கத்திரிக்காய்

கத்திரிக்காய் வார்இழை வண்டு

Gargaphia solani

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள் சுருண்டு வெளிர் நிறமாகும்.
  • பூச்சிகளின் உண்ணுதலானது வெளிறிய பகுதிகளை ஏற்படுத்தும், இதன் விளைவாக இலைகள் வாடி, உதிர்ந்து விடும்.

இதிலும் கூடக் காணப்படும்


கத்திரிக்காய்

அறிகுறிகள்

முதிர்ந்த மற்றும் இளம் வண்டுகள் இரண்டுமே கத்திரிக்காய் செடிகளின் இலைகளை உண்ணும். கத்திரிக்காய் செடி விதைப்பு நிலைகளில் இருக்கும்போது, வசந்த காலம் நெருக்கடியான காலமாகும். முதிர்ந்த வண்டுகள் செயலற்று இருக்கும் காலத்தில், தாவரங்களைத் தாக்க தொடங்கி, இலைகளின் கீழ்ப்புறத்தில் பச்சைநிற முட்டைகளை இட்டு, இளம்வண்டுகளின் எதிர்கால காலனித்துவத்தை நிறுவுகிறது. இளம் வண்டுகள் வெளியாகி, கூட்டமாக இலைகளின் கீழ்புறத்தை உண்டு, தனது பழுப்பு நிற கழிவுகளால் அவற்றை மூடிவிடும். இலைகளை மெல்லுவதால், வட்ட வடிவ நிறமாறிய திட்டுக்கள் இலைகளின் மேல்பரப்புகளில் தெளிவாகக் காணப்படும். அவை நகர்ந்து, வெளிப்புறமாக உண்ணும்போது, அதிகரிக்கும் சேதங்களால் இலைகள் மஞ்சள் நிறமாகி, சுருங்கி, சுருண்டு கொள்ளும். கடுமையான தொற்றுநோய் முழு தாவரங்களையும் கொன்றுவிடக்கூடும் அல்லது அவற்றை பலவீனப்படுத்தும், இதனால் பழங்கள் வளர்ச்சியடைவது தடைபடுகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கத்தரிக்காய் வார்இழை வண்டுகளின் இயற்கை எதிரிகளான கரும்புள்ளி வண்டு, சிலந்திகள் மற்றும் கொள்ளை வண்டுகள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும். பூச்சிக்கொல்லி சோப்புகள், பைரெத்ரின்ஸ் மற்றும் வேப்ப எண்ணெய் ஆகியவற்றை இலைகளின் கீழ்ப்பகுதிகளில் தெளிக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மாலத்தியான் அல்லது பைரித்ராய்டுகள் ஆகியவற்றின் அடிப்படையிலான பரந்த வீச்சுகளை உடைய பூச்சிக்கொல்லிகளை இலைவழி தெளிப்பான்களாக பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

கத்திரிக்காய் முதிர்ந்த வார்இழை வண்டுகள் வெளிர் பழுப்பு மற்றும் வெண்ணிறத்தில், தனது இறக்கையில் ஒளிபுகும் வகையில் பச்சை நிற, வார்இழை போன்ற நரம்புகளைக் கொண்டிருக்கும். அவை சுமார் 4 மிமீ நீளத்தில், தாவரக் கழிவுகளில் வாழும். மேலும் அவை பறக்க மற்றும் முட்டையிட சாதகமான வானிலைக்காக காத்திருக்கும். முட்டைகள் பச்சை நிறத்தில், இலைகளின் அடிப்பகுதியில் கொத்துகளாக பச்சையை போன்று ஒட்டிக்கொள்ளும். இளம் வண்டுகள் இறக்கையின்றி, மஞ்சள் நிறத்தில், வயிற்றுப்பகுதியின் நுனியில் கருத்த புள்ளிகளைக் கொண்டிருக்கும். முதிர்ந்த மற்றும் இளம் வண்டுகள் இரண்டுமே இலைகளுக்கு சேதங்களை விளைவிக்கும், ஆனால் இளம் வண்டுகள் அது பிறக்கும் தாவரத்தின் இலைகளை உண்ணும், முதிர்ந்த வண்டுகள் பிற தாவரங்களுக்கு பறந்து சென்று, வயல்களில் சேதங்களை பரவச் செய்யும். பொதுவாக, இந்தப் பூச்சி, இன்றளவும் கத்திரிக்காய் செடியை தாக்கும் சிறப்பு பூச்சியாக அங்கீகரிக்கப்படவில்லை. விளைச்சல் இழப்புக்கள் பொதுவாக குறைவாகவே இருக்கும், ஆனால் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், பாதிப்புகள் அதிகமாக இருக்கும். கத்திரிக்காயை தவிர, மாற்று புரவலன் தாவரங்களில் தக்காளி, உருளைக்கிழங்கு, சூரியகாந்தி, சமையலுக்குரிய மணப்பூண்டுவகை, பருத்தி, இரவில் மலரும் செடியினம் மற்றும் பூனைக்காஞ்சொறிச் செடி வகை ஆகிய களை செடிவகைகளும் அடங்கும்.


தடுப்பு முறைகள்

  • பூச்சிகளின் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என தாவரங்களை கூர்ந்து கவனிக்கவும்.
  • பூச்சிகள் அல்லது காலனித்துவப்படுத்தப்பட்ட இலைகளை எடுத்து அகற்றி விடவும்.
  • தானே வளரும் தாவரங்கள் அல்லது பூனைக்காஞ்சொறிச் செடி வகை மற்றும் இரவில் மலரும் செடியினம் போன்ற களை செடி வகைகள் போன்ற மாற்று புரவலன்களை அகற்றவும்.
  • நன்மை பயக்கும் பூச்சிகள் பாதிக்கப்படாமல் இருக்க பூச்சிக் கொல்லி பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும்.
  • முதிர்ந்த வண்டுகள் வயல்களில் செயலற்று இருக்கும் காலத்தை தவிர்க்க வயல்களில் இருக்கும் பயிர் கழிவுகள் மற்றும் களை பொருட்களை அகற்றிவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க