மற்றவை

கரையான்கள்

Termitidae

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இளம் அல்லது முதிர்ந்த தாவரங்கள் வாடிப்போகுதல்; பெரும்பாலும் கீழே சாய்ந்துவிடுதல்.
  • கரையான்கள் மற்றும் பொந்துகள் வேர்களைச் சுற்றி மற்றும் வேர்களில் காணப்படுதல்.
  • வேர்கள் மற்றும் தண்டுகளின் அடிப்பகுதி வெறுமையாகுதல்.

இதிலும் கூடக் காணப்படும்


மற்றவை

அறிகுறிகள்

கரையான்கள் நாற்றுகள் முதல் முதிர்ச்சியடைந்த தாவரங்கள் வரை, தாவரங்களின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் தாக்கும். இவை வேர்களைச் சேதப்படுத்தும், இது தாவரங்களின் மேல்பகுதி வாடிப்போகுதல் மூலம் முதலில் வெளிப்படும். கரையான் இருப்பை உறுதிப்படுத்த, பாதிக்கப்பட்டத் தாவரங்களைப் பிடுங்கி, உயிருள்ள கரையான்கள் அல்லது பொந்துகள் ஏதேனும் தென்படுகிறதா என வேர்கள் மற்றும் தண்டுகளின் அடிப்பகுதியைக் கண்காணிப்பது அவசியமாகும். தாவரங்களின் வேர்கள் மற்றும் தண்டுகள் முற்றிலும் குடையப்பட்டு, மண் கழிவுகளால் நிரப்பப்படும். சில தாவரங்கள் வலுவான காற்றின் போது சாய்ந்துவிடக்கூடும், இவை பெரும்பாலும் மண்ணால் மூடப்பட்டிருக்கும், அவற்றுக்கு அடியில் கரையான்கள் காணப்படும். அதிகாலையில் அல்லது அந்தி மாலையில் தாவரங்களை முக்கியமாகக் கண்காணிக்க வேண்டும், ஏனெனில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது, கரையான்கள் மண்ணின் அடிப்பகுதிக்கு சென்று மறைந்துகொள்ளும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கரையான்களைத் தாக்கும் நூற்புழுக்கள் அடிப்படையிலான தயாரிப்புகள் இந்த நோய்ப்பூச்சிக்கு எதிராகத் திறன்மிக்க வகையில் செயல்படுகின்றன. பூஞ்சை பெளவேரியா பாசியானா அல்லது மெட்டார்ஹீலியம் அடிப்படையிலான சில இனங்களைக் கரையான் பொந்துக்குள் பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும். பூஞ்சை வித்துக்களும் எதிர்ப்பிகளாக செயல்படக்கூடும். வேப்பங்கொட்டைச் சாறுகளை மரங்களின் மீதும், வயல்களில் உள்ள பயிர்களின் மீதும் தெளித்தல், கரையான்களுக்கு எதிரான சிறந்த பலனைக் கொடுக்கிறது. கரையான்களை எதிர்க்க, அவற்றின் கூடுகளில் மரச் சாம்பல் அல்லது வேப்ப இலை அல்லது விதைகளின் தூள்களைக் கொட்டுவதும் இன்னொரு தீர்வாகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். குளோரைரிபோஸ், டெல்டாமெத்ரின் அல்லது இமிடாக்ளோபிரிட் அடிப்படையிலான தயாரிப்புகளைக் கரைசல்களாக கரையான் பொந்துகளில் செலுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

கரையான்கள் பல தொழிலாளர்கள், படைவீரர்கள் மற்றும் இனப்பெருக்க வடிவங்களைக் கொண்ட பெரிய குடியேற்றங்களில் வாழ்கின்றன. அவற்றின் கூடுகள் சில நேரங்களில் மிக விரிவாக இருக்கும். சில கரையான்கள் ஈரமான இறந்த மரத்துண்டுகளில் கூடுகட்டும், சில நிலப்பகுதிக்கு அடியில் கூடுகட்டும். நிலப்பகுதிக்கு அடியில் உள்ள பொந்துகள் மூலம் பாதுக்காப்பான கூட்டில் இருந்து இவை வெளியேறி, தாவர வேர்களையும் மற்றும் வயல்களில் உள்ள பிற பொருள்களையும் உண்ணுகின்றன. வேறு எந்த உணவும் கிடைக்கவில்லை என்றால், அவை தாவரங்களைத் தாக்கக்கூடும், எனவே மண்ணில் அதிகமான கரிமப் பொருட்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். இனப்பெருக்கம் செய்யும் கரையான்கள் இறக்கைகளைக் கொண்டிருக்கும். பொதுவாக அடர் நிறத்தில், நன்கு வளர்ச்சி அடைந்த கண்களுடன், இறக்கைகளை உடைய எண்ணற்ற ஆண் மற்றும் பெண் கரையான்கள் திரளாக மொய்ப்பதற்காக உற்பத்தி செய்யப்படுகின்றன. கன மழை தொடங்கிய பிறகு, பெரும்பாலும் அந்தி வேளையில் திரள் மொய்ப்பு நிகழ்கிறது. அவை பறந்த பிறகு, அவை இறக்கைகளை இழந்து, இனப்பெருக்கம் செய்து, புதிய குடியேற்றத்தைக் கண்டுபிடிப்பதற்காக மண்ணில் உள்ள துளைகளையும், மரத்தில் உள்ள வெடிப்புகளையும் குடையும்.


தடுப்பு முறைகள்

  • நடவு செய்யும்போது, சிறிய கழிவுகள் மற்றும் கரிம உள்ளடக்கங்களை உடைய வெறுமையான, உலர்ந்த மணலைத் தவிர்க்கவும்.
  • பயிர்களைக் காலை அல்லது பிற்பகலின் முடிவில் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • பாதிக்கப்பட்டத் தாவரங்கள் அல்லது தாவர பாகங்களை அகற்றி, அழித்து விடவும்.
  • ஆரோக்கியமானத் தாவர வளர்ச்சிக்கான சூழலை மேம்படுத்தவும்.
  • நீர் அழுத்தம் மற்றும் தாவரங்களுக்கு தேவையற்ற காயங்கள் ஏற்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • முடிந்தவரை சீக்கிரம் அறுவடை செய்துவிடவும், ஏனெனில் கரையான்கள் முதிர்ச்சியடைந்த பிறகு, வயலில் எஞ்சியுள்ள பயிர்களை மட்டுமே பெரும்பாலும் தாக்கும்.
  • அறுவடைக்குப் பிறகு, தாவரக் கழிவுகள் மற்றும் பிற கழிவுகளை அகற்றி விடவும்.
  • கரையான் கூடுகள் மற்றும் பொந்துகளை அழித்து, அவற்றை எறும்புகள், பறவைகள், கோழி, போன்றவற்றுக்கு வெளிப்படுத்த நிலத்தை உழுதல் வேண்டும்.
  • பயிர்ச் சுழற்சியை வயலில் மேற்கொள்ளவும் அல்லது வயல்களில் ஊடுபயிர் செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க