Colomerus vitis
சிலந்திப்பேன்
இந்த நோய்க்கான அறிகுறிகள் சம்பந்தப்பட்ட பூச்சியின் வகை, திராட்சைகளின் வகைகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் ஆகியவற்றை சார்ந்துள்ளது. பெரும்பாலும் இந்த நோய்க்கான அறிகுறிகள் வசந்த காலத்தின் பிற்பகுதியில் தோன்றும். அப்போது இளம் இலைகளின் மேல் மேற்பரப்பில் உள்ள சில பகுதிகள் மேலே உப்பி, கொப்புளங்கள் போன்ற புடைப்புகளுடன் காணப்படும் (இவை எர்னியம் என்றும் அழைக்கப்படுகின்றன). இந்த உப்பிய பகுதிகளுக்கு கீழ், வெள்ளை முதல் இளஞ்சிவப்பு நிறம் வரை மாறுபடும் சிறிய முடிகளின் அடுக்குகளை உட்குழியில் காணலாம். இந்த அடர்த்தியான முடிகளால் சிறிய, ஒளி புகக்கூடிய கண்ணாடி போன்ற பூச்சிகள் பாதுகாக்கப்படும். பின்னர், அவற்றை உள்ளே பாதுகாத்த புடைப்புகள் மற்றும் முடி காய்ந்து பழுப்பு நிறத்தில் மாறிவிடும். சில நாடுகளில், இந்த பூச்சிகள் வெவ்வேறு வகையான சேதங்களை ஏற்படுத்தும். உதாரணமாக, அடித்தள இலைகள் சிதைந்து போதல், மொட்டுகள் உருக்குலைந்து போதல் மற்றும் இலை சுருண்டுகொள்ளுதல் போன்றவை. .
கலெண்ட்ரோமஸ் ஆக்சிடெண்ட்டாலிஸ் என்னும் வேட்டையாடும் பூச்சிகள் கொப்புள சிலந்திப்பேன்களை உண்ணும் மற்றும் அவற்றின் எண்ணிக்கையை திறம்பட குறைக்கிறது. பூச்சிக்கொல்லி சோப்பு அல்லது வேப்ப எண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம், ஆனால் இவை நன்மை பயக்கும் பூச்சிகளின் எண்ணிக்கையையும் குறைக்கும். மேலும், ஈரப்பதமான கந்தக சிகிச்சைகளும் பயனுள்ளதாக இருக்கும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். ஸ்பைரோடெட்ராமேட் கொப்புள சிலந்திப்பேன்களுக்கு எதிராக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தக் கலவையை உறிஞ்சுவதற்கு போதுமான இலைத் தொகுதிகள் உள்ளது என்பதை உறுதி செய்துகொள்ளவும். 30 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தவும். ஈரப்பதமான கந்தகமும் பயன்படுத்தலாம்.
இலைகளில் கொப்புளங்கள் போன்ற புடைப்புகள் கொலோமெரஸ் விடிஸ் என்பவற்றால் ஏற்படுகிறது. தெளிவான அறிகுறிகள் ஏற்படும்போதும், இது திராட்சையை தாக்கும் பெரும் நோய்பூச்சியாக கருதப்படுவதில்லை. சிறிய மற்றும் சாறுகளை உண்ணும் இந்த பூச்சிகள் பிரதானமாக திராட்சை தோட்டங்களை பாதிக்கின்றன. இலைகளின் மேல் தோலை அவை உண்ணும்போது, அதன் வளர்ச்சியை மாற்றியமைக்கும், ஹார்மோன் போன்ற பொருட்களை அவற்றின் உயிரணுவுக்குள் உட்செலுத்துகின்றன. இது கொப்புளங்கள் போன்ற புடைப்புகளை ஏற்படுத்துகிறது. திராட்சைக் கொடிகளின் மீது கொப்புள பூச்சிகள் செயலற்ற நிலையில் இருக்கும், உதாரணத்திற்கு மொட்டுச் செதில்களுக்கு கீழே மறைத்துக்கொள்ளும். அவை வசந்த காலத்தில் செயல்படத் தொடங்கி, இலைகளின் கீழ்ப்பகுதிக்குச் சென்று, அவற்றை உண்ணத் தொடங்குகிறது. கோடைகால இறுதியில், அவை இலைத் தொகுதியிலிருந்து விலகி , குளிர்காலத்திற்கு அடைக்கலம் தேடும். இலைகளின் அடிப்பகுதியில் காணப்படும் பொதியுறைகளால், அவற்றை நாம் சாம்பல் நோய் போன்ற பூஞ்சை நோயாக தவறாக அடையாளம் காணக்கூடாது. வெதுவெதுப்பான ஈரமான வானிலையில் விரைவான இலை வளர்ச்சியின் போது இந்த நோய்க்கான அறிகுறிகள் மிகவும் கடுமையானதாக இருக்கும். ஆனால் பழங்களின் விளைச்சலில் இந்த பூச்சிகள் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்துவதாக தெரியவில்லை.

This page is powered by millions of live Plantix diagnoses. See where திராட்சை கொப்புள சிலந்திப்பேன் is spreading — district by district — with Crop Insights, part of Plantix Intelligence.