மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு பாக்டீரியா கருகல் நோய்

Xanthomonas axonopodis pv. manihotis

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் கோண வடிவிலான சிதைந்த புள்ளிகள் காணப்படும், இவை பெரும்பாலும் வெளிறிய ஒளிவட்டத்தால் சூழப்பட்டிருக்கும்.
  • காயங்கள் பெரிதாகி ஒன்றிணைந்து, கசிவுகள் ஏற்படலாம்.
  • கசிவுகளானது ஆரம்பத்தில் பொன்னிறத்திலும், பின்னர் அரக்குப் பிசின் நிற படிமங்களாக உருவாகும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு

அறிகுறிகள்

கடத்துத் திசுக்களின் கருகல், வாடல், நுனி கருகி இறந்து போவது மற்றும் சிதைவு ஆகியவை இவற்றின் அறிகுறிகளாகும். இலைகளில், கோண வடிவிலான சிதைந்த புள்ளிகள் தென்படும், இவை சிறிய நரம்புகளால் வரையறுக்கப்பட்டு, இலை மேற்பரப்பில் ஒழுங்கற்ற முறையில் பரவி காணப்படும். இந்தப் புள்ளிகள் பெரும்பாலும் வெளிறிய ஒளிவட்டத்தால் சூழப்பட்டிருக்கும். இந்தப் புள்ளிகள் வேறுபடுத்திக் காணக்கூடிய ஈரமான, பழுப்பு நிற காயங்களாக தொடங்கி, பெரிதாகி, ஒன்றிணையும் வரை, தாவரத்தின் அடிப்பகுதியில் மட்டுமே இருக்கும். பின்பு பெரும்பாலும் முழு இலையையும் அழித்துவிடும். காயங்கள் மற்றும் இலை குறுக்கு நரம்புகள் நெடுகிலும் கசிவுகள் வழிந்தோடும். இந்தச் செயல்முறை சாறு நிறைந்த பொன்னிற திரவத்துடன் தொடங்குகிறது, இது பின்னர் அரக்குப் பிசின் நிற படிமங்களாக உருவாகி, கடினமாகிறது. தொற்றுநோய்க்குப் பிறகு, இளம் தண்டுகள் மற்றும் இலைக்காம்புகளில் விரிசல் ஏற்பட்டு, கசிவுகள் வெளியேறும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பாதிக்கப்பட்ட விதைகளை சூடான நீரில் 60° செல்சியஸ் வெப்பநிலையில் 20 நிமிடம் ஊறவைத்து, அதைத் தொடர்ந்து மேலோட்டமான அடுக்குகளில் 30° செல்சியஸிற்கு இரவு முழுவதும் அல்லது 50° செல்சியஸ் வெப்பநிலையில் 4 மணி நேரம் உலர்த்துவது, பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கிறது. விதைகளை நீரில் மூழ்கச் செய்து, நீர் வெப்பநிலை 73 டிகிரி செல்சியஸை அடையும் வரை, மைக்ரோவேவ் ஓவனில் சூடாக்கி, அதனைத் தொடர்ந்து உடனடியாக நீரை அகற்றலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன், ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மரவள்ளிக்கிழங்கின் பாக்டீரியா கருகல் நோய்க்கு நேரடி இரசாயன கட்டுப்பாடு தற்போது எதுவும் இல்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்குமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம். மேலும் அதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் நோய்க்கிருமி இருப்பதை தயவுசெய்து தெரிவிக்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

சாந்தோமோனாஸ் ஆக்சோனோபோடிஸ் என்ற பாக்டீரியாவின் திரிபு காரணமாக இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன, இவை மரவள்ளிக்கிழங்கு செடிகளை (மணிஹோடிஸ்) எளிதில் பாதிக்கின்றன. பயிர் (அல்லது வயல்) களுக்குள், பாக்டீரியா காற்று அல்லது மழைச் சாரல் மூலம் பரவுகிறது. அசுத்தமான கருவிகளும் கிருமி பரவுவதற்கான ஒரு முக்கிய வழியாகும், அத்துடன் தோட்டங்கள் வழியாக, குறிப்பாக மழையின் போது அல்லது அதற்குப் பிறகு மனிதன் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் மூலமும் கிருமி பரவுகிறது. இருப்பினும், இந்த நோய்க்கிருமியின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், வெளிப்படையாக அறிகுறி ஏதும் இல்லாத நடவு பொருட்கள், துண்டுகள் மற்றும் விதைகள், குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் நெடுந்தூரம் விநியோகம் செய்யப்படுவதே ஆகும். நோய்த்தொற்றின் செயல்முறை மற்றும் நோயின் வளர்ச்சிக்கு 22-30 ° செல்சியஸ் உகந்த வெப்பநிலையுடன் 12 மணிநேரம் 90-100% ஈரப்பதம் தேவைப்படுகிறது. பாக்டீரியாக்கள் பல மாதங்கள் தண்டுகள் மற்றும் கசிவுகளில் உயிருடன் வாழ்வதற்கு சாத்தியம் உள்ளது, இது ஈரமான காலங்களில் அதன் செயல்பாட்டை புதுப்பித்துக் கொள்கின்றன. இந்தப் பாக்டீரியத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க புரவலன் அலங்கார செடி யூஃபோர்பியா புல்கெர்ரிமா (பாயின்செட்டியா) ஆகும்.


தடுப்பு முறைகள்

  • சான்றிதழ் பெற்ற ஆதாரங்களிலிருந்து விதைகளைப் பெறவும், உங்கள் பகுதியில் கிடைத்தால், எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பாதிக்கப்பட்ட இடத்திற்கு நெருக்கமாக அல்லது கீழ்நோக்கிய காற்றுப் பக்கம் நட வேண்டாம்.
  • சில தாவரங்கள் மட்டுமே அறிகுறிகளைக் காட்டினால் பாதிக்கப்பட்ட தாவரங்களை வெட்டி, அப்புறப்படுத்தி விடவும்.
  • பாக்டீரியாக் கொல்லி பயன்படுத்தி கருவிகள் வழக்கமான முறையில் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
  • பயிர் சுழற்சியை மேற்கொண்டு, குறைந்தபட்சம் ஒரு மழைக்காலத்திற்கு நிலத்தைத் தரிசாக விடவும்.
  • நோய்க்கிருமி உயிர்வாழக்கூடிய பாதிக்கப்பட்ட தாவர குப்பைகள் மற்றும் களைகள் அனைத்தையும் அகற்றி எரித்துவிட வேண்டும் அல்லது ஆழமாகப் புதைத்துவிட வேண்டும்.
  • வளரும் காலத்தில் நோயின் வளர்ச்சியைத் தாமதப்படுத்த மழைக்காலம் முடிவடையும் போது மரவள்ளிக்கிழங்கை நடவு செய்யுங்கள்.
  • மக்காச்சோளம் அல்லது முலாம்பழத்துடன் ஊடுபயிர் செய்வது மரவள்ளிக்கிழங்கிற்கு நன்மை பயக்கும்.
  • உரமிடுவதன் மூலம் மண்ணின் பொட்டாசியம் உள்ளடக்கத்தை அதிகரித்து நோயின் தீவிரத்தை குறைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க