ஆலிவ்

நியோஃபேப்ரியே இலைப்புள்ளி நோய்

Neofabraea spp.

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் சிறிய வட்ட வடிவில் சிதைந்த காயங்கள் தென்படும்.
  • தளிர்கள் மற்றும் கிளைகளில் செம்பழுப்பு நிற காயங்கள் மற்றும் கிளைகளில் எப்போதாவது சொறிப்புண்கள் ஏற்படும்.
  • மஞ்சள் நிற ஒளிவட்டத்தால் கருமையான பழப் புள்ளிகள் சூழப்பட்டிருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
ஆலிவ்

ஆலிவ்

அறிகுறிகள்

இயந்திர முறையில் அறுவடை செய்யப்பட்ட பயிர்களில் அறுவடைக்குப் பிறகு அறிகுறிகள் ஏற்படும். இலைகளில் அறிகுறிகள் குறிப்பாக குளிர்காலத்தின் பிற்பகுதியிலும் வசந்த காலத்தின் துவக்கத்திலும் தெரியும். இலையின் காயங்கள் 3 முதல் 4 மிமீ விட்டம் கொண்டவை மற்றும் சற்று அழுந்திய நிலையில் இருக்கும். இவை ஆரம்பத்தில் சிறியதாகவும் சுற்று வெளிறிய (மஞ்சள்) காயங்களாக நிகழும். இந்தக் காயங்கள் வசந்த காலத்திலும் கோடையின் தொடக்கத்திலும் சிதைவு நிலைக்குச் செல்லும். 0.5 முதல் 3 செமீ வரை நீளமுள்ள சொறிப்புண்கள் காயப்பட்ட கிளைகளில் காணப்படும், இதனால் கிளைகள் பட்டுப்போகும். கடுமையான தாக்குதலால் இலை உதிர்வு மற்றும் அடுத்த பருவத்தின் உற்பத்தி பாதிக்கப்படலாம். பழத்தில் தென்படும் புள்ளிகள் அடர் நிறத்தில், சற்று அழுந்திய புள்ளிகளாக வகைப்படுத்தப்படுகின்றன, இந்தப் புள்ளிகள் வெளிறிய ஒளிவட்டத்தால் சூழப்பட்டிருக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இன்றுவரை, பயனுள்ள உயிரியல் கட்டுப்பாட்டு சிகிச்சைகள் எதுவும் கிடைக்கவில்லை.

இரசாயன கட்டுப்பாடு

இந்தக் குறிப்பிட்ட பிரச்சினை சமீபத்திய ஆண்டுகளில் கவனிக்கப்படுகிறது. இரசாயன கட்டுப்பாட்டு ஆய்வுகள் தற்போது ஆயத்தமாகி வருகின்றன. அறுவடைக்குப் பிறகான பாதுகாப்பு தெளிப்பு இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக இருக்கலாம். நோய்க்கிருமி பரவலில் தாவர சீர்திருத்தம் மற்றும் அறுவடை இயந்திர கருவிகளின் பங்கு ஆய்வு செய்யப்பட வேண்டும். உங்கள் பிராந்தியத்திற்கான புதுப்பிக்கப்பட்ட தகவலை உங்கள் உள்ளூர் வேளாண் நிபுணரிடம் இருந்து பெறவும்.

இது எதனால் ஏற்படுகிறது

நியோஃபேப்ரியே மற்றும் ஃபிளைக்டெமா இனங்கள் இரண்டும் நோயுடன் தொடர்புடையவை. ஆலிவ் தொழில்துறை விரிவாக்கம் அடைந்திருக்கும் மற்றும் பயிரின் உற்பத்தி தீவிரமடைந்திருக்கும் சமீப ஆண்டுகளில் ஆலிவ் தோட்டங்களில் அறிகுறிகள் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளன. பயிரை சீர்திருத்தம் மற்றும் அறுவடை முறையை இயந்திரமயமாக்கல் இலைகள், தளிர்கள் மற்றும் கிளைகளில் ஏற்படும் காயங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. தொற்றானது காயத்தின் மூலமாகவே ஏற்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • அனைத்து சாகுபடி பயிர் வகைகளும் எளிதில் பாதிக்கப்படுவதில்லை.
  • பிளான்கெட்டா மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பயிர்வகைகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஆர்பெக்வினா மற்றும் பிக்வல் ஆகியவை அவற்றுக்கிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லாமல் இடைநிலை சகிப்புத்தன்மையைக் காட்டின.
  • உற்பத்தியின் இயந்திரமயமாக்கல் இந்த நோயை ஏற்படுத்தும் பிரச்சினை என்பதால் தடுப்பு நடவடிக்கைகளை வரையறுக்க கடினமாக உள்ளது.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க