நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

கருப்பு நாரத்தை செடிப்பேன்

Toxoptera aurantii

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • சிறு கிளைகள் மற்றும் இலைகள் உருக்குலைந்து போகுதல்.
  • இலைகள் வாடுதல் மற்றும் மஞ்சள் நிறமாகுதல்.
  • தேன்துளிகள் புகை போன்ற பூஞ்சைகள் குடியேறுவதை ஊக்குவிக்கின்றன.
  • டிரிஸ்டெஜா வைரஸினால் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் உருவாகும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

இந்த நோய் நாரத்தை மரங்களின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் பாதிக்கக்கூடும். செடிப்பேன்கள் நீண்ட துளையிடும் வாய்ப்பகுதிகளைக் கொண்டிருக்கும், இவை அவற்றை தளிர்களின் நுனிகள் மற்றும் இளம் இலைகளின் சாறுகளை உறிஞ்ச பயன்படுத்தும். இதனால் சிறு கிளைகள் மற்றும் மஞ்சரிகள் உருக்குலைந்து போகுதல் மற்றும் இலைகள் சுருண்டுகொள்ளுதல், உருளையாகுதல் அல்லது மடிந்து கொள்ளுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை இனிப்பான தாவரக் குழாய் திசுக்களை உண்ணுவதால், அதிகப்படியான சர்க்கரையை தேன்துளியாக இவை வெளியேற்றுகிறது. இவை இலைகளில் விழும்போது, உடனடியாக புகை போன்ற பூஞ்சைகளால் காலனித்துவப்படுத்தப்பட்டு, இலைகளை கருமையாக்குகிறது. இவை ஒளிச்சேர்க்கையைக் கட்டுப்படுத்துகிறது மேலும் மரத்தின் வீரியத்தையும் பழங்களின் தரத்தையும் பாதிக்கிறது. செடிப்பேன்கள் டிரிஸ்டெஜா வைரஸை தொற்றிக்கொண்டு, இவற்றாலும் நாரத்தை மரங்கள் பாதிக்கப்படலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பல வகையான வட்டமிடும் ஈக்கள், கண்ணாடி இறக்கை பூச்சிகள் மற்றும் தம்பல பூச்சிகள் உள்ளிட்ட இரைப்பிடித்துண்ணிகள் செடிப்பேன்களின் அனைத்து வளர்ச்சி நிலையிலும் தாக்கக்கூடும். இந்தப் பூச்சிக்கு எதிராக பொதுவாக பயன்படுத்தப்படும் இரண்டு காக்கிநெல்லிட்ஸ் சைக்லோனிடா சங்குய்நியா மற்றும் ஹிப்போடாமியா கன்வெர்ஜென்ஸ் என்பவற்றின் முதிர்ந்த பூச்சிகள் மற்றும் முட்டைப் புழுக்களாகும். சில வயல் சார்ந்த குறிப்பிட்ட ஒட்டுண்ணிக் குளவிகளும் அவற்றுக்கு வசதியாக இருக்கும்போது நாரத்தை மரங்களில் காணப்படும். நியோஜிகைட்ஸ் பிரேசென்ஷி என்னும் பூஞ்சை ஈரப்பதமான வானிலையின் போது செடிபேன்களின் எண்ணிக்கையை நன்கு கட்டுப்படுத்தும். கொதிக்கும் நீர் அல்லது இயற்கை பைரெத்ரின்களைக் கொண்ட கரைசல்களைக் கொண்டு எறும்புகளை அழிக்கலாம். செடிப்பேன்களுக்கு எதிராக பூச்சிக்கொல்லி கரைசல்களையும் பயன்படுத்தலாம். சோப்பு, அழுக்குநீக்கி சோப்பு, வேப்பம் அல்லது மிளகாய் சாறுகள் அடிப்படையிலான கரைசல்கள் இவற்றின் உதாரணங்களாகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். செடிப்பேன்களைக் கட்டுப்படுத்த பல பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன ஆனால் அவற்றின் செயல்திறன் அவற்றை நாம் சரியான நேரத்தில் பயன்படுத்துவதை பொறுத்து அமையும். உதாரணமாக, இலைகள் சுருண்டு கொள்வதற்கு முன் அல்லது பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாவதற்கு முன். பெட்ரோலிய எண்ணெய்யினைக் கொண்டிருக்கும் வணிகத் தயாரிப்புகளை இலைகளுக்கு அடியில் தெளிக்கலாம், இதனால் இவை செடிப்பேன்களின் மீது நேரடியாக பட்டு அவற்றை அழிக்கும். செயற்கை பைரெத்ராய்டுகள் செடிப்பேன்கள் மற்றும் எறும்புகளுக்கு எதிராக திறன்மிக்க வகையில் செயல்படும், இவை இவற்றின் இயற்கை எதிரிகளின் மீதும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் டோக்ஸோப்டேரா அவுரண்டியின் முதிர்ந்த மற்றும் இளம் கருப்பு நாரத்தை செடிப்பேன்களால் ஏற்படுகிறது. இவை பழுப்பு நாரத்தை செடிப்பேன்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் டி. சிட்ரிஸிடாவின் சில இனங்களுடன் சேர்ந்து, நாரத்தை மரங்களையும் மற்றும் பிற மரங்களையும் சேர்த்து பாதிக்கும். முதிர்ந்த பூச்சிகள், இறக்கைகளுடன் மற்றும் இறக்கைகள் இன்றி இரு விதமாக இருக்கும். இறக்கைகளுடைய பூச்சிகள் 30 கிலோமீட்டர் தொலைவு வரை பறக்கக்கூடியவை, மேலும் இவை அதிக எண்ணிக்கையில் இருக்கும்போது அல்லது உணவு கிடைப்பது குறைவாக இருக்கும்போது காணப்படுகின்றன. இவை சுமார் 1.5 மிமீ நீளத்தில் மங்கலான பழுப்பு அல்லது கரு நிற உடலைக் கொண்டிருக்கும். கருப்பு நாரத்தை செடிப்பேன்கள் மற்றும் உயர்ந்த இனப்பெருக்கம் விகிதத்தினைக் கொண்டிருக்கும். இவை விரைவான மற்றும் கடுமையான நோய் தொற்றுகளுக்கு வழிவகுக்கும். இவற்றின் வளர்ச்சி, உயிர் வாழ்தல் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்கான வெப்பநிலை வீச்சு 9.4 மற்றும் 30.4° செல்ஸியசிற்கு இடையில் மாறுபடும். இந்த தேன்துளி எறும்புகளை ஈர்க்கிறது, இது இயற்கை இரைப்பிடித்துண்ணிகளிடம் இருந்து செடிப்பேன்களை பாதுகாக்கும். இவை நாரத்தை மரங்களின் நலிவு (டிரிஸ்டெஜா) நோய் மற்றும் வெள்ளரியின் மஞ்சள் தேமல் வைரஸின் காரணியாக கருதப்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான தாவரங்கள் அல்லது சான்றளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து பெறப்பட்ட விதைகளைத் தேர்வு செய்யவும்.
  • சாத்தியம் என்றால், இந்தப் பூச்சிகள் இல்லாத, தனிமையான பகுதியில் நடவு செய்யவும்.
  • நோய் அல்லது பூச்சியின் நிகழ்வுகளை மதிப்பிடுவதற்கும் அவற்றின் தீவிரத்தை தீர்மானிப்பதற்கும் வயல்களை தவறாமல் கண்காணிக்கவும்.
  • தாவரங்களில் இருந்து செடிப்பேன்களை கைமுறையால் அகற்றவும் அல்லது பாதிக்கப்பட்ட தாவர பாகங்களை நீக்கவும்.
  • வயல்களிலும் அதன் சுற்றுப்பகுதியிலும் உள்ள களைகளை சோதிக்கவும்.
  • செடிப்பேன்களை பாதுகாக்கும் எறும்புகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஒட்டும் பட்டைகள் அல்லது வலைகளை பயன்படுத்தவும்.
  • பல்வேறு வயல்கள் அல்லது பகுதிகளுக்கு இடையில் நாரத்தை மரங்களைக் கொண்டு செல்லாதீர்கள்.
  • பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், இவை நன்மை பயக்கும் பூச்சிகளின் எண்ணிக்கையை எதிர்மறையாக பாதிக்கக்கூடும்.
  • கவிகைகளின் காற்றோட்டத்திற்கு ஏதுவாக மரங்களின் கிளைகளை கத்தரிக்கவும் அல்லது உங்கள் தாவரங்களின் கீழ்ப்புற இலைகளை அகற்றவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க