வெண்டக்காய்

சிவப்பு பருத்தி வண்டு

Dysdercus cingulatus

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • பருத்திக் காய்களில் நோய்ப்பூச்சிகளின் உண்ணும் சேதங்கள், முதிர்ச்சியடைவதற்கு முன்னரே காய்கள் வெடித்து, உதிர்தல் மற்றும் பருத்தி இலைகளில் கறைகள் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும்.
  • திசுக்களில் குடியேறி இருக்கும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் சேதங்களும் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


வெண்டக்காய்

அறிகுறிகள்

முதிர்ந்த மற்றும் இளம் பூச்சிகள் இரண்டும் பூ மொட்டுகளையும், மூடியிருக்கும் அல்லது ஓரளவு திறந்திருக்கும் பருத்திக் காய்களையும் உண்ணும். இவை இலைகளின் வழியாக துளையிட்டு, விதைகளை உண்ணும். பாதிக்கப்பட்ட திசுக்களில் நுண்ணுயிரிகள் குடியேறி, காய் அழுகல் மற்றும் காய்களில் நிறமாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தும். காய் உருக்குலைந்து போகுதல், முதிர்ச்சி அடைவதற்கு முன்பே வெடித்தல் மற்றும் சீக்கிரமே உதிர்ந்து விடுதல் போன்றவை பொதுவாகக் காணப்படும். குறைவான எண்ணெய் உள்ளடக்கங்களுடன் சிறிய விதைகள், கறை படிந்த பருத்தி இழைகள் மற்றும் குறைவான முளைப்பு விகிதம் உள்ளிட்டவையும் பிற அறிகுறிகளாகும். இந்த விதைகள் விதைப்பதற்கு ஏதுவானது அல்ல. டி.சிங்குலேட்டஸ் ஒரு தாவரத்தை மட்டும் தாக்குவதில்லை, பிற இளம் காய்களுக்கும் பரவும். அதிகப்படியான தொற்றுநோயானது, கறை படிந்த பருத்தி இழைகளின் காரணமாக தரத்தில் கடுமையான இழப்பை ஏற்படுத்தும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நீர் கலந்த வேப்ப எண்ணையை இலைத்திரள் வழியாகத் தெளிப்பது இந்த நோய்ப்பூச்சிக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். குளோர்பைரிபோஸ், எஸ்பென்வலேரேட் அல்லது இண்டோக்ஸாகார்ப் ஆகியவற்றைக் கொண்ட பூச்சிக்கொல்லிக் கலவையை இலைத்திரள் மூலம் பயன்படுத்துவது இளஞ்சிவப்பு காய்ப் புழுவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது, மேலும் இது சிவப்புப் பருத்தி வண்டின் எண்ணிக்கையையும் குறைக்கிறது. இருப்பினும், பருவத்தின் பிற்பகுதியில் தாமதமாக நோய்த்தொற்று ஏற்பட்டால், அறுவடையின்போது பூச்சியின் கழிவுகள் காய்களில் இருக்கும் என்பதால் இரசாயன சிகிச்சை பெரும்பாலும் செய்யத்தக்கது இல்லை.

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்களானது டிஸ்டெர்கஸ் சிங்குலேட்டஸ் என்பவற்றின் இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகளால் ஏற்படுகிறது. முதிர்ந்த பூச்சிகள் 12-13 மிமீ நீளம் வரை வளரும் மற்றும் தனித்துவமான சிவப்பு கலந்த ஆரஞ்சு நிறத்தைக் கொண்டிருக்கும். அதன் தலைப்பகுதி வெள்ளைநிறப் பட்டையுடன் சிவப்பு நிறத்திலும், வயிற்றுப்பகுதி கருப்பு நிறத்திலும், அதன் முன் இறக்கைகள் இரண்டு கருப்புப் புள்ளிகளையும் கொண்டிருக்கும். ஆண் பூச்சிகள் பெண் பூச்சியை விட சிறியதாக இருக்கும். பெண் பூச்சிகள் ஒரே தடவையில் 130 பிரகாசமான மஞ்சள் நிற முட்டைகளை புரவலன் தாவரங்களுக்கு அருகே உள்ள மண்ணில் இடும். 7-8 நாட்கள் அடைகாக்கும் காலம் நிறைவடைந்தவுடன், இளம் முட்டைப்புழுக்கள் வெளியே வந்து, பருத்தித் தாவரங்களை உண்ண ஆரம்பிக்கும். அவையும் சிவப்பு நிறத்தில், வயிற்றுப்பகுதியில் 3 கருப்பு நிறப் புள்ளிகளையும், பின்புறத்தில் 3 ஜோடி வெண் புள்ளிகளையும் கொண்டிருக்கும். காலநிலைக்கு ஏற்ப, வளர்ச்சிக் காலமானது மொத்தமாக 50-90 நாட்கள் வரை நீடிக்கும். நோய்த்தொற்றானது, முதல் பருத்திக் காய் வெடிக்கும்போது, பருவக்காலத்தின் இறுதியில் ஏற்படும். வெண்டைக்காய், பருத்தி மற்றும் நார்த்தை உள்ளிட்டவை மாற்றுப் புரவலன்களுள் அடங்கும்.


தடுப்பு முறைகள்

  • நோய்ப்பூச்சிக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • பூச்சிகளின் எண்ணிக்கைக் குறைவாக இருந்தால், அவற்றைக் கையால் எடுத்து அகற்றி விடவும்.
  • பாம்பேக்ஸ் மரம் (பட்டு பருத்தி மரம்), மால்வேசியே குடும்பத்தின் பிற காட்டுச் செடிகள் (ஹைபிஸ்கஸ் அஸ்பெர், எச்.
  • கன்னாபினஸ் மற்றும் எச்.
  • டிரையோனஸ்) போன்ற மாற்றுப் புரவலன்களை அகற்றவும்.
  • வெண்டைக்காய் போன்ற கவர்ச்சித் தாவரங்களை விதைத்து, அங்கே இந்த நோய்ப்பூச்சிகளைப் பிடிக்கவும்.
  • வயல்களில் பூச்சிகள் கூடும் பல இடங்களில் ஈரமான கவர்ச்சி விதைகளை தொங்க விடவும்.
  • பூச்சியிடத்தில் எதிர்ப்பு சக்தி உருவாகுவதைத் தடுக்க, பூச்சிக்கொல்லியின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும்.
  • பருத்திக் காய்கள் வெடித்ததும், அவற்றைப் பறித்துவிடவும்.
  • பருத்திக் காய்கள் பறிக்கப்பட்டவுடன் அந்த பருத்தித் தாவரங்களை அப்புறப்படுத்தி, அழித்துவிடவும்.
  • வெயிலுக்கும், இரைப்பிடித்துண்ணிக்கும் புதைந்த முட்டைகளை வெளிப்படுத்த, அறுவடைக்குப்பின் மண்ணை ஆழமாக உழவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க