மற்றவை

ஒளிவட்டம் கருகல் நோய்

Pseudomonas savastanoi pv. phaseolicola

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் நீர் தோய்த்த புள்ளிகள்.
  • மஞ்சள் கலந்த பச்சை நிற ஒளிவட்டத்தால் சூழப்பட்டிருக்கும்.
  • மையப்பகுதி தோல் நிறமாக மாறும்.
  • காய்களில் நீர் தோய்த்த, அடர் பச்சை நிற புள்ளிகள் அல்லது கோடுகள்.
  • பிசுக்கு போன்ற தோற்றம்.

இதிலும் கூடக் காணப்படும்


மற்றவை

அறிகுறிகள்

சிறிய, ஒழுங்கற்ற நீர்-தோய்த்த புள்ளிகள் முதலில் இலைகளில், பெரும்பாலும் மேற்பரப்பில் தோன்றும். நோயின் வளர்ச்சியுடன் புள்ளிகள் கணிசமாக பெரிதாகாது, ஆனால் அவை இலை பரப்பின் மேல் பகுதியில் உருவாகத்தொடங்கும். இந்த புள்ளிகளை சுற்றி பரந்த, வெளிறிய, மஞ்சள் கலந்த பச்சை நிற ஒளிவட்டங்கள் தோன்றும். சூடான, வறண்ட நிலைமைகளின் கீழ், புள்ளியின் மையப்பகுதியில் உள்ள திசு பழுப்பு நிறமாக மாறும், சிதையவும் செய்யும், அதே நேரத்தில் ஒளிவட்டங்கள் தெளிவாகவே தோன்ற ஆரம்பிக்கும். ஆரம்ப கட்டங்களில் பாதிக்கப்பட்ட தாவரங்களின் இலைகள் வளைந்து, வெளிறிய நிறமாக மாறும், ஆனால் வழக்கமான அறிகுறிகள் தென்பட வேண்டிய அவசியமில்லை. காய்களில் நீர் தோய்த்த, அடர் பச்சை நிற கோடுகள் அல்லது புள்ளிகள் தென்படும், இது ஈரப்பதமான, மழைக்காலத்திற்குப் பிறகு பழுப்பு நிறமாக மாறும். பல நாட்கள் வளர்ச்சிக்கு பின்னர் பாக்டீரியா திரவம் இலைகள் மற்றும் காய்களில் உள்ள புள்ளிகளுக்கு பிசுக்கு போன்ற தோற்றத்தை தருகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

லூபினஸ் அல்பஸ், எல். லுடியஸ் அல்லது பூண்டு ஆகியவற்றின் சாறுகள் பி. சவஸ்தனோய் பி.வி. பேசியோலிகோலாவிற்கு எதிராக சில பாக்டீரியாக்கொல்லி விளைவுகளை வழங்குகிறது. விதைகளுக்கு பயன்படுத்தப்படும் எர்வினியா ஹெர்பிகோலா பாக்டீரியாவின் வளர்ச்சியையும் தடுக்கிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிர்யில் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். விதைகள் மாசுபடுவதைக் குறைக்க அங்கீகரிக்கப்பட்ட ஆண்டிபயாடிக் மூலம் சிகிச்சையளிக்கலாம். பிந்தைய வளர்ச்சி நிலையின்போது தாமிரம் அடிப்படையிலான தெளிப்புகளைப் பயன்படுத்துவதும் ஓரளவுக்கு கட்டுப்பாட்டை வழங்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

சூடோமோனாஸ் சிரிங்கே பி.வி. ஃபெசியோலிகா என்பது ஒரு நோய்க்கிருமியாகும், இது விதைகள் மற்றும் மண்ணில் உள்ள தாவர எச்சங்களில் குளிர் காலத்தை செயலற்ற நிலையில் கழிக்கிறது. இது உயிர்வாழ்வதற்கு தாவர திசுக்கள் தேவை. ஈரமான வானிலையின் போது முதன்மை நோய்த்தொற்று ஏற்படுகிறது, தண்ணீர் தெளிக்கப்படும்போது மற்றும் மண் ஊதப்படும்போது இது இலைகளுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. மழைக்காலங்கள், ஆலங்கட்டி மழை அல்லது வயல் பணியின் போது தாவரங்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களும் இது பரவுவதற்கு சாதகமாக இருக்கும். குளிர்ந்த வானிலையானது (சுமார் 20 ° செல்சியஸ்) நோய்க்கிருமிகளின் வளர்ச்சியையும், தாவரங்களில் சிறப்பியல்பு அறிகுறிகளைத் தூண்டும் ஒருவகை நச்சு (ஃபெசியோலோடாக்சின்) வெளியீட்டையும் மேம்படுத்துகிறது. 25 ° செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை ஒளிவட்டம் உருவாவதைத் தடுக்கிறது. நோய்த்தொற்று தாவர உற்பத்தித்திறன், பழ விளைச்சல் மற்றும் தரம் ஆகியவற்றைக் குறைக்க வழிவகுக்கிறது.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட நோய்க்கிருமி இல்லாத ஆதாரத்திலிருந்து பெறப்பட்ட விதைகளைப் பயன்படுத்தவும்.
  • நெகிழ்வுத்திறன் கொண்ட வகைகளை நடவு செய்யவும்.
  • தாவரங்களின் பொதுவான வலுவிற்கு செறிவூட்டிகளை பயன்படுத்தவும்.
  • சாகுபடியின் போது இயந்திர சேதத்தைத் தவிர்க்கவும்.
  • வரப்பு அல்லது சொட்டு நீர் பாசன முறைகளைப் பயன்படுத்தவும்.
  • இலைத்திரள் ஈரமாக இருக்கும்போது வயலில் வேலை செய்வதை தவிர்க்கவும்.
  • களைகள் மற்றும் தானே வளரும் அவரை தாவரங்களை அகற்றவும்.
  • அறுவடைக்குப் பிறகு தாவர குப்பைகளை சிதைவுக்கு சாதகமாக ஆழமாக உழுது புதைக்கவும்.
  • குறைந்தது இரண்டு வருடங்களுக்கு புரவலன் அல்லாத பயிர்களை கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.
  • பாதிக்கப்பட்ட அவரை வைக்கோலை தழைக்கூளமாகப் பயன்படுத்த வேண்டாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க