மக்காச்சோளம்

மக்காசோளத்தை அழிக்கும் அழுகல் நோய்

MLND

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் மஞ்சள்-பச்சை நிறத்தில் பலவண்ண அமைப்புகள், பெரும்பாலும் நரம்புகளுக்கு இணையாகக் காணப்படும்.
  • விளிம்புகளில் இருந்து இலைகள் உலரத் தொடங்கி மற்றும் மைய நரம்பை நோக்கி நகரும்.
  • கடுமையான நோய்த்தொற்றுகளில், முழு தாவரங்களும் உலர்ந்து மற்றும் தண்டுகளின் உள்ளே இறந்த இதயங்கள் காணப்படும்.
  • வளர்ச்சி குன்றிப்போகும், மஞ்சரிகள் மலட்டுத் தன்மையாகும் மற்றும் சோளக்காதுகள் உருக்குலைந்து, பகுதியாக நிரம்பும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்கள் சந்தர்ப்பவாதப் பூஞ்சை மற்றும் நூற்புழுக்களுக்கு இலக்காகி, அழுகிப்போவதற்கு வழிவகுக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மக்காச்சோளம்

அறிகுறிகள்

நோய்த்தொற்று ஏற்பட்ட ஆரம்ப நிலையில், இலைகளில் மஞ்சள்-பச்சை நிறத்தில் பலவண்ண அமைப்புகள், அடிப்பகுதியிலிருந்து ஆரம்பித்து, பெரும்பாலும் நரம்புகளுக்கு இணையாகக் காணப்படும். நோயானாது வளரத் தொடங்கும்போது, இலைகள் உலரத் தொடங்கி, விளிம்புகளில் இருந்து மைய நரம்பை நோக்கி நகரும். கடுமையான நோய்த்தொற்றுகளில், இந்த நோயின் அறிகுறிகள் படிப்படியாகத் தாவரங்களின் எஞ்சிய பகுதிகளுக்குப் பரவி, தண்டுகளின் திறந்த பகுதிகளின் உள்ளே இறந்த இதயங்கள் காணப்படும். பாதிக்கப்பட்ட தாவரங்களின் வளர்ச்சி குன்றிப்போகும், மஞ்சரிகள் மலட்டுத் தன்மையாகும் மற்றும் சோளக்காதுகள் உருக்குலைந்து, குட்டையாகி, பகுதியாக நிரம்பும். பாதிக்கப்பட்ட தாவரங்கள் பலவீனமடைந்து மற்றும் சந்தர்ப்பவாத பூஞ்சை மற்றும் நூற்புழுக்களின் இலக்காகி, திசுக்கள் அழுகிப்போகுதல், தானியங்களின் அளவு மற்றும் தரம் சீர்குலைந்து போகுதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், இந்த நோய்க்கு எதிரான எந்த உயிரியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் நாங்கள் அறியவில்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வைரஸ் நோய்களுக்கான இரசாயன சிகிச்சை எதுவும் இல்லை. வைரஸ்களைப் பரப்பும் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த சில பூச்சிக்கொல்லிகளை விதைச் சிகிச்சை மற்றும் இலைத்தொகுதித் தெளிப்பான்களாக பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

அனைத்து மக்காசோளத் தாவரங்களும் நோய் ஏற்புத்திறன் கொண்டவை. இருப்பினும், இணையும் வைரஸ்கள், சுற்றுச்சூழல் நிலைகள் மற்றும் தாவரத்தின் வளரும் தன்மையுடைய நிலை ஆகியவற்றைப் பொறுத்து அறிகுறிகள் கணிசமாக வேறுபடுகின்றன. இந்த நோய் உண்மையில் இரண்டு வைரஸ்கள் மூலம் ஏற்படுகிறது, மக்காச்சோளம் வெளிறிய புள்ளி வைரஸ் மற்றும் மற்றொரு வைரஸ், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கரும்பு தேமல் வைரஸால் ஏற்படுகிறது. மக்காசோள இலைப்பேன்கள், வேர் புழுக்கள் மற்றும் இலை வண்டுகள், அத்துடன் தானிய இலை வண்டுகள் போன்ற நோய் பரப்பிகளால் இந்த நோய்த்தொற்று காரணிகள் முக்கியமாக வயல்களில் மற்றும் வயல்களுக்கிடையே பரவுகிறது. வறட்சி, மோசமான மண் வளம் மற்றும் தேவைக்கு குறைந்த விவசாய நடைமுறைகள் போன்ற மோசமான சுற்றுச்சூழல் நிலைமைகளால் இந்த அறிகுறிகள் மேலும் மோசமடைகின்றன.


தடுப்பு முறைகள்

  • சகிப்புத் திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை நடவு செய்யவும்.
  • ஆரோக்கியமான தாவரங்கள் அல்லது சான்றளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து பெறப்படும் விதைகளைப் பயன்படுத்தவும்.
  • உங்கள் பகுதியில் நோய்க்காரணியின் உச்ச கட்ட எண்ணிக்கையைத் தவிர்க்க சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ நடவு செய்யுங்கள்.
  • நோய் பரவுவதை நிறுத்த, கடுமையாக பாதிக்கப்பட்ட தாவரங்களை வேரோடு பிடுங்கி மற்றும் எரித்து விடவும்.
  • வயலில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள களைகளைக் கட்டுப்படுத்தவும்.
  • அதே பகுதியில் ஓரினப்பயிர்களாக மக்காச்சோளத்தை வளர்க்க வேண்டாம்.
  • பருப்பு வகைகள், தட்டைப்பயிறுகள், உருளைக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்குகள் மற்றும் பிற புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க