மாங்கனி

மாங்கனி தத்துப்பூச்சி

Idioscopus spp.

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள், மலர்கள் மற்றும் தளிர்கள் பழுப்பு நிறமாகி, வாடிவிடும்.
  • தத்துப்பூச்சிகள் தேன்துளியை உற்பத்தி செய்யும்.
  • தத்துப்பூச்சிகள்அகண்ட, வட்டையான தலை மற்றும் குமிழ்வடிவ கண்களுடன் தங்க நிறம் அல்லது கரும்பழுப்பு நிறத்தில் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மாங்கனி

அறிகுறிகள்

இளம் மற்றும் முதிய மாங்கனி தத்துப்பூச்சி இனங்கள் கிளைகள், மஞ்சரிகள், மென்மையான இலைகள் மற்றும் பழங்களில் உள்ள மரதிசு சாறுகளை உறிஞ்சும். பாதிக்கப்பட்ட தாவர திசு பழுப்பு நிறமாக மாறி, சிதைந்து வறண்டு போகக்கூடும். இளம் பூக்கள் முதிர்ச்சியடையாமல், பழங்கள் மற்றும் அதன் வளர்ச்சியை பாதிக்கிறது. மாமரங்களை உண்ணும்போது, தத்துப்பூச்சிகள் சர்க்கரை திரவங்களை சுரக்க செய்யும், இது பிற பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் மற்றும் கரும்பூசண நோய் வளர்ச்சிக்கு அடித்தளமாய் இருக்கிறது. இலைகளின் பூஞ்சைக் காளான் வளர்ச்சி ஒளிச்சேர்க்கைகளை பாதிக்கிறது, மேலும் மரத்தின் வீரியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் உற்பத்தித்திறனை குறைக்கிறது. மாங்கனி தத்துப்பூச்சிகள், தன் முட்டைகளை மாமரத்தின் இலைகள், பூக்கள் மற்றும் தண்டுகளில் இடும். இது திசுக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 50% வரை பயிர் இழப்புகளை ஏற்படுத்தி, மாம்பழ தத்துப்பூச்சிகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் மாறக்கூடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இரைபிடித்துண்ணி மடாடா பொனினென்சிஸ் மற்றும் கிறைசோபா லாசிபர்டா மற்றும் முட்டை ஒட்டுண்ணி பாலினீமா எஸ்பி. போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு முகவர்கள் தத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடும். மாற்றாக, பாதிக்கப்பட்ட மா மரங்களை பூஞ்சை பௌவரியா பாஸியானா அல்லது மெட்டரிசிசம் அனிசோப்லியா போன்றவற்றை கொண்ட எண்ணெய் சார்ந்த தெளிப்பான்கள் மூலமும் சிகிச்சையளிக்கலாம். வாரம் 2 -3 முறை சிகிச்சை அளிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. வேப்ப எண்ணெய் (3%) அடிப்படையிலான தெளிப்பான்கள் 60% வரை தத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். சைபர்மெத்ரின் (0.4%) கொண்ட தெளிப்பான்களை பயன்படுத்தவும். டைமீதோயேட் கொண்ட பூச்சிக்கொல்லிகளை அடிமரத்தில் தெளிக்கலாம் அல்லது உட்செலுத்தலாம். பூக்க துவங்குவதற்கு முன்பாக, மகரந்தம் மீதான பக்க விளைவுகளை குறைக்க 7 நாட்களுக்கு ஒரு முறை, இரண்டு தெளிப்புகள் பரிந்துரைக்கப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

மாம்பழ இலைதத்துப்பூச்சிகள் பொதுவாக பரந்த, ஆப்பு வடிவ, வட்ட தலை, மற்றும் உருண்டை கண்களை கொண்டிருக்கும். முதிர்ச்சியடைந்த பூச்சிகள் தங்கம் அல்லது கரும்பழுப்பு நிறத்தைக் கொண்டு, சுமார் 4-5 மிமீ நீளத்தினை கொண்டிருக்கும். இளம் பூச்சிகள் மஞ்சள் -பழுப்பு நிறத்தில் சிவப்பு கண்களைக் கொண்டிருக்கும். மாங்கனி பூச்சிகள் அதன் இனத்தை பொறுத்து, பூக்கள், இலை நரம்புகள் மற்றும் இலை பரப்புகளில், தங்கள் முட்டைகளை தனித்தனியாக இடுகின்றன. 100 முதல் 200 முட்டைகள் வரை இடக்கூடும். அவை அதிக ஈரப்பதம் கொண்ட நிழல் சூழலை விரும்புகிறது. முதிர்ச்சியடைந்த தத்துப்பூச்சிகள் நன்கு பறக்கக் கூடியவை மற்றும் குறுகிய தொலைவில் விரைவாக பரவக்கூடியவை. நாற்றங்கால் தாவரங்களை பிற பழத்தோட்டங்கள் அல்லது பகுதிகளுக்கு கொண்டு செல்வதன் மூலமும் பூச்சிகள் பரவக்கூடும். பழைய, புறக்கணிக்கப்பட்ட அல்லது நெருக்கமாக நடப்பட்ட பழத்தோட்டங்கள் அவற்றின் பெருக்கத்திற்கு சாதகமானவை.


தடுப்பு முறைகள்

  • நடவு செய்யும் போது மரங்களுக்கு இடையில் பரந்த இடைவெளியை விடவும்.
  • பழந்தோட்டங்களில் இளம் மற்றும் முதிர்ச்சியடைந்த தத்துப்பூச்சிகள் இருக்கின்றதா என கண்காணிக்கவும்.
  • மாங்கனி தத்துப்பூச்சிகள் குறைவாக பாதிக்கக்கூடிய மர வகைகளை நடவும்.
  • பழங்காலத் தொட்டிகளுக்கு இடையே பாதிக்கப்பட்ட மாம்பழங்களைக் கொண்டு செல்லாதீர்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க