மற்றவை

தலைக்கரணை நோய்

Agrobacterium

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • திராட்சைக் கொடிகளின் அடி தண்டுகளில் கரணைகள் காணப்படும்.
  • வெயில் காலத்தின் ஆரம்பத்தில், வெப்பநிலை 20° செல்சியசிற்கு மேல் இருக்கும்போது சிறிய தடிப்பு போன்ற புறவளர்ச்சி ஆரம்பத்தில் தோன்றும்.
  • இந்த தடிப்பு விரைவாக வளர்ந்து, வெளிறிய நிறத்தில், கிட்டத்தட்ட கோள வடிவிலான கரணைகளை உற்பத்தி செய்யும், அவை கணிசமான பரிமாணங்களை அடையும்.
  • அவை முதிர்ச்சியடையும்போது, அவை வடிந்து, சிதைவுகளாக, கருத்த நிறமாக மாறும்.

இதிலும் கூடக் காணப்படும்

4 பயிர்கள்
பாதாம் பருப்பு
திராட்சை
ஆலிவ்
குழிப்பேரி

மற்றவை

அறிகுறிகள்

திராட்சைக் கொடிகளின் அடிமரங்களில் ஏற்படும் கரணைகள் இந்த நோயின் பொதுவான அறிகுறியாகும். அடிமரங்கள் மற்றும் தலைப்பகுதியை (இதனால் தான் இந்த நோய் இப்பெயர் பெற்றது) தவிர, இந்த தடிப்புகள் இணைப்புகளிலும் அதனை சுற்றிலும், வேர்களிலும் ஏற்படும். வெயில் காலத்தின் ஆரம்பத்தில், வெப்பநிலை 20° செல்சியசிற்கு மேல் இருக்கும்போது சிறிய தடிப்பு போன்ற புறவளர்ச்சி ஆரம்பத்தில் தோன்றும். இந்த தடிப்பு விரைவாக வளர்ந்து, மென்மையான, பஞ்சு போன்ற, கிட்டத்தட்ட கோள வடிவிலான கரணைகளை உற்பத்தி செய்யும், அவை கணிசமான பரிமாணங்களை அடையும். அவை முதிர்ச்சியடையும் போது, அவை வடிந்து, சிதைவுகளாக, கருத்த நிறமாக மாறும். கரணை வளர ஆரம்பித்தவுடன், அவை திராட்சைக் கொடி அல்லது பாதிக்கப்பட்ட மரத்தின் கிளைகளை துளையிட்டு, தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஓட்டத்தை சீர்குலைக்கலாம். இது வளர்ச்சியை மட்டுப்படுத்தி, இளம் கொடிகள் அல்லது மரங்களை கருகிப்போக செய்யக்கூடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

எதிர்வினையூக்கி பாக்டீரியா அக்ரோபாக்டீரியம் ரேடியோபாக்டர் வகை கே-84 ,பயிரிடப்பட்ட பல பயிர்களில் தலைக்கரணை நோயை திறம்பட கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. துரதிருஷ்டவசமாக, இந்த முறை திராட்சைக் கொடிகளில் பயனளிக்கவில்லை. பாக்டீரியம் ஏ.விடிஸ் இன் எஃப் 2 / 5 ஐப் பயன்படுத்தும் மாற்று வழிமுறையானது நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளது, ஆனால் அவை வணிக ரீதியாக இன்னும் கிடைக்கவில்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். தலைக்கரணை நோய்க்கு (பாக்டீரியாகொல்லிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள்) எதிராக தற்போது கிடைக்கக்கூடிய இரசாயன சிகிச்சைகள் பயனுள்ளதாக இல்லை, ஏனெனில் அவை அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கின்றன , பாக்டீரியா நோய்த்தொற்றை அகற்றாது. திராட்சைக் கொடிகள் மற்றும் பயிரிடும் தளங்களுக்கு காயங்கள் ஏற்படாமல் பாதுகாப்பதன் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

தலைக்கரணை என்னும் நோய் திராட்சை கொடிகள் மற்றும் பிற முக்கிய பீச் மரங்களில் நீண்ட கால பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான மரங்களை பாதிக்கிறது. இது அக்ரோபாக்டீரியம் விடிஸ் என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது, இவை நிலத்தில் அல்லது மண்ணில் புதைக்கப்பட்ட தாவரக் கழிவுகளில் பல ஆண்டுகளுக்கு உயிர்வாழக்கூடியது. இவை பின்னர் உட்செலுத்துவதற்கு புதிய மூலமாக மாறி, புதிய மரங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைகிறது. ஏதேனும் காயம் ஏற்பட்ட தளங்கள் நோய் கிருமி பரவுவதற்கு முக்கிய மூலமாக அமைந்து, கரணை உருவாவதற்கு வழிவகுக்ககூடும். இந்த காயங்கள் பாதகமான காலநிலைகள் (உறைபனி, ஆலங்கட்டி மழை), வேர்களின் மீதான இயந்திர உராய்வு அல்லது வயலில் வேலை செய்யும் போது ஏற்படும் காயங்கள் (சீர்திருத்தம், இணைப்புகள், உறிஞ்சிகளை அகற்றுதல்) ஆகியவற்றால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா எந்த அறிகுறியும் ஏற்படுத்தாமல் பல ஆண்டுகளுக்கு உயிர் வாழும் மரம் மற்றும் தாவர திசுக்களில் வாழக்கூடியது. எனவே, பகுதிகளில் இடையே நோய் பரவுதல், வெளிப்படையாக ஆரோக்கியமான தாவர துண்டுகளை போக்குவரத்து செய்வதன் மூலம் நடைபெறும். நோய்க்கான மோசமான விளைவுகளைத் தவிர்க்க பொருத்தமான வயல் தளத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். உதாரணமாக, குளிர்காலத்தில் உறைபனி காயங்கள் பொதுவாக ஏற்படும் இடங்களில், தலைக்கரணை நோய் ஏற்படும் அபாயம் அதிகம்.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து ஆரோக்கியமான நடவு பொருள்களை தேர்வு செய்யவும்.
  • உறைபனி காயங்களுக்கு அதிக எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகளை நடவு செய்யவும்.
  • நோய்த்தொற்றை தவிர்க்க சரியான வயல் தளத்தை தேர்வு செய்வது முக்கியம், குறிப்பாக உறைபனி வெப்பநிலை அடையும் பகுதிகளில் மிகவும் முக்கியம்.
  • முன்பு தலைக்கரணை ஏற்படாத வயல்களில் திராட்சைகளை நடவு செய்யவும்.
  • காற்றோட்டத்தை அதிகரிக்கவும் உதாரணமாக சீர் திருத்தம் செய்வதன் மூலம் அதிகப்படுத்தலாம்.
  • வயலில் நல்ல வடிகால் வசதியையும் அனுமதிக்கவும்.
  • வயலில் வேலை செய்யும்போது தாவரங்களுக்கு சேதங்கள் ஏற்படுத்துவதை தவிர்க்கவும்.
  • சந்தேகத்திற்குரிய நடவு பொருட்களை பிற திராட்சை தோட்டங்களுக்கு எடுத்துச் செல்வதை தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க