நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நாரத்தை பல்வண்ண பச்சையசோகை

Xylella fastidiosa subsp. pauca

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளின் மேல்புறத்தில் நரம்புகளுக்கு இடையேயான மஞ்சள் நிறமாற்றம்.
  • இலைப் பரப்பின் கீழ்ப்பகுதியில் உள்ள வெளிறிய பகுதிகளுக்கு கீழ் சிறிய, சற்று உயர்ந்த காயங்கள் காணப்படும்.
  • மரங்களின் வளர்ச்சி குன்றுதல், பாதிக்கப்பட்ட கிளைகளில் இலை உதிர்தல் மற்றும் பழங்களின் அளவு குறைந்து போகுதல் போன்றவை காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

நாரத்தை பல்வண்ண பச்சையசோகையால் பாதிக்கப்பட்ட தாவரங்கள் துத்தநாகக் குறைப்பாட்டினால் ஏற்படும் அறிகுறிகளுடன் ஒத்திருக்கும். முதிர்ச்சியடைந்த இலைகளின் மேல்புறத்தில் நரம்புகளுக்கு இடையே வெளிறியசோகை ஏற்படும். சிறிய, வெளிர் பழுப்பு நிற, சற்று உயர்ந்த புள்ளிகள் படிப்படியாக இலைகளின் அடிப்பகுதியில் வெளிறிய திசுக்களுக்கு அடியில் தோன்றும். இந்த ஆரம்ப கால அறிகுறிகள் ஒரு கிளையில் மட்டுமே வரையறுக்கப்பட்டது. வெளிறிய பகுதிகள் படிப்படியாக இலை ஓரங்களை நோக்கி பெரிதாகும், மற்றும் இலைகளுக்கு அடியில் இருக்கும் காயங்கள் கரும்பழுப்பு நிறமாகலாம் அல்லது சிதைந்து போகலாம். பாதிக்கப்பட்ட மரங்கள் குறைவான வீரியத்தை வெளிப்படுத்துகின்றன, மேலும் அவை குன்றிய வளர்ச்சியுடன் காணப்படும், ஆனால் பொதுவாக இவை இறக்காது. கிளை முனைகளில் இலை உதிர ஆரம்பிக்கும், வழக்கமாக இளம் இலைகள் உதிர ஆரம்பிக்கும். கிளைகள் விழுவதன் காரணமாக பழங்களில் வேனிற்கட்டி அல்லது நிறமாற்றம் காணப்படும். இவை கடினமான பட்டைகள், சாறு பற்றாக்குறை மற்றும் அதன் சதை அமில சுவையைக் கொண்டிருத்தல் போன்றவற்றையும் கொண்டிருக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கோனாட்டோசிரஸ் இனங்களின் சில ஒட்டுண்ணி வண்டுகள் இந்த நோய்ப்பூச்சியின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த சிறிய வண்டுகளின் முட்டைப்புழுக்கள் அவற்றின் முட்டைக்குள் வளர்ந்து, மற்றும் வளரும் கருமுட்டையை அழிக்கும். முறுக்கிய-இறக்கை ஒட்டுண்ணிகளும் (ஸ்டிரப்சிப்டெரன்ஸ்) இந்த நோய்ப்பூச்சி உட்பட, பல வகையான பூச்சிகளைப் பாதிக்கும். மான்டிட்ஸ் போன்ற இரைப்பிடித்துண்ணி பூச்சிகள், சில சிலந்தி வகைகள் மற்றும் பச்சோந்தி போன்றவை இந்த நோய்ப்பூச்சியின் சில பிற இயற்கை எதிரிகளாகும். ஹிர்சூடெல்லா இனத்தின் சில பூஞ்சைகளும் இந்த பூச்சிகளைத் தாக்கி, குளிர்ந்த, ஈரமான நிலைமைகளின் போது அவற்றை பதனிடச் செய்கிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். தோட்டங்களைக் கண்காணிப்பதன் மூலம் அல்லது மஞ்சள் நிற ஒட்டும் அட்டைகளை தொங்க விடுவதன் மூலம் நோய்க் காரணிகளின் எண்ணிக்கையைக் கண்காணிக்கலாம். அசிட்டாமிப்ரிட் கொண்ட முறையான மற்றும் மேற்பூச்சு பூச்சிக்கொல்லிகள் இந்த நோய்ப் பூச்சிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

நாரத்தை பல்வண்ண பச்சையசோகை என்னும் நோய்க்கான அறிகுறிகளானது க்சைலெல்லா ஃபாஸ்டிடியோசா என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது மரத்தில் உள்ள காற்றுக்குழாய் திசுக்களில் (சைலக்குழாய் என்று அழைக்கப்படுகிறது) வாழும் ஒரு முறையான நோயாகும். மேலும் இவை விதைகள் உட்பட விதானம் மற்றும் பழங்களுக்கும் பரவும். இது சிகாடெல்லிடே இனத்தின் (ஷார்ப்ஷூட்டர்ஸ்) பல்வேறு பூச்சிகளால் மரங்களுக்கு மரம் தொடர்ந்து பரவுகிறது. இந்த இலைத் தத்துப்பூச்சிகள் தாவர சைலக்குழாய் திசுவில் உள்ள சாறுகளை உண்டு மற்றும் உண்ட இரண்டு மணி நேரங்களுக்குள் பாக்டீரியாவை தொற்றச் செய்யும். இவற்றின் அதிகப்படியான உண்ணும் விகிதம் மற்றும் இவை தொற்றிக்கொள்ளும் நோயானது இவற்றைப் பாதிக்காது என்பது இவற்றை சிறந்த நோய்க்காரணி ஆக்குகிறது. நோய்த் தோற்று ஏற்பட்ட ஓராண்டுகளுக்குப் பிறகு அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும் மற்றும் இவற்றைக் கண்டுபிடிப்பதும், அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதும் மிகவும் கடினம்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் நாட்டில் உள்ள நோய்த்தொற்று தடுப்புக் கட்டுப்பாடுகளை சரிபார்க்கவும்.
  • சான்றளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து தாவரப் பொருட்கள் மற்றும் விதைகள் பெறுவதை உறுதி செய்துகொள்ளவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என தொடர்ந்து தோட்டங்களைக் கண்காணிக்கவும்.
  • அனைத்து ஊழியர்களும் பார்வையாளர்களும் சுகாதார நடைமுறைகளைக் கடைபிடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • தோட்டத்திலிருந்து பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றவும்.
  • தோட்டத்தில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள மாற்றுப் புரவலன்களைக் கண்டறியவும்.
  • முழுமையான களை மேலாண்மையை மேற்கொள்ளவும்.
  • பூச்சிகளைக் கண்காணிக்க மற்றும் அவற்றை பிடிக்க ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க