திராட்சை

திராட்சை மொட்டு அந்துப்பூச்சி

Eupoecilia ambiguella

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • முட்டைப்புழுக்கள் மொட்டுக்கள் மற்றும் பெர்ரிகளை உண்டு, கணிசமான சேதத்தை ஏற்படுத்துகிறது.
  • மொட்டுக்கள் மற்றும் பெர்ரிகள் பட்டு நூல்களால் பிண்ணப்பட்டிருக்கும்.
  • உண்ணும் தளங்களில் சாம்பல் அல்லது பழுப்பு பூசணம் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

திராட்சை

அறிகுறிகள்

இளம் முட்டைப்புழுக்கள் பூ மொட்டுக்களை துளையிட்டு, அவற்றை உட்புறமாக உண்டு, குறிப்பிடத்தக்க சேதங்களை ஏற்படுத்தி அவற்றை விற்க முடியாமல் செய்து விடும். முதலாவது உண்ணும் காலத்தில், அவை பல பூ மொட்டுக்களை பட்டு நூல்களால் பிண்ணி, தடித்த வலை பிண்ணலை தனது உறைவிடமாக உருவாக்கி, அங்கு அவை வளரும். தங்குமிடத்தை சுற்றி வாழும் இரண்டாம் தலைமுறை கம்பளிப்புழுக்கள் பெர்ரிகளை உண்டு, ஏராளமான கழிவுகளை ஏற்படுத்துவதால், அவை மிகவும் தொந்தரவு அளிக்கும். ஒற்றை முட்டைப்புழு ஒரு டஜன் பெர்ரிகளை உண்டு, குறிப்பிடத்தக்க சேதங்களை ஏற்படுத்தக்கூடும். சாம்பல் நிற பூஞ்சை, போட்ரிடிஸ் சினேரியா மூலம் உணவு தளங்களில் இரண்டாம்நிலை தொற்று மோசமானதாக இருக்கும். அருகில் உள்ள பெர்ரிகளிலும், சேதமடையாதவை, குடியேறி, பழுப்பு நிற பூசணமாக மாறக்கூடும். இந்த அந்துப்பூச்சி ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் உள்ள பல மது உற்பத்திப் பகுதிகளில் மிகவும் கடுமையான பூச்சியாக கருதப்படுகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ட்ரைகோகிராமா காக்கேசியா மற்றும் டி.எவநெஸ்சென்ஸ் போன்ற ஒட்டுண்ணிக் குளவிகள் இந்த அந்து பூச்சியின் முட்டைகளுக்கு உள்ளே தனது முட்டைகளை இடுகின்றன, எனவே அவை திராட்சை தோட்டங்களில் திராட்சை மொட்டு அந்துப்பூச்சியின் நோய் தொற்றுகளை கணிசமாகக் குறைக்கின்றன. பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாடு மூலம் இந்த இயற்கை எதிரிகளின் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக்கொள்ளவும். ஸ்பினோஸாட் மற்றும் இயற்கை பைரித்ரினை அடிப்படையாகக் கொண்ட இ.அம்பிகெல்லாவிற்கு எதிரான பயனுள்ள கரிம பூச்சிக்கொல்லிகள் உள்ளன. தெளிப்பான் பயன்பாடுகளின் எண்ணிக்கை பாதிக்கப்பட்ட பெர்ரிகளின் அளவைப் பொறுத்தது ஆகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இ.அம்பிகெல்லாவிற்கு எதிரான பயனுள்ள பூச்சிக்கொல்லிகள் செயற்கை பைரித்ராய்ட்ஸ் ஆகும். இந்த நோய்தோற்று தொடர்ச்சியாக ஏற்படும் இடங்களில், பூபூக்கும் காலத்திற்கு பிறகு பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு தேவைப்படலாம். மேலும் இரண்டாவது தலைமுறையைக் கட்டுப்படுத்த கோடைக்காலத்தின் பிந்தைய பகுதிகளில் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு தேவைப்படலாம். தெளிப்பான்கள் பயன்பாட்டின் எண்ணிக்கை பாதிக்கப்பட்ட பெர்ரிகளின் அளவைப் பொறுத்தது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இரண்டாம் தலைமுறை கம்பளிப்புழுக்களின் வெளிப்பாட்டை தீர்மானிக்கும் காரணிகள் ஆகும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் திராட்சை மொட்டு அந்துப்பூச்சி இயுபோசிலியா ஆம்பிகெல்லா என்பவற்றின் உண்ணும் செயல்பாட்டால் ஏற்படுகிறது மற்றும் பாதிக்கப்பட்ட திசுக்களில் குடியேறுவது போட்டிரீஸ் சினேரியா என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. முதிர்ந்த அந்துப்பூச்சிகள் மஞ்சள்-பழுப்பு நிற இறக்கைகள், வெளிப்படையான கரும்பழுப்பு நிற பட்டை மற்றும் சாம்பல் நிற பின்னிறக்கைகளையும் கொண்டிருக்கும். கோடைக்காலத்தின் நடுவில் திராட்சை பெர்ரிகளில் அல்லது வசந்த காலத்தின் பிற்பகுதியில் பூ மொட்டுக்கள் அல்லது பூக்காம்புகளில் பெண் பூச்சிகள் முட்டைகளை (ஒரு பெண் பூச்சி 100 முட்டைகள் வரை இடும்) ஒற்றையாக இடும். 8-12 நாட்கள் கழித்து புழுக்கள் முட்டையிலிருந்து வெளியேறும். அவை பழுப்பு-மஞ்சள் நிறத்திலும் மற்றும் அவற்றின் நீளம் 12 மிமீ வரை இருக்கும் மேலும் அவற்றின் முழு உடலின் மீது முடிகள் அங்கங்கே காணப்படும். பட்டை அல்லது மற்ற பொருத்தமான இடங்களில் உள்ள விரிசலில் இரண்டாவது தலைமுறை கூட்டுப்புழுக்கள் குளிர்காலத்தை செயலற்ற நிலையில் கடக்கும். அந்துப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை மிகவும் சார்ந்துள்ளது. இது பொதுவாக குளிர்ந்த மற்றும் ஈரப்பதமான பகுதிகளில் காணப்படுகிறது, மேலும் வருடத்திற்கு இரண்டு தலைமுறைகளை மட்டுமே கொண்டிருக்கும். வளர்ச்சிக்கு உகந்த ஈரப்பத நிலை 70% அல்லது அதற்கு மேலானது மற்றும் 18 முதல் 25° செல்சியஸ் வரையிலான வெப்பநிலை ஆகும். குறைந்த ஈரப்பதம் மற்றும் வெப்பநிலைகளில் முட்டைகளில் இருந்து புழுக்களால் வெளியேற இயலாது.


தடுப்பு முறைகள்

  • உங்கள் நாட்டில் உள்ள நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை சரிபார்க்கவும்.
  • மேலும் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், அந்த துறையின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளவும்.
  • மொட்டுகள் அல்லது பெர்ரிகள் ஏதேனும் பாதிக்கப்பட்டுள்ளதா என திராட்சைத் தோட்டங்களை அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.
  • அவற்றின் எண்ணிக்கையை அறிந்து கொள்வதற்கு பெரோமோன் பொறிகளை பயன்படுத்தவும்.
  • தரையில் விழுந்து கிடைக்கும் இலைகளில் அந்துப்பூச்சிகள் தனது குளிர் காலத்தை செயலற்ற முறையில் கழிக்கும்.
  • மேலும் வசந்த காலத்தில் அவை வெளியேறுவதை தடுக்க, திராட்சை தோட்டங்களில் உள்ள கழிவுகளை அகற்றி அழித்துவிடவும்.
  • மாற்றாக, மண்களால் இலை குப்பைகளை மூடுவது அவை வெளியேறுவதை தடுக்கும்.
  • இந்த இரண்டு முறைகளும் பூப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன் செய்து முடிக்க வேண்டும்.
  • லேசான நோய்த்தொற்றின் போது, பாதிக்கப்பட்ட பெர்ரிகளை கைகளைக் கொண்டு அகற்ற வேண்டும்.
  • பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ள தாவர பொருட்களை பிற வயல்கள் அல்லது பண்ணைகளுக்கு எடுத்து செல்ல வேண்டாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க