மாங்கனி

மாம்பழ ஈ

Ceratitis cosyra

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • தோலின் மீது பழுப்பு நிற சிதைவுகள்.
  • பழத்தின் நிறமாற்றம்.
  • பழச்சாறு சுரத்தல் மற்றும் பசையின் நிலைத்தன்மை.
  • தெரியக்கூடிய வெளியேறும் துளைகள்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மாங்கனி

அறிகுறிகள்

சி.கோசைரா தொற்றுக்கான அறிகுறிகள் பழங்களின் மீது தெளிவாக காணப்படுகின்றன.பெண் ஈக்கள் தங்கள் முட்டைகளை முதிர்ச்சியடைந்த மாம்பழங்களில் உட்செலுத்தி விடுகின்றன. முட்டைப்புழு பழங்களின் உள்ளிருந்து உண்ணுவதாலும் மற்றும் அதன் செரிமான செயல்முறையாலும், பாதிப்படைந்த பழங்கள் ஒட்டும் தன்மையை வெளிப்படுத்துகின்றன. புழுக்களின் வெளியேறும் துளைகள் பழங்களின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. உட்புற சிதைவு பழத்தை உரிக்கும் போது பழுப்பு நிறத்தில் மற்றும் சில நேரங்களில் கரு நிற சிதைவுகளாக காணப்படுகின்றன. உரிக்கும் போது சில நேரங்களில் குழியாகவும் காணப்படும். அவை படிப்படியாக சிதைவதனால், பழங்கள் பழுப்பு நிறமாக மாறலாம் மற்றும் பூசண அச்சும் தென்படலாம். மேலும் அதனைத் தொடர்ந்து அவை துர்நாற்றத்தை ஏற்படுத்தி, பூஞ்சை மற்றும் பழ வண்டல் கலவையையும் சுரக்க செய்யலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சி. கொசைரா எண்ணிக்கையை கண்காணித்து, அவற்றை பிடிப்பதற்கு புரத இரைத்துண்டுகள் கொண்ட பொறிகள் திறம்பட செயலாற்றும். பூஞ்சை மெட்டரிசியம் அனிசோப்லியே, தரையில் இருக்கும் சி. கொசைராவின் கூட்டுப்புழுக்கள் மீது ஒட்டுண்ணி போல் பற்றி படர்ந்து, கை அல்லது எண்ணெய் அடிப்படையிலான தெளிப்பான்களாக சிதறுகிறது. 46 டிகிரிக்கு மேல் அல்லது 7.5 டிகிரி அல்லது அதற்கு கீழே இருக்கும் வெப்பநிலையில் நீண்டகாலம் சேமித்து வைத்தல் போன்ற அறுவடைக்குப்பின் பழங்களின் சூடான தண்ணீர் சிகிச்சை முறைகளும் கூட்டுப்புழுக்களை அழிக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

ஒரு குறிப்பிட்ட இரையுடன் (புரோட்டீன் ஹைட்ரோலிசேட் அல்லது புரோட்டீன் ஆட்டோலிசேட்) கூடிய பூச்சிக்கொல்லிகளை (எ.கா. மேலதியான் அல்லது டெல்டாமெத்ரின்) கொண்டிருக்கும் பொறிகள் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த முறை அனைத்து சுற்றியுள்ளவைகளையும் கவர்ந்து , ஈக்களின் சரியான சிகிச்சையை உறுதி செய்கிறது. சி. கோசைராவின் ஆண் ஈக்களை டெர்பினியோல் அசெட்டேட் அல்லது மெதைல் யூகினால் மூலம் ஈர்க்கச் செய்து, சிக்கவைக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

செராடிடிஸ் கோசைரா எனப்படும் பழ ஈக்களின் முட்டைப்புழுக்களினால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன. மார்பு பகுதியில் சிதறுண்ட கருப்பு புள்ளிகளுடன் வயதான ஈக்கள் மஞ்சள் நிற மேனியைக் கொண்டுள்ளன. அவற்றின் இறக்கைகள் 4-6 மி.மீ. நீளத்துடன் கொண்டு மஞ்சள் நிறத்தில் உள்ளன. பெண் ஈக்கள் பழுத்துக்கொண்டிருக்கும் மாம்பழங்களில் முட்டைகளை உட்செலுத்துகின்றன, மேலும் இரண்டு வாரங்களுக்கு அவ்வாறே தொடர்ந்து செய்கின்றன. 2-3 நாட்களுக்குப் பின்னர், முட்டையிலிருந்து புழுக்கள் வெளியேறி, மாம்பழ சதைகளை தோண்ட ஆரம்பிக்கின்றன. ஒரு பழத்தில் 50 முட்டைப்புழுக்கள் வரை மொய்ப்புகள் ஏற்படலாம், சில நேரங்களில் அறுவடைக்குப் பின் மட்டுமே அவை அறிகுறிகளைக் காட்டும். கூட்டுப்புழுவாக மாறுவதற்கு, முட்டைப்புழுக்கள் தானாகவே நிலத்தில் விழுந்து, மண்ணின் மேல் பகுதிகளைத் தோண்டி அதனுள் வசிக்கும். 9 முதல் 12 நாட்களுக்கு பிறகு முழுமையாக வளர்ச்சியடைந்த ஈக்களாக வெளியே வரும்.


தடுப்பு முறைகள்

  • விரைவாக பழுக்க கூடிய தாவர வகைகளை பொறுத்த வரை, ஈக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் சமயத்தில், பழங்கள் பழுக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
  • தினமும் பாதிக்கப்பட்ட அல்லது கீழே விழுந்த பழத்தை அகற்றிவிடவும்.
  • சாத்தியமான ஈக்களின் படையெடுப்புகளை கண்காணிக்க புரத தூண்டில் பொறிகளை நிறுவுக.
  • சிட்ரஸ் பழங்கள், கொய்யா, பப்பாளி, முலாம்பழம் போன்ற இதர மாற்று தாவர புரவலன்களை அருகில் வளர்க்க வேண்டாம்.
  • களைகளை அகற்றி, கழிவுகளில் ஏதேனும் பழங்கள் விழுந்திருக்கின்றதா என கண்டறிய மரங்களை சுற்றி கவனமாக தோண்டி பார்க்கவும்.
  • ஒத்த வளர் சுழற்சி கொண்ட மாம்பழ வகைகளை வளர்ப்பது நன்று.
  • பாதிக்கப்படாத மாம்பழங்களை மட்டுமே ஏற்றி, விற்க வேண்டும்.
  • விற்காத பழங்களை உடனே சாப்பிட்டு விடவும் அல்லது முறையாக அழித்து விடவும்.
  • மரங்களை சுற்றிலும் உழுவது நிலத்தில் வளரும் கூட்டுப்புழுவை அழித்து விடும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க