பிஸ்தா பருப்பு

பிஸ்தா வண்டு

Chaetoptelius vestitus

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • மொட்டுகள் மற்றும் சிறுகிளைகளுக்கு ஏற்படும் சேதமானது, தாவரம் வாடிப்போய் பட்டுப்போவதற்கு வழிவகுக்கும்.
  • கிளைகள் மற்றும் அடிமரங்களில் இனப்பெருக்கம் செய்வதற்கான குடைவுகள் தென்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
பிஸ்தா பருப்பு

பிஸ்தா பருப்பு

அறிகுறிகள்

முதிர்ந்த வண்டுகள் மொட்டுகளை குடைந்து துளையிட்டு, சாப்பிட்டு, அவற்றை அழித்துவிடும், பழங்களின் உருவாக்கத்தை பாழாக்கிவிடும். தண்டுகள் அல்லது கிளைகளில் உள்ள குடைவுகள், சாற்றின் இயல்பான சுழற்சியை சீர்குலைத்து, மேலே உள்ள கிளைகளுக்கு தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சென்றடைவதைத் தடுக்கிறது. பெரிய வண்டுகள் அடர்-பழுப்பு நிறத்தில், சுமார் 2.5-3.5 மிமீ நீளம் இருக்கும், அடர் நிற சிறகு உறைகள் கடினமான முடிகள் மூலம் இடையீடு செய்தவாறு இருக்கும். முட்டைப்புழுக்கள் பெரும்பாலும் பழுப்பு நிற தலையுடன் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதனை இலாபமீட்டும் பூச்சியென்று சொல்லலாம், ஏனெனில் இது முக்கியமாக பலவீனமான மரங்களையும் காய்ந்துபோன கிளைகளையும் தாக்குகிறது. குளிர்ந்த பருவத்தில், வெப்பநிலை +5 டிகிரி செல்சியஸிற்கு குறைவாக இருக்கும் வரை பட்டை வண்டுகள் சாப்பிடுவதை நிறுத்தி விடுகின்றன. சரியான சூழ்நிலையில், இது பிஸ்தா மரங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பட்டை வண்டுகளைக் கட்டுப்படுத்த, வீரியமுள்ள, ஆரோக்கியமான மரங்களை வைத்திருப்பதையும் அண்டைப் பண்ணைகளுடன் சேர்ந்து தொடர்ச்சியான தடுப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதையும் உறுதி செய்வது முக்கியம். பல கொள்ளையடிக்கும் வண்டுகள் மற்றும் பூச்சிகளைப் போலவே சில ஒட்டுண்ணிக் குளவிகள் இந்த வண்டுகளைத் தாக்குகின்றன. இவற்றின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டு விளைவுகள் பூச்சி எண்ணிக்கையில் சுமார் 10% இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைத்தால், தடுப்பு நடவடிக்கைகளை அவற்றுடன் சேர்த்து செய்யும் அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். பூச்சிக்கொல்லிகளின் ஊடுருவலை எளிதாக்கும் கனிம எண்ணெய்களுடன் சேர்த்து செய்தாலும், எளிய இரசாயனக் கட்டுப்பாட்டுக்கு இந்தப் பூச்சி கட்டுப்படாது. எனவே, இதன் பரவலைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் அவசியம். பூச்சிகளானது பாதிக்கப்பட்ட தோட்டங்களில் இருந்து ஆரோக்கியமானவைகளுக்கு இடம்பெயர முடியாதபடி, ஒரு பிற்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் இதனைப் பயன்படுத்த வேண்டும். பட்டை வண்டு முக்கியமாக வலுவிழந்த மரங்களை தாக்குகிறது, எனவே மரங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம் (உரமிடுதல், நீர்ப்பாசனம், சீர்திருத்தம், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு).

இது எதனால் ஏற்படுகிறது

ஸ்கோலிடிடே குடும்பத்தைச் சேர்ந்த சேட்டோப்டெலியஸ் வெஸ்டிடஸ் என்ற வண்டுகளால் சேதம் ஏற்படுகிறது. ஏப்ரல்-மே மாதங்களில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸிற்கு மேல் உயரும் போது பெரிய வண்டுகள் தோன்றும். பெண் வண்டுகள் ஆரோக்கியமான மரங்களின் இளம் கிளைகளுக்குப் பறந்து சென்று அவற்றின் முனைய மொட்டுகளிலோ அல்லது மலர் மொட்டுகளிலோ சிறிய சுரங்கங்களைத் துளைத்து, அவற்றை அழித்துவிடும். இவை பின்னர் இளம் தளிர்கள் மற்றும் சிறுகிளைகளை உண்ணத் தொடங்கும், இத்தகைய சேதத்தின் விளைவாக இவை மிக விரைவாக வாடிவிடும். கோடை மற்றும் குளிர்காலத்தில் வண்டுகள் பிஸ்தா கிளைகளுக்குள் செயலற்ற நிலையில் இருக்கும். குளிர்காலத்தின் முடிவில், பெண் வண்டுகள் வலுவிழந்த அல்லது உடைந்த கிளைகளைத் தேடி, அதில் அவை இனப்பெருக்கம் செய்வதற்கான குடைவுகளைத் தோண்டி தோராயமாக 80-85 முட்டைகளை இடும்.


தடுப்பு முறைகள்

  • குறிப்பாக வறட்சியான காலங்களில் ஏற்படும் அழுத்தத்தைத் தவிர்க்க அட்டவணையின்படி நீர்ப்பாசனம் செய்யுங்கள்.
  • பூச்சியால் பாதிக்கப்படக்கூடிய உலர்ந்த மற்றும் பலவீனமான கிளைகளை கத்தரித்து எரிக்கவும்.
  • பழத்தோட்டங்களில் களைகள் மற்றும் இறந்த கிளைகள் இல்லாமல் பராமரிக்கவும்.
  • பட்டை வண்டு, அதன் முட்டைப்புழுக்கள் அல்லது அவற்றின் குடைவுகள் உள்ளனவா என்று கத்தரித்து மரத்தை பரிசோதிக்கவும்.
  • மரப் பொறிகளை நிலம் முழுவதும் வைத்து, பெரிய வண்டுகளை பலவீனமான, காய்ந்துபோன கிளைகள் மூலம் கவரவும், பின்னர் அவற்றை எடுத்து எரிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க