பருத்தி

மைரிட் வண்டுகள்

Miridae

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • மைரிட் வண்டுகள் முனை மொட்டுகள், மலர்கள் மற்றும் பழங்களின் சாறுகளை உறிஞ்சும்.
  • பழங்களின் மீது கருப்புப் புள்ளிகள் காணப்படும் மற்றும் உட்புற விதைகள் சுருங்கியும், கறைபடிந்தும் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்கள் வலிமையிழந்து, குட்டையாகவும், கிளை வளர்ச்சியுடனும் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பருத்தி

அறிகுறிகள்

மைரிட் வண்டுகள் முனை மொட்டுகள், மலர்கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றின் சாறுகளை உறிஞ்சுவதன் மூலம் சேதத்தை ஏற்படுத்துகின்றன. பழம் உருவாகுவதற்கு முன்பு நோய்பாதிப்பு ஏற்பட்டால், தாவரங்களானது முனை மொட்டுகளை இழந்து, குன்றிய, கிளைகளை உடைய வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இளம் பூக்கள் மீதான உண்ணும் சேதங்களானது 3-4 நாட்களுக்குள் உலர்ந்து, வெடிக்கச்செய்யக்கூடும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மலர்கள் குறிப்பாக மீள முடியாத சேதத்திற்கு ஆளாகின்றன. அவ்வாறு மலர்கள் வளர்ச்சி அடைந்தாலும், அவை பெரும்பாலும் சுருங்கிய, சிதைந்த இதழ்களையும், கருப்பு நிற மகரந்தத்தாள் முடிகளையும் கொண்டிருக்கும். காய்களின் மீதான உண்ணும் சேதங்களானது வெளிப்புறம் கருப்பு நிறப் புள்ளிகளையும், உட்புறம் சுருங்கிய, கறை படிந்த விதைகளையும் கொண்டிருக்கும். கடுமையான நோய்த்தொற்று ஏற்பட்டால், விளைச்சல் மற்றும் தரம் கடுமையாக பாதிக்கப்படலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பாதிக்கப்பட்ட வயலில் மைரிட் வண்டுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இயற்கை இரைப்பிடித்துண்ணிகள் பயன்படுத்தப்படுகிறது. டாம்செல் வண்டுகள், பெரிய கண் வண்டுகள், கொலையாளி வண்டுகள், எறும்புகள் மற்றும் சில சிலந்தி இனங்கள் ஆகியவை மைரிட் வண்டுகளை உண்ணுவதாக அறியப்படுகிறது. மேலும், நீர்த்த வேப்ப எண்ணெய் மற்றும் பெளவேரியா பாசியானா போன்றவற்றைக் கொண்ட உயிரியல் பூச்சிக்கொல்லிகள் இந்த நோய் பூச்சியின் எண்ணிக்கையைக் குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நோய்ப்பூச்சியைக் கண்டறிந்த உடனேயே உயிரியல் சிகிச்சையைப் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். டைமெத்தோயேட், இண்டோக்சாகார்ப் அல்லது ஃபிப்ரோனில் ஆகியவற்றைக் கொண்ட பூச்சிக்கொல்லிகள் மைரிட் வண்டுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது மற்றும் இவை கடுமையான பாதிப்புகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்களானது, பயிரைப் பொறுத்து மைரிட் வண்டுகளின் பல்வேறு இனங்களால் ஏற்படுகிறது. பருத்தியில், குழி வண்டுகள் என்றும் அழைக்கப்படும் கேம்பிலோம்மா லிவிடா (மத்திய மற்றும் வட இந்தியா) மற்றும் கிரியோன்டியேட்ஸ் எஸ்பிபி என்பவற்றின் பல்வேறு இனங்கள், குறிப்பாக, சி.பிசெராடென்ஸ் (தென் இந்தியா) போன்றவை இந்த சேதங்களை ஏற்படுத்தும் குற்றவாளிகள். முதிர்ந்த பூச்சிகள் நீளுருண்டை வடிவில், தட்டையான உடலுடன் பச்சை கலந்த மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தில் காணப்படும். சிறப்பியல்பு கொண்ட முக்கோணம் பின்புறத்தின் மையப் பகுதியைக் கோடிட்டுக் காட்டுகிறது.முட்டைகள் இலைக் காம்புகளுக்குள் ஒற்றையாக இடப்பட்டு, 4-5 நாட்களுக்குப் பிறகு அதிலிருந்து முட்டைப்புழுக்கள் வெளியாகும். இளம் பூச்சிகளானது அதன் வடிவில் மற்றும் அளவு காரணமாக, இலைப்பேன்களுடன் குழப்பிக்கொள்ளக்கூடும். இருப்பினும், மைரிட் வண்டுகள் இலைப்பேன்களை விட மிக வேகமாக நகரும். சி லிவிடாவுக்கு ஏற்ற வெப்பநிலை சுமார் 30-32 ° செல்சியஸ் ஆகும். வெப்பநிலைகளானது அவற்றின் உகந்த நிலையில் இருந்து மாறும்போது, இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி மெதுவாக நடைபெறும். குறிப்பாக 35 டிகிரி செல்சியஸிற்கும் மேலான அதிக வெப்பநிலை மற்றும் கடுமையான மழைப்பொழிவு வண்டுகளின் எண்ணிக்கையைக் கடுமையாகக் குறைத்துவிடும்.


தடுப்பு முறைகள்

  • நடவு செய்யும்போது பருத்தித் தாவரங்களுக்கு இடையே நெருக்கமான இடைவெளியைத் தவிர்க்கவும்.
  • இந்த வண்டுகளைப் பயிர்களில் இருந்து கவர்ந்து இழுக்க பருத்தி வயல்களைச் சுற்றிலும் குதிரை மசால் போன்ற மாற்றுப் புரவலன் தாவரங்களை நடவு செய்யவும்.
  • நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என உங்கள் தாவரங்களை அடிக்கடி கண்காணிக்கவும்.
  • நன்மை பயக்கும் பூச்சிகளைப் பாதிக்காத வகையில் பூச்சிக்கொல்லி உபயோகத்தைக் கட்டுப்படுத்தவும் மற்றும் பரந்தளவிலான பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதைத் தவிர்க்கவும்.
  • பூச்சி மேலும் பரவுவதைத் தவிர்ப்பதற்காகத் தாவரக் கழிவுகள் மற்றும் பாதிக்கப்பட்டத் தாவரங்களை நீக்கி எரிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க