சோயாமொச்சை

பாக்டீரியக் கொப்புளங்கள்

Xanthomonas axonopodis pv. glycines

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • இலேசான பச்சைப் புள்ளிகள், மையப்புள்ளிகளுடன் இணைந்து இலையின் இருபுறங்களிலும் வளரும்.
  • கொப்புளங்கள் இந்த மையப்பகுதியில் உருவாகும்.
  • பழுப்பு நிற ஒழுங்கற்ற சிதைவுகள் ஏற்படும்.
  • திட்டுகள் விழுந்துவிடும் மற்றும் இலைகளுக்கு ஒரு முரட்டுத் தன்மையான தோற்றத்தினை அளிக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

சிறிய , இலேசான பச்சைப் புள்ளிகள், மையப்புள்ளிகளுடன் இணைந்து இளம் இலைகளின் இருபுறங்களிலும் வளரும். இந்தப் புள்ளிகள் மையங்களை உயர்த்தியுள்ளன மற்றும் பின்னர் சிறிய லேசான பழுப்பு அல்லது ஆரஞ்சு வண்ணம் கொண்ட கொப்புளங்களாக உருவாகும், இந்தக் கொப்புளங்கள் இலை நரம்புகளுக்கு இணையான வகையில் உருவாகும். இந்த நோயின் அடுத்தடுத்த நிலைகளில், கொப்புளங்கள் அழிந்து பெரிய பழுப்பு நிற ஒழுங்கற்ற சிதைவுகளாக மாறும். இந்த அழிந்த அமைப்பு காற்றினால் கிழிக்கப்பட்டு, இலைக்கு ஒரு முரட்டுத் தன்மையான தோற்றத்தினை அளிக்கும். இந்த சிதைவுப் புள்ளிகள் கனிகளிலும் உருவாகலாம். நோய் பாதிப்பினால், இலைகள் முதிரும் முன்பே உதிரலாம் மற்றும் விதையின் அளவு மற்றும் எண்ணிக்கை குறையும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், ஃஸாந்தோமோனாஸ் ஆக்ஸோனோபோடிஸ் எனும் இந்த பாக்டீரியாக்களுக்கு எதிராக தற்போது எங்களிடம் எவ்வித மாற்று சிகிச்சை முறைகளும் இல்லை. எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம் இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொண்டு பிறருக்கும் உதவவும். உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

எப்போதும் உயிரியல் முறைப்படி செடிகளுக்கு சிகிச்சையளிப்பதை, பாதுகாக்கும் வழிமுறைகளுடன் சேர்த்துக் கையாளவும். காப்பரை அடிப்படையாகக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளை (உதாரணமாக காப்பர் ஆக்ஸிகுளோரைடு, ஒரு லிட்டர் நீரில் 3 கிராம்) நோயின் ஆரம்ப காலத்திலேயே பயன்படுத்தி விரும்பிய விளைவை உறுதி செய்ய வேண்டும். .

இது எதனால் ஏற்படுகிறது

இந்த அறிகுறிகள் க்ஸாந்தோமோனஸ் அக்ஸோனோபோடிஸ் கிளைசின்ஸ் என்னும் பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. விதை வழியே பரவும் இந்த பாக்டீரியா பயிரின் எஞ்சிய பாகங்களிலின் துணைகொண்டு மண்ணில் உயிர்வாழும் தன்மை கொண்டவை. இவை காற்று, நீர்த்துளிகள் மற்றும் பூச்சிகள் மூலம் பயிர்களுக்கு பரவுகின்றன மற்றும் பயிர்களில் உள்ள இயற்கையான நுழைவுகள் அல்லது உருவாகும் காயங்கள் மூலம் பாக்டீரியாக்கள் உள்நுழைகின்றன. பருவத்திற்கு முந்தைய காலத்தில் இந்நோய் பாதிக்கிறது ஆனால் பிற்கால பாதிப்புகளும் ஏற்படலாம். அடிக்கடி மழைச்சாரல் மற்றும் ஈரமான இலைகளுடன் கூடிய, சூடான மற்றும் ஈரமான சூழ்நிலைகளில் இந்த நோய் ஊக்கமளிக்கப்படுகிறது. 30-33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இந்நோய் வளர்ச்சிக்கு ஏதுவான வெப்பநிலையாகும். பொட்டாஷ் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை இந்த நோய்க்காரணியினை மேலாண்மை செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது.


தடுப்பு முறைகள்

  • தடுப்புவகைப் பயிர்களைப் பயிரிடவும்.
  • நோய்க்காரணி அல்லாத விதைகளை மட்டும் பயன்படுத்தவும்.
  • புரவலன் அல்லாத பிறவகைப் பயிர்களுடன் பயிர்சுழற்சி செய்யவும்.
  • களப்பணிகளின்போது பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், முக்கியமாக இலைகள் ஈரமாக இருக்கும்போது கவனமாக வேலை செய்யவும்.
  • உங்களின் உரமளித்தலில் பொட்டாஷ் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதை உறுதிசெய்யவும்.
  • நிலத்தினை சுகாதாரமாக வைத்திருக்கவும்.
  • அறுவடைக்குப் பின்னர் மீதமிருக்கும் எஞ்சிய பயிர் பகுதிகளை எரிக்கவும் மற்றும் நீக்கவும் அல்லது ஆழமாக உழுதுவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க