நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நாரத்தை வெளிறிய வளர்ச்சிக்குறைவு வைரஸ்

CCDV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • இளம் இலைகள் மற்றும் வளைந்த முனைக்கு அருகில் வி-வடிவ வெட்டுத்தடம் காணப்படும்.
  • ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக இலையில் வண்ணச்சிதறல் காணப்படும்.
  • கட்டையான கணுவிடைப்பகுதி காரணமாக, மரங்கள் கற்றை போன்ற, குன்றிய தோற்றத்துடன் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

இளம் இலைகளின் ஒரு பக்கம் அல்லது இரு புறங்களிலும் உள்ள உச்சி அருகில் மற்றும் படிப்படியாக கீழ்நோக்கி வளைந்து வி-வடிவ வெட்டுத்தடம் உருவாகும். முதிர்ந்த இலைகள் அளவில் குன்றி, மடிப்புடன் காணப்படும். இவை சுருங்குதல், தோய்தல், அல்லது தலைகீழான குவளையாக்கம் (தோணி போன்ற இலைகள்) உள்ளிட்ட பல்வேறு வகையான அங்க சிதைவுகளுடன் காணப்படும். வெளிறிய புள்ளிகள் அல்லது இலை திசுக்களின் நிறமாற்றம் ஆகியவையும் பொதுவாகக் காணப்படும், மேலும் இவை பெரும்பாலும் நோய்த் தாக்கத்தின் விளைவாக, ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் ஏற்படுகிறது. கட்டையான கணுவிடைப்பகுதி காரணமாக, பாதிக்கப்பட்ட இளம் மரங்கள் கற்றை போன்ற, வளர்ச்சி குன்றிய தோற்றத்துடன் காணப்படும். அறிகுறிகள் முதிர்ந்த மரங்களைக் கொண்ட கவிகைகளின் ஒரு பகுதியை மட்டுமே பாதிக்கும், மேலும் வைரஸ் பாதிக்கப்பட்ட 5 முதல் 8 வாரங்களுக்குப் பிறகு, முதல் அல்லது இரண்டாவது புதிய வளர்ச்சியின் போது தோன்ற ஆரம்பிக்கும். அறிகுறிகளின் வளர்ச்சியானது 20 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை காணப்படலாம், மேலும் அவை 30 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் அதிகமாகத் தோன்றும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும். சிசிடிவி நோய் ஏற்படுவதை அல்லது அதன் தீவிரத்தை குறைக்க எந்த உயிரியல் சிகிச்சையும் கண்டறியப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் ஏதாவது ஒன்றை நீங்கள் அறிந்திருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்களிடமிருந்து செய்தியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப் பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வைரஸ் நோய்களை இரசாயன தயாரிப்புகளைக் கொண்டு சிகிச்சை செய்ய முடியாது. பேய்பெர்ரி வெள்ளை ஈக்களை (பரபெமிசிய மைரிகே) அசிடமிப்ரிட், புப்ரோஃபெஸின் மற்றும் பைரிப்ரோக்ஸிஃபென் போன்றவற்றின் திறன்மிக்க ஊட்டங்கள் கொண்டு சிகிச்சையளிக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது நாரத்தை வெளிறிய வளர்ச்சிக்குறைவு வைரஸினால் (சிசிடிவி) ஏற்படுகிறது. தொற்று ஏற்பட்ட முதல் ஆண்டில், மரங்கள் எப்போதும் போல் பூப் பூக்கும், காய்க்கும், ஆனால் பின்வரும் ஆண்டுகளில், பூப் பூத்தல் மற்றும் கனிகளின் அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைந்து, மரங்களின் உயிர்மூல இழப்பைக் குறிக்கும். இது முக்கியமாக பதியன் முறையின் மூலம் பரவும் சீர்கேடாகக் கருதப்படுகிறது. ஆனால் இது பேபெர்ரி வெள்ளை ஈக்கள் (பாராபமீசியா மைரிக்கே) என்னும் பூச்சி காரணியால் சாத்தியமாக அதிவேகமாகவும் மற்றும் பரந்த அளவில் பரவுவதாகவும் கூறப்படுகிறது. பழங்களின் எண்ணிக்கை மற்றும் அளவு குறைப்பு காரணமாக சில நேரங்களில் சில வகை நாரத்தைகளில் கடுமையான இழப்புக்களை (50% திராட்சைப்பழம்) ஏற்படுத்தும் ஒரு கடுமையான நோயாக இது கருதப்படுகிறது. சில வகை நாரத்தைகள் (இனிப்பு ஆரஞ்சு) இந்த நோய்க்கு எதிரான சகிப்புத் தன்மையை உருவாக்கியுள்ளன ஆனால் பாதிக்கப்பட்ட அறிகுறிகளற்ற தாவரங்கள் இந்த நோயைப் பரப்பும் மூலக்காரணியாகச் செயல்படக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் நாட்டில் உள்ள நோய்த்தொற்றுத்தடுப்பு ஒழுங்குமுறைகளை சோதிக்கவும்.
  • நோய் பரவுவதைத் தவிர்க்க, சான்றிதழ் பெற்ற, நோய்க்கிருமி இல்லாத, நாரத்தை தாவரப் பொருட்களின் பிரத்யேக பயன்பாடு மிகவும் முக்கியம்.
  • கருவிகள் மற்றும் மரங்களை கையாளும் பணியாளர்களிடையே உயர் தர சுகாதாரத்தை பராமரிக்கவும்.
  • பயிர்செய்யப்படும் வயல்களுக்கு இடையே பாதிக்கப்பட்ட மரப் பொருட்களை எடுத்துச்செல்வதைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க