மக்காச்சோளம்

மக்காச்சோளத்தின் வெளிறிய பல் வண்ண புள்ளிகளையுடைய வைரஸ்

MCMV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் எண்ணற்ற, சிறிய மஞ்சள் நிறப் புள்ளிகள் மற்றும் கோடுகள் காணப்படும்.
  • பிந்தைய நிலைகளில், வெளிறிய கோடுகள் அல்லது கொப்புளங்கள் முழு இலைக்கும் பரவக்கூடும்.
  • காது சீர்குலைவு, குறுகிய கணுவிடைப்பகுதி மற்றும் குன்றிய தாவர வளர்ச்சி போன்றவை காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


மக்காச்சோளம்

அறிகுறிகள்

பல்வேறு கலப்பினங்கள் / வகைகள் மற்றும் தாவரங்கள் எந்த நிலையில் இருக்கும்போது பாதிப்பு ஏற்படுகிறது ஆகியவற்றைப் பொறுத்து நோய் அறிகுறிகளின் தீவிரம் வேறுபடுகின்றன. இந்த நோயானது எண்ணற்ற, சிறிய மஞ்சள் நிறப் புள்ளிகள் மற்றும் இலைகளின் மீது நரம்புகளுக்கு இணையாக ஓடும் கோடுகள் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. இவை வளர்ந்து, இணைகையில், இவை வெளிறிய திசுக்களில் நீண்ட கோடுகள், பட்டைகள் அல்லது கொப்புளங்களை ஏற்படுத்தி, இறுதியாக இலை இறந்து போவதற்கு வழிவகுக்கிறது. குட்டையான கணுவிடைப்பகுதிகளுடன், தாவரங்கள் குன்றிய தோற்றத்தைக் கொண்டிருக்கும். கட்டையான மலர்க்காம்பு மற்றும் ஒரு சில கதிர்களுடன் ஆண் மஞ்சரிகள் உருக்குலைந்து போகும். குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய தாவரங்களில் அல்லது ஆரம்ப நோய்த்தாக்கத்தின் போது, காதுகள் முறையாக வளர்ச்சியடையாது, ஒவ்வொரு தாவரத்திலும் இவை குறைவான எண்ணிக்கையிலேயே காணப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வைரஸ்களால் ஏற்படும் நோய்களுக்கு நேரடியான உயிரியல் கட்டுப்பாடு எதுவுமில்லை. இந்த வைரஸ் ஏற்படுவதைத் தடுக்க, எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகளைப் பயன்படுத்துவதே சிறந்த வழிமுறையாகும். இந்த வைரஸின் காரணியாக செயல்படும் வண்டுகள், இலைப்பேன்கள் அல்லது சிற்றுண்ணிகளின் உயிரியல் கட்டுப்பாட்டுக்கான தரவுத்தளத்தைப் பார்க்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த வைரஸ் நோய்களை நேரடியாக கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும், வைரஸைப் பரப்பும் நோய்க் காரணிகளைப் பூச்சிக்கொல்லிகளின் மூலம் சமாளிக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது வைரஸினால் (எம்சிஎம்வி) ஏற்படுகிறது. இது பல வகையான பூச்சிகளால் பரவுகிறது: இலைத் தத்துப்பூச்சிகள், வண்டுகள் மற்றும் சில சிற்றுண்ணி இனங்கள் (டெட்ரானிக்கஸ் எஸ்பிபி) மற்றும் இலைப்பேன்கள் (பிராங்க்ளினியெல்லா எஸ்பிபி) மூலமும் இவை பரவக்கூடும். மக்காச்சோளம் புதிதாக வளர்க்கப்படும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட தாவரப் பொருட்கள் வழியாக எம்சிஎம்வி பொதுவாக பரவுகிறது. ஒரு முறை பரவிவிட்டால், மேற்கூறப்பட்ட பூச்சிகளின் உண்ணும் செயல்பாட்டினால் இந்த நோய் தொடர்ச்சியாகப் பரவுகிறது. மக்காச்சோளத் தாவரங்கள் இல்லாத நிலையில், இது முட்டைப்புழுக்களின் நிலையிலேயே குளிர் காலத்தைச் செயலற்ற நிலையில் கழிக்கும். இது விதை மூலம் பரவுவதாக கருதப்படவில்லை. எனினும் இயந்திரக் காயங்கள் மூலம் பரவுவது சாத்தியமாகும். அதிக வெப்பநிலை, தாவர அழுத்தம் மற்றும் நீண்ட கால ஈரப்பதம் ஆகியவை நோய் வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளன.


தடுப்பு முறைகள்

  • கிடைக்கப்பெற்றால், எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகளை நடவு செய்யவும், ஏனெனில் இது தான் நோய்க்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய மிகவும் முக்கியமான வழிமுறையாகும்.
  • வயல்களைத் தொடர்ந்து கண்காணித்து, பாதிக்கப்பட்ட ஏதேனும் தாவரங்களை அகற்றவும்.
  • வயலில் பணிபுரியும்போது மக்காச்சோளத் தாவரங்களுக்கு இயந்திர சேதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும்.
  • மாற்று களைப் புரவலன்களைக் குறிப்பாக, புல் போன்ற களைகளைக் கட்டுப்படுத்தவும்.
  • பயிர்க் குப்பைகளை மண்ணில் புதைக்க அறுவடைக்குப்பிறகு நிலத்தை உழவும்.
  • எளிதில் பாதிக்காத பயிர்களைக் கொண்டு ஓராண்டிற்கு பயிர்ச் சுழற்சியைத் திட்டமிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க