Oxycetonia versicolor
பூச்சி
5 mins to read
இப்பூச்சியினால் இனப்பெருக்க பாகங்களுக்கு சேதம் ஏற்படுவதால் இது கணிசமான மகசூல் இழப்பை ஏற்படுத்தும். முதிர்ந்த வண்டுகள் பூக்களுக்குள் இருக்கும் மகரந்தம், மகரந்தக்கூடுகள் மற்றும் பிற இனப்பெருக்க பாகங்களை உண்பதன் மூலம் பூக்கள் மற்றும் மொட்டுகளை விழுங்கும். பருத்தியில், இவை மென்மையான காய்களையும் தாக்குகின்றன. இவை கத்தரிக்காய் பயிர்களின் மென்மையான தளிர்கள் மற்றும் அவற்றின் புரவலன்களின் மற்ற மென்மையான திசுக்களை, குறிப்பாக முதிர்ச்சியடையாத கட்டத்தில் மெல்லுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
தற்போது உயிரியல் சிகிச்சைகள் எதுவும் அறியப்படவில்லை.
உயிரியல் சிகிச்சைகள் இருந்தால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். தற்போது அறியப்பட்ட இரசாயன சிகிச்சைகள் எதுவும் இல்லை.
சேஃபர் முதிர்ந்த பூச்சிகளால் இந்நோயின் சேதம் ஏற்படுகிறது. மலர் சேஃபர்கள் பகலில் பறக்கும் வண்டுகள் ஆகும், இவை முக்கியமாக மகரந்தங்களை உண்ணுகின்றன. வண்டினப்புழுக்கள் மண்ணில் உள்ள கரிமப் பொருட்களில் உருவாகும், அவற்றுள் சில வேர்களைத் தாக்கும், ஆனால் பயிருக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தாது. முதிர்ந்த பூச்சிகளின் நீளம் 7 - 15 மிமீ மற்றும் அகலம் 5 - 7 மிமீ என இருக்கும். இருபாலின பூச்சிகளும் ஒரே மாதிரியாகவே இருக்கும். பூச்சியின் உடல் பகுதி கச்சிதமாகவும் நீள்வட்ட வடிவிலும் இருக்கும், பொதுவாக ஓரளவு தட்டையாகவும், அற்புதமான வண்ணத்தில், பெரும்பாலும் கருப்பு மற்றும் வெள்ளை கோடுகளுடன் செங்கல் சிவப்பு நிறத்தில் இருக்கும்.