சூரிய காந்தி பூ

சூரியகாந்தி தேமல் வைரஸ்

Potyvirus helitessellati

நோய்க்கிருமி

சுருக்கமாக

  • இலைகளில் மஞ்சள் மற்றும் பச்சை நிறத் திட்டுகள் (தேமல் அமைப்பு) காணப்படும்.
  • இலைகளின் மேற்பரப்பில் சிறிய மஞ்சள் புள்ளிகள் தோன்றும்.
  • செடிகள் குட்டையாகவும் பலவீனமாகவும் மாறும்.
  • சூரியகாந்திப் பூக்கள் சரியாக வளர்ச்சி அடையாமல், கம்மியான விதைகளுடன் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

0 பயிர்கள்

சூரிய காந்தி பூ

அறிகுறிகள்

ஆரம்பத்தில், இலைகளில் வெளிர் மற்றும் அடர் பச்சை நிறத் திட்டுக்கள் (தேமல் அமைப்பு) தோன்றும். இலைகளின் மேற்பரப்பில் சிறிய பிரகாசமான மஞ்சள் புள்ளிகள் உருவாகும். அறிகுறிகள் முதலில் செடியின் உச்சியில் உள்ள இளம் இலைகளில் தென்படும். 3 வாரங்களுக்குப் பிறகு கடுமையான அறிகுறிகள் தோன்றும். செடிகள் ஆரோக்கியமான சூரியகாந்திச் செடிகளை விடக் குட்டையாகவே இருக்கும். சூரியகாந்திப் பூக்கள் சிறியதாகவும், முழுமையாக வளர்ச்சி அடையாமலும் இருக்கும். குறைவான விதைகளே உருவாகும், மேலும் அவை சிறியதாகவும் இருக்கலாம். கடுமையான பாதிப்புகளில், இலைகள் பழுப்பு நிறமாக மாறி உதிர்ந்துவிடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த வைரஸ் நோய்க்கு உயிரியல் சிகிச்சை எதுவும் இல்லை. நீண்ட கால வைரஸ் தடுப்பிற்காக, அசுவினிப் பூச்சிகளைக் குறிவைக்கும் உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளை நல்ல வேளாண்மைப் பழக்கவழக்கங்களுடன் இணைத்துப் பயன்படுத்துங்கள்.

இரசாயன கட்டுப்பாடு

பாதிக்கப்பட்ட தாவரங்களை எந்த இரசாயனங்களாலும் குணப்படுத்த முடியாது. அசுவினிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நோய்த்தொற்றைத் தடுப்பதே கட்டுப்பாட்டு முறையாகும். வைரஸ் பரவுவதற்கு முன்பு, அசுவினிப் பூச்சிகள் முதன்முதலில் தோன்றும்போதே பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துங்கள். அசுவினிப் பூச்சிகள் மறைந்திருக்கும் இலைகளின் மேற்புறம் மற்றும் கீழ்ப்புறம் ஆகிய இரண்டிலும் தெளிக்கவும். காற்று வீசும் நாட்களிலோ அல்லது மழைக்கு முன்போ தெளிக்க வேண்டாம். எதிர்ப்புத்திறனைத் தடுக்க, பூச்சிக்கொல்லி வகைகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்துங்கள். எப்போதும் பாதுகாப்பு ஆடைகளை அணியுங்கள் மற்றும் லேபிளில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

இது எதனால் ஏற்படுகிறது

சூரியகாந்தி தேமல் வைரஸ், பொட்டிவைரஸ் ஹெலிடெசெல்லாட்டி (Potyvirus helitessellati) என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது. இது காட்டு ரகங்கள் உட்பட, உலகெங்கிலும் உள்ள அனைத்து சூரியகாந்தி ரகங்களையும் பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட விதைகள், புதிய நாற்றுகளுக்கும் வைரஸைப் பரப்பக்கூடும். பச்சை பீச் அசுவினிப் பூச்சிகள், பாதிக்கப்பட்ட செடிகளிலிருந்து ஆரோக்கியமான செடிகளுக்கு வைரஸைக் கொண்டு செல்கின்றன. அசுவினிப் பூச்சிகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் வெப்பமான காலநிலையில் இந்த வைரஸ் வேகமாகப் பரவுகிறது. மேலும், தொழிலாளர்கள் தங்கள் கைகள், ஆடைகள் அல்லது நோய்க்கிருமி உடைய விவசாயக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் மூலம் இந்த வைரஸை வயல் முழுவதும் பரப்பக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • நம்பகமான விநியோகஸ்தர்களிடமிருந்து சான்றளிக்கப்பட்ட, வைரஸ் இல்லாத விதைகளை வாங்குங்கள்.
  • அனைத்து விவசாய உபகரணங்களையும் கிருமி நீக்கம் செய்யுங்கள்.
  • வயலைச் சுற்றியுள்ள காட்டுச் சூரியகாந்தி மற்றும் சின்னியா செடிகளை அகற்றுங்கள்.
  • அசுவினிப் பூச்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது நடவு செய்யுங்கள் (இப்பூச்சிக்கான பருவம் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது நடவு செய்வதைத் தவிருங்கள்).
  • செடிகளில் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் அசுவினிப் பூச்சிகள் உள்ளதா என வாரந்தோறும் சோதியுங்கள்.
  • பாதிக்கப்பட்ட செடிகளை உடனடியாக அகற்றி, அவற்றை எரித்து அல்லது புதைத்துவிடுங்கள்.
  • வைரஸ்களைக் கொண்டிருக்கும் களைகள் இல்லாமல் வயலை சுத்தமாக வைத்திருங்கள்.
  • செடிகளைக் கையாண்ட பிறகு கைகளைக் கழுவி, கருவிகளைக் கிருமி நீக்கம் செய்யுங்கள்.
  • பயிர் சுழற்சி செய்யுங்கள் - ஒரே வயலில் 2-3 ஆண்டுகளுக்கு சூரியகாந்தியை நடவு செய்யாதீர்கள்.
  • புதிதாக நடப்பட்ட செடிகளைப் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து தள்ளி வைத்திடுங்கள்.
  • அசுவினிப் பூச்சிகளைக் குழப்புவதற்கு வெள்ளி நிற பிளாஸ்டிக் தழைக்கூளத்தைப் பயன்படுத்துங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க