Icerya purchasi
பூச்சி
முதிர்ந்த பூச்சிகள் மற்றும் இளம் உயிரிகள் சேர்ந்து கூட்டமாக பயிரின் உயிர்ச்சத்தினை உறிஞ்சிகின்றன, அத்துடன் அதிக எண்ணிக்கையிலான தேன்பனி போன்றவற்றை உருவாக்கும். இவை தண்டுகள், இலைகள், பூங்கொத்து மற்றும் தளிர்களை சூழ்ந்திருப்பதைக் காணலாம். இவை பயிரின் உயிர்ச்சத்துக்களை உறிஞ்சுவதால் இலைகளில் தளர்வுற்ற தோற்றம் மற்றும் கிளைகள் அழிதல் போன்றவை ஏற்படும். ஊட்டம் பெறும்போது கூட இலைகளை சூழ்ந்திருக்கக் கூடிய, அதிக எண்ணிக்கையிலான தேன்பனி தோற்றத்தினை உருவாக்குவதால், கருப்பு நிற புகைபோன்ற அமைப்பினை ஏற்படுத்துகின்றன. மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படுமாயின், இலை உதிர்தல் ஏற்படும், கிளைகள் அழியும், அத்துடன் ஒளிச்சேர்க்கை அளவு குறையும், இதன் விளைவாக மரத்தின் வீரியம் குறையும் மற்றும் கனியின் தரம் மற்றும் மகசூலில் குறிப்பிடும்படியான அளவில் பாதிப்புகள் ஏற்படும்.
வண்டுகள் மற்றும் லேடிபேர்ட் போன்றவை குறிப்பிடும்படியான, இயற்கையாக அமைந்த எதிரிகளாகும். வெடலியா வண்டுகள், ரோடலியா கார்டினலிஸ் போன்றவை இயற்கையாகவே பாதிப்பினை ஏற்படுத்தும் பூச்சிகளின் முதிர்ந்தவை மற்றும் முட்டைகளை அழிக்கவல்லவை. பாராசிட்டிக் ஈக்கள், க்ரைப்டோசெடம் இசெர்யே போன்றவையும் இப்பூச்சிகளுக்கு எதிரிகள் ஆகும்.
எப்போதும் உயிரியல் முறைப்படி செடிகளுக்கு சிகிச்சையளிப்பதை, பாதுகாக்கும் வழிமுறைகளுடன் சேர்த்துக் கையாளவும். பூச்சிகள் மற்றும் ஊர்ப்புழுக்கள் தடித்த மெழுகு போன்ற பொருளினால் சூழப்பட்டிருப்பதால் அவை வேதியியல் பூச்சிக்கொல்லிகளால் எளிதில் பாதிக்கப்படுவதில்லை. அசிடமிப்ரிட் மற்றும் மாலதியோன் போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்ட பொருட்களை சரியான நேரத்தில் பூச்சிகளுக்கு எதிராக பயன்படுத்தலாம். பெட்ரோலியம் எண்ணெய் தெளித்தலை, முட்டைகளில் இருந்து உயிரிகள் வெளிவந்தவுடன் பயன்படுத்தினால் அவை பயிர் திசுக்களில் இருந்து ஊட்டம் பெறுவதைத் தடுக்கலாம் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
பருத்தி மெத்தை பூச்சிகள் மரத்தின் பட்டையில் ஊட்டம் பெறுவதால் இந்த நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன. சில பகுதிகளில் ப்ளனோகோக்கஸ் சிட்ரி போன்ற பூச்சிகள் முதன்மையானதாக இருக்கும். இந்தப் பூச்சிகள் 10-15 மிமீ நீளமும், சூழ்நிலைகள் ஏதுவாக அமைந்தால் 2 மாதங்கள் முழுமையான வாழ்க்கைச் சுழற்சி கொண்டவையாக இருக்கும். பெண் பூச்சிகள் 1000 முட்டைகள் வரை இடும், இந்த முட்டைகள் முட்டைகளுக்கான திசுப்பையின் மூலம் இலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இடப்படுகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் இளம் உயிரி (ஊர்ப்புழு) முதலில் இலைகளில் ஊட்டம் பெறும், முக்கியமாக நரம்புகளுக்கு இணையாக ஊட்டம் பெறும் மற்றும் இளம் கிளைகளில் ஊட்டம் பெறும். பூச்சிகள் முதிர்ச்சி பெறும்போது, இவற்றினை அடிமரம், கிளைகள், மற்றும் சிலசமயங்களில் கனிகளில் தென்படலாம். இவற்றிற்கு ஈரப்பதமான, குளிர்ச்சி சூழ்நிலைகள் மிகவும் பிடிக்கும் மற்றும் சிட்ரஸ் மரங்களின் அடர்ந்த பகுதிகளில் இவை சிறப்பாக செயல்படும். தன்னை பாதுகாத்துக்கொள்ள அவை வளரும்போது, தடித்த, பருத்தி மெழுகு போன்ற பொருளை அவற்றைச் சுற்றி உருவாக்குகின்றன. எறும்புகள் தேன் பனியினை உண்கின்றன மற்றும் இப்பூச்சிகளை காப்பாற்றி இயற்கையான எதிரியாக அமைந்த எதிரிகளுக்கு இடையூறு விளைவிக்கின்றன. மோரா, அகாசியா மற்றும் ரோஸ்மரினஸ் போன்றவற்றின் உயிரிகள் இதேபோன்ற பாதிப்பினை ஏற்படுத்தும் பிற உயிரிகள் ஆனால் அவை பலவகையான கனிகள் மற்றும் காட்டு மரங்கள் மற்றும் அலங்கார புதர்களையும் பாதிக்கின்றன.

This page is powered by millions of live Plantix diagnoses. Reach farmers at the exact moment they diagnose பருத்தி மெத்தை பூச்சிகள் with Demand Creation, part of Plantix Intelligence.