பருத்தி

மலர் சேஃபர்

Oxycetonia versicolor

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • பூக்கள் மற்றும் மொட்டுகள் சேதமடைந்துவிடும்.
  • இந்த உண்ணும் சேதத்தின் விளைவாக பெரிதும் பாதிக்கப்பட்ட தாவரங்கள் அலங்கோலமாக காணப்படக்கூடும்.


பருத்தி

அறிகுறிகள்

இப்பூச்சியினால் இனப்பெருக்க பாகங்களுக்கு சேதம் ஏற்படுவதால் இது கணிசமான மகசூல் இழப்பை ஏற்படுத்தும். முதிர்ந்த வண்டுகள் பூக்களுக்குள் இருக்கும் மகரந்தம், மகரந்தக்கூடுகள் மற்றும் பிற இனப்பெருக்க பாகங்களை உண்பதன் மூலம் பூக்கள் மற்றும் மொட்டுகளை விழுங்கும். பருத்தியில், இவை மென்மையான காய்களையும் தாக்குகின்றன. இவை கத்தரிக்காய் பயிர்களின் மென்மையான தளிர்கள் மற்றும் அவற்றின் புரவலன்களின் மற்ற மென்மையான திசுக்களை, குறிப்பாக முதிர்ச்சியடையாத கட்டத்தில் மெல்லுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

தற்போது உயிரியல் சிகிச்சைகள் எதுவும் அறியப்படவில்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் இருந்தால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். தற்போது அறியப்பட்ட இரசாயன சிகிச்சைகள் எதுவும் இல்லை.

இது எதனால் ஏற்படுகிறது

சேஃபர் முதிர்ந்த பூச்சிகளால் இந்நோயின் சேதம் ஏற்படுகிறது. மலர் சேஃபர்கள் பகலில் பறக்கும் வண்டுகள் ஆகும், இவை முக்கியமாக மகரந்தங்களை உண்ணுகின்றன. வண்டினப்புழுக்கள் மண்ணில் உள்ள கரிமப் பொருட்களில் உருவாகும், அவற்றுள் சில வேர்களைத் தாக்கும், ஆனால் பயிருக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தாது. முதிர்ந்த பூச்சிகளின் நீளம் 7 - 15 மிமீ மற்றும் அகலம் 5 - 7 மிமீ என இருக்கும். இருபாலின பூச்சிகளும் ஒரே மாதிரியாகவே இருக்கும். பூச்சியின் உடல் பகுதி கச்சிதமாகவும் நீள்வட்ட வடிவிலும் இருக்கும், பொதுவாக ஓரளவு தட்டையாகவும், அற்புதமான வண்ணத்தில், பெரும்பாலும் கருப்பு மற்றும் வெள்ளை கோடுகளுடன் செங்கல் சிவப்பு நிறத்தில் இருக்கும்.


தடுப்பு முறைகள்

  • வண்டு பயிர்களுக்கு இடையில் இடம்பெயரும், மேலும் பல வகையான புரவலன்களைக் கொண்டுள்ளது.
  • பயிர் செய்யும் முறைகளை மாற்றுவது மற்றும் பூச்சிக்கொல்லிகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது பூச்சியை சிறிய நோய்ப்பூச்சியிலிருந்து பெரும் நோய்ப்பூச்சி நிலைக்கு மாற்றலாம்.
  • எதிர்காலத்தில் நோயின் திடீர் பாதிப்பைத் தவிர்க்க, சேஃபர் வண்டு தென்படுகிறதா என கவனமாகக் கண்காணித்து, சரியான நேரத்தில் அது குறித்து அறிக்கை செய்வது அவசியம்.
  • கத்தரிக்காய் பயிரில், தளிர் மற்றும் பழம் துளைப்பான் மேலாண்மைக்காக பூச்சிக்கொல்லிகளை அவ்வப்போது பயன்படுத்துவது வண்டுகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்கும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க