பூசணிக்காய்

சிவப்பு பூசணி வண்டு

Aulacophora foveicollis

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் பெரிய உண்ணும் துளைகள்.
  • வேர்கள் மற்றும் நிலத்தடி தண்டுகளில் ஆழமான துளைகள்.
  • வேர்கள் மற்றும் தண்டுகள் அழுகுதல் மற்றும் வாடிப்போகுதல்.
  • சிவப்பு நீள்வட்ட வண்டுகள் காணப்படுதல்.

இதிலும் கூடக் காணப்படும்


பூசணிக்காய்

அறிகுறிகள்

முதிர்ந்த பூச்சிகள் இலைகள், பூக்கள் மற்றும் பழங்களை மிகவும் விருப்பமாக உண்கின்றன. வண்டுகளானது தாவர திசுக்களில் (நரம்புகளுக்கு இடையில்) பெரிய துளைகளை உருவாக்குகிறது, இதனால் வளர்ச்சியில் மந்தநிலையும் இறுதியில் தாவரத்தின் இறப்பும் ஏற்படுகிறது. பயிர் முதிர்ச்சி அடைவதை தாமதப்படுத்துவதால் இளம் நாற்றுகளுக்கு ஏற்படும் சேதம் பெரும்பாலும் பேரழிவை தரும். பூக்கள் பாதிக்கப்பட்டால், அது பழம் உருவாவதை குறைக்கிறது. இந்த நோய்ப்பூச்சியின் வண்டினப்புழுக்கள் மண்ணில் தங்கி, தாவரங்களின் வேர்கள் மற்றும் நிலத்தடி தண்டினை உண்ணுகின்றன, இது தண்டுகள் மற்றும் வேர்கள் அழுகுவதற்கும் வாடுவதற்கும் வழிவகுக்கிறது. முதிர்ந்த பூச்சிகள் நாற்றுகளை உண்ணுவதால் வளர்ச்சியானது தடைப்படக்கூடும் மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும், இதனால் வயலில் வெற்றுத் திட்டுகள் ஏற்படும். வண்டுகள் சில நேரங்களில் முதிர்ந்த தாவரங்களின் இலைத்திரள்களை ஒன்று திரட்டி, கடித்து, துண்டு துண்டுகளாக்கும். மலர் பாகங்களும் சில சேதங்களால் பாதிக்கப்படக்கூடும், இதனால் பழம் உருவாவது குறைகிறது. இளம் பழங்களின் கீழ்ப்புற பாகங்களை முதிர்ந்த பூச்சிகள் உண்ணுவதால் அவற்றில் காயங்கள் தென்படுகின்றன; இது அழுகல் நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளின் படையெடுப்புக்கு வழிவகுக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

டச்சினிட் இன வகைகள் மற்றும் ரிடுவீட் ரைனோகோரிஸ் ஃபுஸ்சிப்ஸ் உள்ளிட்ட இயற்கை எதிரிகள் இந்த வண்டின் மீது தாக்குதல் நடத்துகின்றன. 4 லிட்டர் தண்ணீரில் அரை கப் மர சாம்பல் மற்றும் அரை கப் சுண்ணாம்பு கலந்து, சில மணி நேரம் ஊற வைக்கவும். உங்கள் வயலில் பயன்படுத்துவதற்கு முன் இந்த கலவையை வடிகட்டி, சில பாதிக்கப்பட்ட தாவரங்களில் சோதித்து பார்க்கவும். இந்த கலவையை உங்கள் பயிரில் இலைத்திரள் தெளிப்பானாக பயன்படுத்தவும். மாற்றாக, நீங்கள் வேம்பு (என்.எஸ்.கே.இ 5%), டெர்ரிஸ் அல்லது பைரெத்ரம் (அதனுடன் சோப்பைச் சேர்த்து) போன்ற தாவரங்களிலிருந்து பெறப்பட்ட தயாரிப்புகளை @ 7-நாள் இடைவெளியில் பயன்படுத்தலாம். டிரைசிடெர்மா டிரைக்கோடெர்மாவை விதை மற்றும் நாற்று சிகிச்சையாகவும், சூடோமோனாஸ் ஃப்ளோரசென்ஸை விதை, நாற்று சிகிச்சை மற்றும் மண் பயன்பாடாகவும் உபயோகிக்கலாம். முதிர்ந்த வண்டுகளை கவர்ந்து அழிக்க, வலுவான பூச்சிக்கொல்லி தெளிப்பு சிகிச்சையளிக்கப்பட்ட பொறி பயிர்களைப் பயன்படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். நாற்றுப்பண்ணையில் 10 தாவரங்களுக்கு ஒரு முதிர்ந்த பூச்சி கண்டறியப்படும்போது, டெல்டாமெத்ரின் @ 250 மில்லி /ஏக்கர் என்பவற்றை பயன்படுத்தலாம். செயற்கை பைரெத்ராய்டுகள் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அதே நேரத்தில் இது இயற்கை எதிரிகளுக்கும் தீங்கு விளைவிக்கும். வலுவான பூச்சிக்கொல்லி தெளிப்புடன் சிகிச்சையளிக்கப்பட்ட பொறி பயிர்களைப் பயன்படுத்துவது முதிர்ந்த வண்டுகளை ஈர்த்து, அழித்துவிடும். பூச்சி கண்டறியப்பட்டவுடன் ஃபெனிட்ரோதியன் என்பவற்றை தெளிக்கவும், 15 நாட்கள் இடைவெளியில் இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும்.

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்களானது அவுலகோபோரா ஃபோவிகோலிஸ் என்பவற்றின் வண்டினப்புழு மற்றும் முதிர்ந்த வண்டுகளால் ஏற்படுகிறது, இது இலைகள், பூக்கள் மற்றும் பழங்களை உண்ணுகின்றன. முழுவதும் வளர்ச்சி அடைந்த முட்டைப்புழுக்கள் பொதுவாக பாலாடை போன்ற வெண்ணிறத்திலும் மனித விரல் நகத்தின் அளவிலும் காணப்படும். முட்டைகள் பொதுவாக நீள்வட்ட வடிவில், மஞ்சள் நிறத்தில் இருக்கும், தாவரத்தின் அடிப்பகுதிக்கு அருகில் மனித விரலின் ஆழத்தில் ஈரமான மண்ணில் தனித்தனியாக அல்லது பத்து பத்து கொத்துக்களாக முட்டைகள் இடப்படுகின்றன. முதிர்ந்த பூச்சிகள் ஆரஞ்சு சிவப்பு நிறத்தில், வீட்டு ஈக்களின் அதே அளவில் இருக்கும். முட்டைப்புழுக்கள் 1 அல்லது 2 வாரங்களுக்குப் பிறகு குஞ்சு பொரிக்கின்றன, மேலும் மண்ணுக்குள் கூட்டுப்புழுக்களாக செல்வதற்கு முன் இது தாவரத்தையும் அதன் வேர்களையும் தாக்குகின்றன. 7 முதல் 17 நாட்கள் வரை மண்ணால் ஆன புழுக்கூட்டில் கூட்டுப்புழுவாவது நடைபெறும். வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்போது, கூட்டுப்புழுவாவதற்கான உகந்த சுற்றுச்சூழல் நிலைமைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.


தடுப்பு முறைகள்

  • வேகமாக வளரும் வகைகள் மற்றும் தாவர பொறி பயிர்களைப் பயன்படுத்தவும்.
  • ஏற்கனவே பாதிக்கப்பட்டவைகளுக்கு பக்கத்தில் புதிய பயிர்களை நடவு செய்வதைத் தவிர்க்கவும்.
  • பெரிதும் பாதிக்கப்பட்ட தாவரங்களை ஈடுசெய்ய அல்லது மாற்ற கூடுதல் விதைகளை நடவு செய்யவும்.
  • வண்டின் சேதத்திலிருந்து பாதுகாக்க நாற்றுகளை பாலிதீன் பைகளை கொண்டு மூடி வைக்கவும்.
  • போதுமான தாவர ஊட்டச்சத்துக்கள், உரங்கள் மற்றும் வரப்பு பாசனத்தைப் பயன்படுத்தி நீர்ப்பாசனம் போன்ற ஆரோக்கியமான தாவர வளர்ச்சிக்கு நல்ல நிலைமைகளை உறுதி செய்யுங்கள்.
  • உண்ணும் சேதங்கள் ஏதேனும் தென்படுகிறதா என வாரத்திற்கு ஒரு முறை வயல்களை கண்காணிக்கவும்; மேலும் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தவும்.
  • உங்கள் வயலில் மாற்று புரவலன் களைகள் இல்லாமல் பராமரிக்கவும்.
  • குப்பைகளை சேகரித்து எரிக்கவும் அல்லது புதைக்கவும்.
  • காலையில் வண்டுகள் மந்தமான நிலையில் இருக்கும்போது அவற்றை கைகளால் பிடித்து அப்புறப்படுத்தவும்.
  • உறக்கநிலையை தொந்தரவு செய்ய மற்றும் அவற்றை வெளிப்படுத்த கோடையில் நிலத்தை ஆழமாக உழவும்.
  • இயற்கையான இரைப்பிடித்துண்ணிகள் மற்றும் ஒட்டுண்ணிகளை பாதுகாக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க