நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நாரத்தை இலைப்பேன்கள்

Scirtothrips citri

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • பழத்தோலில் சொறி போன்ற, சாம்பல் அல்லது வெள்ளி நிறப் புண்கள் காணப்படும்.
  • பழம் முதிர்ச்சியடைகையில் சேதமடைந்த திசுக்கள் பெரிதாக வளரும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

இளம் மற்றும் முதிர்ந்த நாரத்தை இலை பேன்கள் இளம் மற்றும் முதிர்ச்சியற்ற இலைகள் மற்றும் பழங்களின் மேல்தோலைத் துளையிட்டு வெறுக்கத்தக்க, சொறி போன்ற சாம்பல் அல்லது வெள்ளி நிற வடுக்களை திசுக்களில் ஏற்படுத்தும். முதிர்ந்த முட்டைப்புழுக்களே உண்மையில் அதிக அளவில் சேதங்களை ஏற்படுத்துகின்றன, ஏனெனில் இவை இளம் பழங்களின் புல்லி வட்டத்திற்கு அடியில் உள்ள பகுதியை பெரும்பாலும் உண்ணுகின்றன. பழம் வளருகையில், சேதமடைந்த புறணி, புற இதழ்களுக்குக் கீழ் வரை நீண்டு காயமடைந்த திசுக்களின் வெளிப்படையான வளையமாகிறது. இதழ் கீழே விழுந்த உடனே பழங்கள் மிகவும் சேதமடைகின்றன, அதுவரை பழங்களின் விட்டம் சுமார் 3.7 செ.மீ. இருக்கும். கவிகைகளின் வெளிப்புறத்தில் இருக்கும் பழங்களின் மீது இலைப்பேன்களின் தாக்குதல் அபாயம் அதிகமாக உள்ளது, இங்கு இவை காற்று மற்றும் வேனிற்கட்டியாலும் தாக்கப்படக்கூடும். கூழின் படிக அமைப்பு மற்றும் சாறின் தோற்றம் பாதிக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் பழங்களை விற்பனை செய்ய முடியாமல் போகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இரைப்பிடித்துண்ணி பேன்கள் இயூசியஸ் டுலாரென்சிஸ், சிலந்திகள், கண்ணாடி இறக்கை பூச்சிகள் மற்றும் சிறிய கொள்ளை வண்டுகள் நாரத்தை இலைப்பேன்களைத் தாக்கும். இயூசியஸ் டுலாரென்சிஸ் நோய்ப்பூச்சியின் கட்டுப்பாட்டை அளிக்கிறது மற்றும் இவை "குறிப்பீடு" இனங்களாகவும் செயல்படுகிறது, அதாவது, ஒரு பழத்தோட்டத்தில் உள்ள இயற்கை எதிரிகளின் பொதுவான அளவை பற்றி நமக்கு ஒரு தெளிவைக் கொடுக்கிறது. இரைப்பிடித்துண்ணி இனங்களைப் பாதிக்காத வகையில் பரந்த அளவிலான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தவும். ஸ்பினோஸாட் கலவையுடன் ஆர்கானிக் அங்கீகாரம் பெற்ற எண்ணெய், கவோலின் அல்லது சபாடிலா காரத் தெளிப்பான்களை வெல்லப்பாகு அல்லது சீனி பொறிகளுடன் பயன்படுத்துதல் இயற்கை முறையில் நிர்வகிக்கப்படும் பழத்தோட்டங்களில் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இலைத் திரள்கள் பாதிக்கப்பட்டாலும், சாதாரணமாக ஆரோக்கியமான மரங்களால் குறைந்த அளவிலான இலைப்பேன்களால் ஏற்படும் சேதத்தைத் தாங்கிக்கொள்ள முடியும். அடிக்கடி பூச்சிக்கொல்லி பயன்பாடுகள் தாங்கிக் கொள்ள முடியாத மரங்களில் பரிந்துரைக்கப்படவில்லை, ஏனெனில் இவை எதிர்ப்புத் திறன் வளர்ச்சிக்கு வழிவகுத்து, பின்வரும் ஆண்டுகளில் இலைப்பேன்களை கட்டுப்படுத்துவதை கடினமாக்க கூடும். அபாமெக்ட்டின், ஸ்பிநெடோரம், டைமீதோயேட் மற்றும் சைஃப்லூத்ரின் ஆகியவற்றைக் கொண்ட கலவையை நாரத்தை இலைப்பேன்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்களானது ஸ்சிர்ட்டோத்ரிப்ஸ் சிட்ரி என்னும் நாரத்தை இலைப்பேன்களால் ஏற்படுகிறது. முதிர்ந்த பூச்சிகள் சிறியதாக, ஆரஞ்சு-மஞ்சள் நிறத்தில் இறக்கைகளுடன் காணப்படும். இளவேனிற்காலம் மற்றும் கோடைகாலத்தில், பெண் பூச்சிகள் புதிய இலைத் திசு, இளம் பழம், அல்லது பச்சைக் கிளைகளில் 250 முட்டைகள் இடும். இலையுதிர் காலத்தில், பருவத்தின் கடைசி வளர்ச்சி நிலையில் மிகுந்த குளிரில் பெரும்பாலான முட்டைகள் இடப்படும். இந்த முட்டைகள் அடுத்து வரும் வசந்த காலத்தில் மரங்கள் புதிதாக வளரும் தருணத்தில் குஞ்சு பொறிக்கும். இளம் முட்டைப்புழுக்கள் சிறிய அளவில் இருக்கும், முதிர்ந்த முட்டைப்புழுக்கள் முதிர்ந்த பூச்சியின் அளவில், சூழல் வடிவத்தில், இறக்கையின்றிக் காணப்படும். கடைசி புழு வளர்ச்சி நிலையில் (முட்டைப்புழு) இலைப்பேன்கள் உணவு அருந்தாது மற்றும் தரையில் அல்லது மரங்களின் பிளவுகளில் தனது வளர்ச்சியை நிறைவு செய்யாது. முதிர்ந்த பூச்சிகள் வெளிவரும் போது, மரங்களைச் சுற்றி இவை சுறுசுறுப்பாக இயங்கும். நாரத்தை இலைப்பேன்கள் 14° செல்சியஸிற்கு குறைவான வெப்பநிலையில் வளர்ச்சி பெறாது, மேலும் வானிலை ஏற்றதாக இருக்கும்போது ஓராண்டுக்கு இவை 8 முதல் 12 தலைமுறைகளை உற்பத்தி செய்யும்.


தடுப்பு முறைகள்

  • நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட தக்காளி வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை நடவு செய்யவும்.
  • நோய்பூச்சியின் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என பழத் தோட்டங்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • பெரிய பகுதியில் உள்ள பூச்சிகளை கூட்டமாக பிடிக்க ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தவும்.
  • இரைப்பிடித்துண்ணி இனங்களை பாதிக்காத வகையில் பரந்த அளவிலான பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தவும்.
  • மாற்று புரவலன்களுக்கு அருகே நடவு செய்வதைத் தவிர்க்கவும் மற்றும் வயல்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் வளரும் களைகளைக் கட்டுப்படுத்தவும்.
  • தாவரங்களுக்கு நல்ல நீர் பாசனம் அளிக்கவும், மேலும் நைட்ரஜன் உரங்களின் அதிகப்படியான பயன்பாட்டினைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க