நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நாரத்தை பசுமைக் கோளாறு

Liberibacter asiaticus

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் பன்னிற புள்ளிகள்.
  • நரம்புகள் மஞ்சள் நிறமாகுதல்.
  • மரங்களின் வளர்ச்சி குன்றுதல்.
  • முதிர்வதற்கு முன்னரே இலை உதிர்தல்.
  • பழுத்த பிறகும் பழங்கள் பச்சை நிறமாகி, அவற்றின் வளர்ச்சி ஸ்தம்பித்து போகுதல்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

முதல் அறிகுறியானது பொதுவாக மரத்தில் தோன்றும் மஞ்சள் நிற தண்டுப்பகுதியாகும். இதன்மூலம், இந்த நோய்க்கான பொதுவான பெயர் ஹூவாங்லாங்பிங் (அதாவது மஞ்சள் டிராகன் நோய் என்று பொருள்) ஆகும். இலைகள் சீராக வெளிர் மஞ்சள் நிறமாகி, துத்தநாகம் அல்லது மாங்கனீஸ் பற்றாக்குறையை ஒத்திருக்கும் பன்னிற புள்ளியமைவு காணப்படும். இந்தக் குறைபாடுகளை தனித்து கூறுவதற்கு ஒரு பொதுவான வழி, குறைபாடுகளின் இந்த அறிகுறிகள் இலை நரம்புகள் நெடுகிலும் சமச்சீராக இருக்கும், இந்த நோயினுடையது சீரற்றதாக இருக்கும். தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மரங்களில் குன்றிய வளர்ச்சி, முன்கூட்டியே இலை உதிர்தல் மற்றும் கிளைகள் கருகுதல் போன்றவை காணப்படும். மரங்கள் பல பருவமற்ற பூக்களைக் கொண்டிருக்கும், பின்னர் இவை உதிர்ந்து, சிறிய ஒழுங்கற்ற பழங்கள் உருவாகும். இவை வெளிறிய தோலுடன், தடிமனாக, அடிப்பகுதியில் பச்சை நிறமாகவே இருக்கும். (இதன் காரணமாக இந்த நோய் நாரத்தை பசுமைக் கோளாறு என்னும் பெயர்பெற்றது).

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், இந்த நோய்க்கு எதிரான எந்த உயிரியல் சிகிச்சையும் எங்களுக்குத் தெரியாது. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அறிந்திருந்தால் எங்களிடம் தெரிவிக்கவும். உங்களிடமிருந்து தகவல்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூச்சிக்கொல்லிகளின் சரியான பயன்பாடு, பிசில்லிட் நோய்க்காரணிகளை நன்கு கட்டுப்படுத்தி, இதனால் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது. நுண்ணுயிர்கொல்லி டெட்ராசைக்ளின் என்பவற்றை மரப்பட்டையினுள் செலுத்துவதன்மூலம் ஓரளவு நோயிலிருந்து தாவரங்களை மீளவைக்கலாம். ஆனால் நல்ல விளைவுகளை ஏற்படுத்த அடிக்கடி அவ்வாறு செய்ய வேண்டும். டெட்ராசைக்ளின் தாவரங்களுக்கு நச்சு விளைவிக்ககூடியது, மேலும் இவை சுற்றுசூழலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக, சமீப காலமாக இதன் பயன்பாடு குறைந்துள்ளது.

இது எதனால் ஏற்படுகிறது

ஹூவாங்லாங்பிங் (ஹெச்எல்பி) அறிகுறிகளானது பாக்டீரியா கேண்டிடேட்டஸ் லிபரிபாக்டர் ஆசியடிகஸ் என்பவற்றால் ஏற்படுகிறது. இந்த நோய் இரண்டு பிசில்லிட் நோய்க்காரணிகளால் தொடர்ந்து பரவுகிறது. டையாபோரினா சிட்ரி மற்றும் ட்ரியோசா எரிட்ரியே என்னும் இரு நோய் காரணிகள் நாரத்தையின் வரிப்பள்ளத்தில் எங்கும் காணப்படுகிறது. முதிர்ந்த மற்றும் இளம் பூச்சிகள் இரண்டும் ஹெச்எல்பி யை தொற்றிக்கொள்கிறது, மேலும் இது தன் 3-4 மாத ஆயுட்காலம் முழுவதும் நோயை பரப்புகிறது. ஹுவாங்லாங்பிங் முறையானது மற்றும் அறிகுறிகள் காணப்படுவதற்கு மூன்று மாதங்கள் முதல் பல ஆண்டுகள் வரை அடைகாப்பு காலத்தைக் கொண்டுள்ளது. மாறுபடும் பரிமாற்ற விகிதங்கள் இருந்தாலும், இந்த நோய் பதியன் முறை வாயிலாகவும் பரவுகிறது. விதையின் மூலம் கூட நோய் பரவலாம். மற்ற நோய்கள் அல்லது கோளாறுகள் கூட பலவண்ண புள்ளியமைவுகளை இலைகளில் கொண்டிருக்கும். இதனால், இந்த அறிகுறியின் காரணங்களை கண்டுபிடிப்பதற்கு திசுக்களின் மாதிரிகளை ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்ய அனுப்புமாறு பரிந்துரைக்கப்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • உங்கள் நாட்டில் உள்ள சாத்தியமான நோய்தொற்று தடுப்பு ஒழுங்குமுறைகள் பற்றி அறிந்து வைத்திருங்கள்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என நாரத்தை தோட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட மரங்களை உடனே அகற்றிவிடவும்.
  • நாரத்தை மர வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் கருவிகளின் மத்தியில் தூய்மையை பராமரிக்கவும்.
  • முராயா பானிக்குலேட்டா, செவரினியா புக்ஸிஃபோலியா போன்ற சில்லிட்சின் மாற்று புரவலன்கள் மற்றும் நாரத்தை போன்று அதே இனத்தைச் சேர்ந்த பிற தாவரங்கள் (ருடேசே) ஆகியவற்றை அகற்றிவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க