ஆலிவ்

குர்குலியோ அந்துப்பூச்சி

Otiorhynchus cribricollis

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • அந்துப்பூச்சிகள் கந்தலான பூக்கள், மேலும் பூக்கள் மற்றும் பழங்களில் துளைகளை ஏற்படுத்துவதன் மூலம் உண்ணும் சேதங்களை உருவாக்குகிறது.
  • முதிர்ந்த பூச்சிகள் மொட்டுகளுக்குள் இருக்கும் மலர் பாகங்களை சேதப்படுத்துகிறது.

இதிலும் கூடக் காணப்படும்

5 பயிர்கள்

ஆலிவ்

அறிகுறிகள்

முதிர்ந்த குர்குலியோ அந்துப்பூச்சிகள் இலைத்திரள்களை பாதித்து, இலை ஓரங்களை மெண்டு, தனித்துவமான ரம்பம் போன்ற தோற்றத்தை விளிம்பில் விட்டு செல்கின்றன. இவை மென்மையான தளிர்களையும் உண்ணும், எப்போதாவது அவற்றைச் சுற்றியுள்ள மரப்பட்டைகள் வளையங்களையும் உண்ணும். இது நீர் மற்றும் ஊட்டச்சத்து போக்குவரத்தை பாதிக்கிறது, இது கிளை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். சில பயிர்களில், அந்துப்பூச்சிகளும் அவற்றின் மூக்கால் பூக்களுக்குள் நுழைந்து இனப்பெருக்க கட்டமைப்புகளை அழிக்கக்கூடும். அதிகப்படியான பூச்சிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும், குறிப்பாக இளம் மரங்களுக்கு ஏற்படுத்தும். முன்பு மேய்ச்சலுக்கு உட்பட்ட ஒரு பகுதியிலிருந்து வெளிவரும் முதிர்ந்த பூச்சிகள் புதிதாக நடப்பட்ட திராட்சைத் தோட்டங்கள் அல்லது பழத்தோட்டங்களையும் தாக்கக்கூடும். திராட்சை அல்லது பழங்கள் பொதுவாக சேதமடைவதில்லை. முட்டைப்புழுக்கள் பயிர்களின் வேர்களை உண்கின்றன, ஆனால் இவை ஓரளவு சேதங்களைத்தான் ஏற்படுத்துகின்றன.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இன்றுவரை இந்த பூச்சிக்கு எதிராக உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் எங்களுக்குத் தெரிவிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். செயற்கை பைரெத்ராய்டுகளுடனான சிகிச்சைகள் குர்குலியோ அந்துப்பூச்சியைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆல்பா-சைபர்மெத்ரின் கொண்ட தயாரிப்புகளின் இலைத்திரள் தெளிப்புகள் பழங்கள் அல்லது திராட்சைப்பழங்கள் இல்லாத மரங்களிலும் பயன்படுத்தப்படலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

குர்குலியோ அந்துப்பூச்சி (ஓடியோர்ஹைஞ்சஸ் கிரிப்ரிகோலிஸ்) மூலம் சேதம் ஏற்படுகிறது. முதிர்ந்த பூச்சிகள் இரவில் உண்ணும் பழக்கம் உடையவை. பகல் நேரத்தில், இவை மரப்பட்டைக்கு அடியில், கிளைகளின் இடுக்கில், பழம் மற்றும் இலைகளுக்கு இடையில் அல்லது மண்ணில் உள்ள பொந்துகளில் மறைந்துகொள்ளும். மரங்களில் அல்லது மண்ணில் தளர்வான கரிமப் பொருட்களில் முட்டைகள் இடப்படுகின்றன. முட்டையிலிருந்து குஞ்சு வெளியானபிறகு, இளம் முட்டைப்புழுக்கள் மண்ணை குடைந்து, தாவரத்தின் சல்லிவேர்களை உண்ணும். இவை இலையுதிர்காலத்தில் கூட்டுப்புழுவாகின்றன. கூட்டுப்புழு நிலையின் நீளம் வானிலை நிலையைப் பொறுத்தது, ஆனால் இது பொதுவாக மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும். மிதமான வெப்பநிலை குர்குலியோ அந்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சிக்கு உகந்ததாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைமுறையை மட்டுமே கொண்டுள்ளது, ஆனால் கோடையின் வெப்பத்திற்குப் பிறகு அவை மீண்டும் செயல்படத்தொடங்குவது இரண்டாவது தலைமுறை உள்ளது என்ற தோற்றத்தைத் தரக்கூடும். பெரும்பாலான முதிர்ந்த அந்துப்பூச்சிகள் பறக்காது, ஆனால் சில குறுகிய தூரம் பறக்கக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • சேதமடைந்த தண்டுகள் காணப்பட்டால், வசந்த காலத்தின் துவக்கத்தில் குளிர்காலத்தை செயலற்ற நிலையில் கழிக்கும் முதிர்ந்த பூச்சிகள் ஏதேனும் தென்படுகிறதா என கண்காணிக்கவும்.
  • களைகளை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருங்கள், ஏனெனில் இவை மாற்று புரவலனாக செயல்படக்கூடும்.
  • முதிர்ந்த அந்துப்பூச்சிகள் மரப்பட்டையில் ஏற முடியாதபடி ஒட்டும் பொருட்களின் வளையங்களை கொண்டு மரங்களை பாதுகாக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க