உளுந்து & பச்சை பயிறு

அவரையின் பாக்டீரியா இலை கருகல் நோய்

Xanthomonas axonopodis pv. phaseoli

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் எலுமிச்சை-மஞ்சள் நிற ஓரங்களுடன் சிறிய, நீர் தோய்த்த புள்ளிகள் காணப்படும்.
  • புள்ளிகள் வறண்ட, பழுப்பு நிற, காய்ந்த சிதைவுகளாக வளரும்.
  • தாவரங்களில் இலை உதிர்வு ஏற்படக்கூடும்.
  • குன்றிய வளர்ச்சி காணப்படும்.
  • தண்டுகளின் மீது, சிவப்பு மற்றும் மஞ்சள் கோடுகள், அவற்றை உடைக்கும்போது மஞ்சள் நிற கசிவுகள் வெளியாகும்.

இதிலும் கூடக் காணப்படும்


உளுந்து & பச்சை பயிறு

அறிகுறிகள்

தாவரங்களின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் தொற்று ஏற்படலாம். நோய்க்கான அறிகுறிகள் தாவரங்களின் வயதை பொறுத்து சிறிது வேறுபடும். நாற்றங்காலிலிருந்து வளரும் நுனிகள் பாதிக்கப்பட்டு இருக்கும், பாதிக்கப்பட்ட விதைகளின் தண்டுகள் மற்றும் முதன்மை இலைகளில் கோணங்களை கொண்ட நீர் தோய்ந்த புள்ளிகள் காணப்படும். பகல் நேரத்தில் தாவரங்கள் வாடிய தோற்றத்துடன் காணப்படும். பிந்தைய வளரும் நிலைகளில் தொற்று நோய் ஏற்பட்டால், இலைகள் எலுமிச்சை-மஞ்சள் விளிம்புகளுடன் சிறிய, நீர் தோய்த்த புள்ளிகளுடன் காணப்படும். காலப்போக்கில், அவை பழுப்பு நிற, காய்ந்த புள்ளிகளாக வளர்ந்து தாவரங்களுக்கு காய்ந்த தோற்றத்தைக் கொடுக்கும். இவை இலை உதிர்வுக்கு வழிவகுக்கக்கூடும். பாதிக்கப்பட்ட தாவரங்கள் குள்ளமாக இருக்கும் மற்றும் அவை சிவப்பு-பழுப்பு அல்லது செங்கல்-சிவப்பு நிற சிதைவுகளை கொண்ட சில காய்களை உற்பத்தி செய்யும். தண்டுகள் சிவப்பு நிற கோடுகளுடன் காணப்படும். இது பெரும்பாலும் வெடித்து, மஞ்சள் நிற கசிவை வெளியிடும். காய்களின் வளர்ச்சியின் போது தொற்று ஏற்பட்டால், விதைகள் சுருங்கி, அழுகிப்போகும் அல்லது நிறம் மாறி காணப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், பாக்டீரியா சாந்தோமோனாஸ் ஆக்சோனோபொடிஸ் பிவி. ஃபாசோலிக்கு எதிரான மாற்று சிகிச்சை எதுவும் நாங்கள் அறியவில்லை. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் ஏதாவது ஒன்றை நீங்கள் அறிந்திருந்தால் எங்களை உடனே தொடர்பு கொள்ளவும். உங்களிடமிருந்து தகவலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். நீண்டகாலத்திற்கு பாக்டீரியா நோய் எதிர்ப்பு திறனை உருவாக்கும் என்பதால் இந்த நோய்க்கான இரசாயன சிகிச்சையானது பயனுள்ளதாக இருக்காது. விதைகளை 500 பிபிஎம் ஸ்ட்ரெப்டோசைக்ளின் கரைசலில் விதைப்பதற்கு முன் 30 நிமிடங்கள் ஊற வைக்கலாம். பாக்டீரியா கொல்லிகள் தேவைப்பட்டால், காப்பர் ஆக்ஸிகுளோரைடு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பேக்டீரியா கொல்லிகள் (2 கிராம் / லி ஸ்ட்ரெப்டோமைசின் அல்லது பிளாண்டோமைசின்) கொண்ட தயாரிப்புகளை இலைத்திரள் சிகிச்சையாகப் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

பாக்டீரியா சாந்தோமோனாஸ் ஆக்சோனோபொடிஸ் பிவி. ஃபாசோலி பல ஆண்டுகளுக்கு மண், விதைகளின் தோல், மாற்று புரவலன்கள் மற்றும் தாவர சிதைவுகளில் செயலற்ற நிலையில் உயிர் வாழும். மழை, ஈரமான மற்றும் சூடான வானிலை (25-35 டிகிரி செல்சியஸ்) மற்றும் ஈரப்பதம் இந்த பாக்டீரியாவிற்கு சாதகமான சூழ்நிலையாகும். காற்று வீசும் மழை, மழைப்பொழிவு மற்றும் பூச்சிகள் (வெட்டுக்கிளிகள் மற்றும் பீன் வண்டுகள்) மூலம் இந்த நோய் கடுமையாக பரவுகிறது. தாவரங்களில் ஏற்படும் இயற்கையான துறைகள் மற்றும் சிதைவுகளும் இந்த நோய் ஏற்படுவதற்கு சாதகமாக அமையும்.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட, நோய்தொற்று இல்லாத விதைப் பொருட்களை பயன்படுத்துங்கள்.
  • நோய்களை தாக்குப்பிடிக்கும், சகிப்பு தன்மை கொண்ட , நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகளை நடவு செய்யவும்.
  • நோய் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என உங்கள் தாவரங்கள் அல்லது வயல்களை சோதிக்கவும்.
  • வயல்களில் தாவரங்களை சரியான நேரத்தில் நடவு செய்ய வேண்டும்.
  • தெளிப்பான் நீர்ப்பாசனத்தை தவிர்க்கவும்.
  • உங்கள் உபகரணங்கள் மற்றும் கருவிகள் சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றி, அவற்றை எரித்து அழித்துவிடவும்.
  • பருவகாலத்தில் புரவலன் அல்லாத பயிர்களைக் (மக்காச்சோளம்) கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க