நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நாரத்தை எக்சோகார்ட்டிஸ் விராய்டு (செதில்முட்டு நோய்)

CEVd

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • பாதிக்கப்பட்ட வேர்மூலங்களால் வளரும் மரங்களில் அறிகுறிகள் காணப்படும்.
  • மர பட்டைகளின் செதிலாக்கம், விதானத்தின் பரந்த அளவிலான வெளிறியசோகை மற்றும் மரங்களின் வளர்ச்சி கடுமையாக குன்றுதல் போன்றவை இந்நோயின் தனிப்பட்ட அறிகுறிகளாகும்.
  • வேர்மூலங்கள் வைரஸ்களால் பாதிக்கப்படும் தன்மையில் மாறுபடும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

இந்த நோய்க்கான அறிகுறிகளானது கிட்டத்தட்ட 4 வயதுடைய பாதிக்கப்பட்ட வேர்மூலங்களில் வளரும் மரங்களில் காணப்படும். மர பட்டைகளின் செதிலாக்கம், விதானத்தின் பரந்த அளவிலான வெளிறியசோகை மற்றும் மரங்களின் வளர்ச்சி கடுமையாக குன்றுதல் போன்றவை இந்நோயின் தனிப்பட்ட அறிகுறிகளாகும். மரபட்டை செதிலாக்கம் என்பது பதியன் இணைப்புகள் ஒன்றிணையும் பகுதிகளுக்கு கீழ் உள்ள மரப்பட்டைகளில் காணப்படும் பிளவுகள் மற்றும் தோலுரிதல். பான்சிரஸ் டிரைஃபோலியேட்டா (டிரைஃபோலியேட் ஆரஞ்சு) வேர்மூலங்களில் வளரும் மரங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. சிட்ரேஞ்சு வேர்மூலங்களில் வளருவது சற்று தாமதமாக அறிகுறிகளை ஏற்படுத்தும். மரங்களின் வளர்ச்சி குன்றுதலானது அவ்வளவு கடுமையாக இருக்காது, மற்றும் அவை எப்போதும் மரபட்டை செதிலாக்க அறிகுறிகளை ஏற்படுத்தாது. பிற முக்கிய உணர்திறன் கொண்ட வேர்மூலங்கள் மீது ஏற்படும் பொதுவான அறிகுறிகளுள் மர சரிவு மற்றும் வேர் தண்டு அடிப்பகுதியில் உள்ள மரபட்டையில் எப்போதாவது செதிலாக்கம் ஏற்படுதல் போன்றவை அடங்கும். எக்ஸோகார்ட்டிஸ் பழ தரத்தில் நேரடி விளைவை ஏற்படுத்துவதில்லை, ஆனால் குறைந்த ஒளிச்சேர்க்கை விகிதங்கள் விளைச்சலைக் கணிசமான அளவு குறைக்கின்றன.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், இந்த வைரஸ் தொடர்பான எந்த உயிரியல் சிகிச்சை முறைகளும் எங்களுக்குத் தெரியாது. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அறிந்திருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்களிடமிருந்து செய்தியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கபெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். நாரத்தை மரங்களை நடவு செய்ய பயன்படுத்தப்படும் கருவிகளை 1% ப்ளீச் கரைசல்களில் (1% கிடைக்கக்கூடிய குளோரின்) கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது நாரத்தை எக்சோகார்ட்டிஸ் விராய்டு என்பவற்றால் ஏற்படுகிறது. எந்தவொரு அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல், அனைத்து நாரத்தை மரங்களிலும் இவை காணப்படும். மொட்டுக்களை கொண்ட பாதிக்கப்பட்ட நாற்றங்காலை பதியன் செய்து, அவை பாதிக்கப்பட்ட வேர்மூலங்களில் வளரும் போதுதான் (டிரைஃபோலியேட் ஆரஞ்சு, சிட்ரேஞ்சு) அறிகுறிகள் தென்படுகிறது. விராய்டு பல சாறுகளினால் எடுத்துச்செல்லப்பட்டு, அரும்புவிடுதல் அல்லது பதியன் நடவடிக்கைகளின் மூலம் மரத்திற்கு மரம் பரவுகிறது. அசுத்தமான கருவிகளை க்கொண்டு சீர்திருத்தம் செய்தல் இந்த நோய் பரவுவதற்கான மற்றொரு வழியாகும். மரத்தின் வேர்களை இயற்கையாக பதியனிடுவதும் மரங்களுக்கு இடையே நோயை பரப்புகிறது. பிற நாரத்தை வைரஸ்களுக்கு மாறாக, எக்சோகார்ட்டிஸ் தாவர சாற்றை உண்ணும் பூச்சிகளால் பரவுவதில்லை. எனவே இந்த நோயின் பூச்சி நோய்க்காரணிகள் தெரியவில்லை. விதைகள் மூலம் இந்த நோய் பரவுவது பற்றியும் தெரியவில்லை. எக்சோகார்ட்டிஸ் விராய்டு அதிக வெப்பநிலை மற்றும் உலர் நிலைமைகள் இரண்டுக்கும் அதிக அளவில் எதிர்ப்புத் திறனை கொண்டுள்ளது. மேலும் இவை நீண்ட காலத்திற்கு பரிமாற்றம் செய்யப்படும் பொருள் மற்றும் சீர்திருத்தம் செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்களில் செயல்பாட்டில் இருக்ககூடும்.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து மொட்டுக்கள் கொண்ட பதியன் கிளைகளை பெறுவதை உறுதி செய்து கொள்ளவும்.
  • ஆய்வகத்தில் வைரஸ் பரவியுள்ளதா என தாவரங்களையும், பரப்பும் பொருட்களையும் சோதிக்கவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என தோட்டங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • தோட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி, அழித்துவிடவும், இதனால் பிற மரங்களுக்கு அல்லது பகுதிகளுக்கு விராய்டு வைரஸ் பரவாது.
  • வேர் முளைத்தலை தடுக்கும் வகையில் வேர் அமைப்புகளின் பகுதியை அகற்றவும்.
  • நாரத்தை மர வளர்ப்பில் பயன்படுத்தப்படும் தொழிலாளர்கள் மற்றும் உபகரணங்கள் அனைத்திலும் உயர் நிலை சுகாதாரத்தை பராமரிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க