துவரஞ்செடி மற்றும் துவரம் பருப்பு

ரோமபுழுக்கள்

Euproctis sp.

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • மாமரங்களில் ஏற்படும் இலை உதிர்வு அதன் ஒவ்வொரு முடிவிலும் ஒற்றை குடுமியைக் கொண்டிருக்கும், சிவப்பு பழுப்பு ரோம முட்டைப்புழுக்களால் ஏற்படுகின்றன.
  • இளம் முட்டைப்புழுக்கள் வெள்ளை ரோமத்தினைக் கொண்டிருக்கும்.
  • அந்துப்பூச்சி தன் முன் இறக்கையில் அடர்த்தியான பிரகாசமான மஞ்சள் நிறக் கோடுகள் மற்றும் கரும்புள்ளிகளையும் கொண்டிருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்


துவரஞ்செடி மற்றும் துவரம் பருப்பு

அறிகுறிகள்

ரோம கம்பளிப்பூச்சிகளின் ஆரம்ப நிலை முட்டைப்புழு அதன் உடலில் பக்கவாட்டில் இருந்து நீண்ட வெள்ளை நிற ரோமங்கள் வளர்ந்திருக்கும். அவை குழுக்களாக மாமர இலைகள் மற்றும் பிற தாவர இனங்களை உண்டு, அவற்றை இறுதியில் உதிர்ந்து விட செய்கின்றன. முதிர்ந்த கூட்டுப்புழுக்கள் சிவப்பு தலை, அதனை சுற்றி வெள்ளை ரோமம் மற்றும் செம்பழுப்பு நிற உடலை கொண்டிருக்கும். அவை தலையில் ஒரு குடுமியும், ஆசன வாய்ப்பகுதியில் மற்றொரு குடுமியும் கொண்டிருக்கும். இலைகள் அல்லது கிளையின் மீது முட்டைப்புழுக்கள் கூட்டுப்புழுவாக மாறும். அந்துப்பூச்சி பிராகாசமான மஞ்சள் நிறத்திலும், கரும் குறுக்குக் கோடுகளை தனது முன் இறக்கையிலும், இறக்கையின் விளிம்பில் கருப்புப் புள்ளிகளையும் கொண்டுள்ளது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

அடர்ந்த குழுவாக முட்டைப்புழுக்கள் உண்ணுவதால், எரியும் தீவலைகள் அவற்றை அழிப்பதற்கு பயன்படுத்தப்படலாம். வேம்பு (ஆசாதிராட்சா இன்டிகா எல்.) மற்றும் டதூரா (டதூரா ஸ்ட்ராமோனியம் எல்.) சாறுகளினால் ஆன தெளிப்பான்கள் கம்பளிப்பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. பாக்டீரியம் பாசிலஸ் துரிங்ஜென்சிஸ் ஒரு நுண்ணுயிர் பூச்சிக்கொல்லி ஆகும். இது கம்பளிப்பூச்சிகளின் குடலை முடக்கி அவற்றை அழிக்கிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். சைபர்மெத்ரின், டெல்டாமெத்ரின் மற்றும் ஃப்ளுவாலிநட் ஆகியவற்றைக் கொண்ட பூச்சிக்கொல்லி தெளிப்பான்கள் ரோம கம்பளிப்பூச்சிகளை எதிர்த்து திறம்பட செயல்படுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

இலை சிதைவுகள் மற்றும் இலை உதிர்வுகள், ஒத்த பண்புகளை கொண்ட இரண்டு வகை கம்பளிப்பூச்சிகளினால் ஏற்படுகிறது. பெண் பூச்சிகள் இலைகளின் கீழ் பரப்பில், தட்டையான, வட்ட வடிவில் மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக முட்டையிடும். முட்டை கூடுகள் வெளியே தெரிவதில்லை. ஏனென்றால் அவை மஞ்சள் பழுப்பு நிற முடிகளாலும் மற்றும் செதில்களாலும் மூடப்பட்டிருக்கும். 4-10 நாட்கள் கழித்து முட்டைப்புழு வெளியேறும். கூட்டுப்புழு உருவாகும் வரை அவை 13 முதல் 29 நாட்கள் வரை மரத்தின் இலைகளை உண்ணும். 9-25 நாட்களுக்குப் பிறகு, பட்டு கூட்டுப்புழுவில் இருந்து முதிர்ச்சியான அந்துப்பூச்சிகள் வெளியேறும். குளிர்காலத்தில் முட்டைப்புழுக்கள் செயலற்ற நிலையில் இருக்கலாம்.


தடுப்பு முறைகள்

  • முட்டைகள், குஞ்சுகள், அந்துப்பூச்சிகள், முட்டைப்புழுக்கள் இருக்கிறதா என பழத்தோட்டத்தை கண்காணியுங்கள்.
  • அவை சிறிய அளவில் இருந்தால் கம்பளி புழுக்கள், முட்டைப்புழுக்கள் மற்றும் முட்டைகளை சேகரித்து அழிக்கவும்.
  • முதிர்ச்சியான பூச்சிகளை ஒளி பொறிகளைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க