள்).
  • இரைப்பிடித்துண்ணிகளின் இனங்களை பாதிக்காத வகையில் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும்.
  • நீர்ப்பாசன நீரின் தரத்தினை கண்காணிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க