பருத்தி

பருத்தியின் பாக்டீரியா கருகல் நோய்

Xanthomonas citri subsp. malvacearum

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள், தண்டுகள் மற்றும் காய்களில் சிவப்பு முதல் பழுப்பு நிற ஓரங்களுடன் மெழுகு போன்ற, நீர் தோய்த்த புள்ளிகள் காணப்படும்.
  • புள்ளிகள் பழுப்பு நிறமாகும்.
  • தண்டு மற்றும் கிளைகளில் கருப்பு நிறத்தில் சொறிநோய்கள் காணப்படும்.
  • முதிர்ச்சி அடைவதற்கு முன்பே இலைகள் உதிர்ந்துவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பருத்தி

அறிகுறிகள்

பாக்டீரியா கருகல் நோயின் அறிகுறிகள், இலைகள், தண்டுகள் மற்றும் காய்களில் சிவப்பு முதல் பழுப்பு நிற ஓரங்களுடன், கோணவடிவத்தில், மெழுகு போன்ற நீர்தோய்த்த இலை புள்ளிகளாக காணப்படும். கோண வடிவிலான தோற்றம், பருத்தி இலைகளில் நரம்புகள் சிதைவுகளை கட்டுப்படுத்துவதால் ஏற்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், இலை பரப்புகளின் மீதான புள்ளிகள் முக்கிய இலை நரம்புகள் வழியாக பரவக்கூடும். நோய் அதிகரிக்கும் போது, இந்த சிதைவுகள் படிப்படியாக பழுப்பு நிற சிதைந்த பகுதிகளாக மாறும். தண்டுகளில் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் கருப்பு நிற சொறிநோய் ஏற்படும். இவை கடத்து திசுக்களை சுற்றி வளர்ந்து, அவற்றை துளையிட்டு, சொறிநோய் தாக்கப்பட்ட பகுதிக்கு மேலே உள்ள பகுதியை இறக்கச் செய்து, தாவரம் முதிர்ச்சியுறும் முன்பே இலைகளை உதிர செய்கிறது. பழைய இலைப் புள்ளிகள் அல்லது சொறிநோய் ஏற்பட்ட பகுதியின் மீது பாக்டீரியாவைக் கொண்டிருக்கும் வெள்ளை மெழுகு போன்ற மேலோடு உருவாகும். காய்கள் பாதிக்கப்பட்டு காய்கள் அழுகிப்போதல், விதை அழுகல், பஞ்சுகளின் நிறமாற்றம் முதலியவற்றை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட காய்கள் கோணவடிவில் இல்லாமல், வட்ட வடிவிலும், சிதைவுகள் ஆரம்பத்தில் நீர் தோய்ததாகவும் காணப்படும். நோய் தொற்று அதிகரிக்கையில், காயில் உள்ள சிதைவுகள் மூழ்கி, கரும்பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாறும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பாக்டீரியா சுடோமோனஸ் ஃப்லோரோசென்ஸ் மற்றும் பேசில்லஸ் சப்டிலீஸ் ஆகியவற்றை கொண்ட மாக்கல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட தூள் கலவைகளை பயன்படுத்துவது பாக்டீரியா எக்ஸ். மால்வாசிரதிற்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. அசாதிராட்சா இண்டிகா (வேப்பம் சாறு) ஆகியவற்றின் சாறுகள் பயனுள்ள விளைவுகளை கொடுக்கிறது. கட்டுப்பாடற்ற வளர்ச்சியைத் தடுக்கும் கட்டுப்பாடுகளும் பாக்டீரியா கருகல் நோய்த்தொற்றை தடுக்கிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். பருத்தியின் பாக்டீரியா கருகல் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவுக்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட நுண்ணுயிர் கொல்லிகள் உடனான விதை சிகிச்சை மற்றும் செப்பு ஆக்ஸிகுளோரைடுடன் விதைகளை சீர் செய்தல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

பருத்தியின் பாக்டீரியா கருகல் நோய் சாந்தோமோனாஸ் சிட்ரி இனம் மால்வாசிரம் என்பவற்றால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா பாதிக்கப்பட்ட பயிர் கழிவுகள் அல்லது விதைகளில் வாழும். இது பருத்தியை தாக்கி மிக பேரழிவு ஏற்படுத்தக்கூடிய நோய்களில் ஒன்றாகும். குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு மற்றும் அதிக ஈரப்பதம், அதனுடன் சேர்ந்த சூடான வெப்பநிலை,நோய் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளன. இலைகளின் இயற்கையான துளைகள் (இலைத்துளைகள்) அல்லது இயந்திர சேதங்களின் மூலம் ஏற்படும் துளைகளின் மூலம் பாக்டீரியா இலைத்திசுக்களில் நுழையும். இதனால்தான் கடுமையான மழைப்பொழிவு அல்லது ஆலங்கட்டி மழையை ஏற்படுத்தும் புயலுக்கு பின் இந்த நோய் கடுமையாக உள்ளது. இந்த நோய்தொற்று விதைகளால் பரவக்கூடும் என்பதால், அமில சிகிச்சையின் மூலம் கொட்டைகளில் இருந்து பஞ்சை எடுக்கும் முறை கருவி மையமாக ஆக்கப்பட்டுள்ளது, இது நோய்த்தொற்றுடைய விதை மூலம் பாக்டீரியா கருகல் நோய் பரவுவதைக் குறைக்கிறது. தானே வளரும் தாவரங்களில் இருந்து வளரும் நாற்றுகளும் பாக்டீரியா கருகல் நோய்க்கு பிரதான மூலமாக இருக்கக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • உயர் தரமான, நோய்த்தொற்று இல்லாத விதைகள் அல்லது அமில சிகிச்சை அளிக்கப்பட்ட, பஞ்சு நீக்கப்பட்ட பருத்தி விதைகளை நடவு செய்ய வேண்டும்.
  • கருகல் நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை பயன்படுத்தவும்.
  • வயல்களை கண்காணித்து, பாதிக்கப்பட்ட தாவர வகைகளை அடையாளம் கண்டு, அவற்றை நீக்கி விடவும்.
  • ஈரப்பதத்தைக் குறைக்கவும், இலைத்திரள்கள் உலர்வதை ஊக்குவிக்கவும் முடிந்தவரை கவிகைகளை திறந்த நிலையில் வைத்திருக்கவும்.
  • இலைதிரள்கள் ஈரப்பதமாக இருக்கும்போது பயிரிடவோ அல்லது வயல்களில் இயந்திரங்களை பயன்படுத்தவோ வேண்டாம்.
  • மேல்நிலை நீர்ப்பாசன முறை மூலம் வயல்களுக்கு நீர்ப்பாய்ச்ச வேண்டாம்.
  • முடிந்தவரை பாதிக்கப்பட்ட வயல்களை சீக்கிரம் அறுவடை செய்துவிட வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட பயிர்களை வயல்களிலிருந்து முடிந்தவரை விரைவாக அகற்றி, எரித்து விடவும்.
  • பாதிக்கப்பட்ட பயிர்களை வயலில் ஆழமாக புதைத்து, மக்குவதற்கு வழிவகை செய்யவும்.
  • இந்த நோயால் எளிதில் பாதிக்காத தாவரங்களை கொண்டு பயிர் சுழற்சிக்கு திட்டமிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க