Fertilizer Burn
மற்றவை
5 mins to read
அதிகப்படியான உரப் பயன்பாட்டினால் ஏற்படும் சேதமானது பொதுவாக இலை ஓரங்களை பழுப்பு நிறமாக மாற்றும் அல்லது இலைகளை வாடிப்போகச் செய்யும். உரங்களில் இருக்கும் கரையக்கூடிய உப்புகள் வேர்களின் திசுக்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, அதனை வாடிப்போகச் செய்யும், இலைகளின் ஓரங்களை மஞ்சள் நிறமாக மாற்றும், தாவரங்களின் வளர்ச்சியைக் குன்றச் செய்யும். இலை வெந்தபண் அல்லது வாடுதல் சில உரங்களை நேரடியாக இலைத் தொகுதிகளில் பயன்படுத்துவதினால் ஏற்படுகிறது - குருணை உரங்களைப் பரப்புதல் அல்லது திரவமாகத் தெளிப்பதன் மூலம் பயன்படுத்தலாம். மண்ணின் வகை, நீர்ப்பாசன நடைமுறைகள், உப்பின் அளவு மற்றும் குறிப்பிட்டத் தாவரங்களின் உணர்திறன் போன்ற காரணிகள் சேதங்களின் அளவைப் பாதிக்கலாம்.
உரங்களினால் ஏற்படும் வெந்தபண் நோய்க்கான உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் எதுவும் இல்லை.
உரங்களினால் ஏற்படும் வெந்தபண் நோய்க்கான இரசாயனக் கட்டுப்பாட்டு முறைகள் எதுவும் இல்லை.
அதிகப்படியான உர பயன்பாடுகளால் அறிகுறிகள் ஏற்படுகின்றன. மண் வகை, நீர்ப்பாசன நடைமுறைகள், உப்பின் அளவு மற்றும் குறிப்பிட்ட தாவரங்களின் உணர்திறன் போன்ற காரணிகள் சேதத்தின் அளவு இருக்கும். காய்கறித் தாவரங்களில் ஏற்படும் சேதம் வெப்பமான வறண்ட வானிலையில் மிகவும் கடுமையானதாக இருக்கும். உரத்தில் உள்ள உப்புக்கள் வறட்சியான நிலைமைகளின் கீழ் மண்ணில் மிகவும் அடர்த்தியாக இருக்கும். இது நேரடி வேர்க் காயங்களுக்கு வழிவகுத்து, அது காற்றில் ஆடும் தாவர பாகங்களை வாடச் செய்வதன் மூலம் வெளிப்படுத்தும். மேலும், கரையக்கூடிய உப்புகள் தாவரங்களின் வழியாக நீர் ஓட்டத்தைப் பின்பற்றி, வெப்பமான, உலர்ந்த நாட்களில் நீராவி அல்லது ஆவியாதல் மூலம் விரைவாக ஈரப்பதம் இழக்கக்கூடிய இடங்களில் இலைகளில் தங்கி விடும். குளிர்ந்த, மேகமூட்டமான காலநிலையில், போதுமான மண் ஈரப்பதம் இருக்கும் போது, இலைகளின் ஈரப்பதம் இழப்பு விகிதம் மெதுவாக இருக்கும், இது பல தாவரங்கள் வசந்த காலங்களில் அதிக உப்பு அளவுகளைத் தாக்குப் பிடிக்க அனுமதிக்கிறது, ஆனால் கோடை காலங்களில் இது சாத்தியம் அல்ல.