நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நாரத்தை நலிவு நோய்

CTV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • மரப்பட்டை மற்றும் தண்டுகளில் குழிகள் காணப்படும்.
  • இலை திரள்கள் மஞ்சள் நிறமாகுதல் மற்றும் பொதுவாக மர சரிவு காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

நாரத்தை நலிவு நோய் நோய்த்தொற்றின் அறிகுறிகள் மிகவும் மாறுபட்டவையாகும் மற்றும் இது புரவலன்கள், குறிப்பிட்ட வைரஸின் வீரியம் மற்றும் சுற்றுசூழலைச் சார்ந்திருக்கும். இதன் மூன்று பிரதான அறிகுறிகள்: மரத்தின் வீழ்ச்சி("நலிவு"), தண்டுகள் மற்றும் மரப்பட்டைகளில் ஏற்படும் குழிகள் மற்றும் இலைகள் மஞ்சள் நிறமாகுதல் போன்றவையாகும். இலைகள் வெளிறிய நிறமாகுதல் மற்றும் பாதிக்கப்பட்ட மரங்களின் பொதுவான கருகல் போன்றவை வீழ்ச்சியில் அடங்கும். வீழ்ச்சியென்பது முதல் அறிகுறிகள் கண்டறிந்த பிறகு, மெதுவாக பல மாதங்கள் முதல் ஆண்டுகள் வரை நீடித்திருக்கும். வீழ்ச்சியானது வேகமாக கூட இருக்கலாம், புரவலன்களின் இறப்பு முதல் அறிகுறிகள் கண்டறிந்தவுடன் சில நாட்களிலேயே ஏற்படும். சந்தேகத்திற்கிடமான தாவரங்கள் அதன் பட்டைகள் மற்றும் தண்டுகள் ஆகியவற்றில் அதிக எண்ணிக்கையிலான குழிகளை உருவாக்கின்றன. சில வகைகளில், பழங்கள் பிசு பிசு என்று ஒட்டுவதுடன் பட்டை எண்ணெய் நிற புள்ளிகள் அல்லது பழுப்பு நிற புள்ளிகளைக் கொண்டிருக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஒட்டுண்ணி குளவிகள் அல்லது ஆனைக்கொம்பன்களுடனான சில வயல்வெளி சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது நாரத்தை தோட்டங்களில் இயற்கையாக சில இலைப்பேன்களை கட்டுப்படுத்துகிறது. வணிக ரீதியாக கிடைக்கும் சூத்திரங்கள் (இயற்கை பைரெத்ரம், கொழுப்பு அமிலங்கள்), பூச்சிக்கொல்லி சோப்புகள் அல்லது தோட்டக்கலை எண்ணெய்கள் (தாவரம் அல்லது மீன் எண்ணெய்கள்) போன்றவற்றைப் பயன்படுத்தி இலைப்பேன்களை கட்டுப்படுத்தவும். தாவர இலைகளில், நீர் மற்றும் சில துளி சோப்பு கொண்ட லேசான கரைசலை தெளித்து இலைப்பேன்களை அப்புறப்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். வைரஸ்களை நேரடியான இரசாயன முறைகள் கொண்டு கட்டுப்படுத்த முடியாது. இலை பேன்களுக்கான இரசாயன கட்டுப்பாடு வழிமுறைகள் குறித்து தரவுதளத்தைச் சரிபார்க்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் நாரத்தை நலிவு நோய் வைரஸால் ஏற்படுகிறது, இது குறிப்பாக நாரத்தை தோட்டங்களில் தீவிரமான மற்றும் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய வைரஸாகும். இது குறிப்பாக டோக்ஸோப்டெரா சிற்றிசிடா என்னும் கருப்பு நிற நாரத்தை இலைப்பேன்களால் தொடர்ந்து பரவுகிறது. இந்த இலைப்பேன்கள் பாதிக்கப்பட்ட தாவரங்களை 5-60 நிமிடங்களுக்கு உண்ணும்போது வைரஸை தொற்றிக்கொள்கிறது. ஆனால் 24 மணி நேரத்திற்குப் பிறகு அது பரப்பும் திறனை இழக்கிறது. இந்த குடும்பத்தின் பிற பூச்சிகளும் இந்த வைரஸ் பரவுவதற்கு காரணமாக உள்ளது (எடுத்துக்காட்டாக பருத்தி இலைப்பேன், அபிஸ் காசிப்பி). அசுத்தமான பொருட்களை கொண்டு பதியந் செய்வதும், பிற வயல்களுக்கு வைரஸ் பரவுவதற்கு காரணமாக உள்ளது. அறிகுறிகளின் தீவிரம் வைரஸின் வீரியத்தைச் சார்ந்துள்ளது. சில வகைகள் குறிப்பிடத்தக்க அறிகுறிகளை ஏற்படுத்தாது. மற்ற வகைகள் கடுமையான சரிவு மற்றும் மரங்களின் இறப்பு அல்லது மரப்பட்டை மற்றும் தண்டுகளில் ஆழமான குழிகளை ஏற்படுத்துகின்றன. வைரஸ் தொற்று மற்றும் இனப்பெருக்கத்திற்கான உகந்த வெப்பநிலை 20-25° செல்ஸியஸ் ஆகும்.


தடுப்பு முறைகள்

  • நோய் பரவுவதைத் தவிர்க்க உங்கள் பகுதியில் இருக்கும் நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சரிபார்க்கவும்.
  • சான்றளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து பெறப்படும் தாவர பொருட்களை பயன்படுத்தவும்.
  • நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகளை பயன்படுத்தவும் (சில கலப்பின இனங்களும் இந்த வைரஸிற்கு எதிர்ப்பு திறனை கொண்டுள்ளன).
  • நாற்றங்கால்கள் மற்றும் பசுமையில்லங்களை நோய் பூச்சி காரணிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • நோய்தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்திற்கு உரிய நாரத்தை பொருட்களை பிற வயல்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என நாரத்தை தோட்டங்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் மற்றும் அதனை பரப்பும் பூச்சிகளையும் பற்றி அறிந்து வைத்திருங்கள்.
  • பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி, அழித்து விடவும்.
  • முதலில் இருக்கும் உங்கள் தாவரங்களில் இருந்து இலைப்பேன்களை தள்ளி வைப்பதற்கு துணை நடவுகளை பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க