கரும்பு

போக்கா போயெங்

Fusarium moniliforme

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • கரும்பு பயிரின் உச்சிப்பகுதி உருக்குலைந்து சிதைந்துப்போகும் அல்லது தண்டு சேதமடைந்து காணப்படும்.
  • இளம் இலைகளின் அடிப்பகுதியை நோக்கி வெளிறிய திட்டுகள் காட்சியளிக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

கரும்பு

அறிகுறிகள்

நோய் மூன்று முக்கிய கட்டங்களில் வளரும். முதல் கட்டத்தில் இளம் இலைகளின் அடிப்பகுதியிலும் எப்போதாவது இலைப் பரப்பில் மற்ற பகுதிகளிலும் வெளிறிய திட்டுகள் தோன்றுவது ஆரம்ப அறிகுறிகளாகும். இலைகள் சுருங்கி, முறுக்கிக்கொண்டு, குட்டையாக இருக்கும். பாதிக்கப்பட்ட இலைகளின் அடிப்பகுதி பெரும்பாலும் சாதாரண இலைகளை விட குட்டையாக இருக்கும். உச்சி அழுகல் நோயின் மிகவும் தீவிரமான கட்டத்தில், இலைகளின் உருக்குலைவு, முறுக்கிக்கொள்ளுதல் காணப்படும். சிவப்பு புள்ளிகள் கரைந்து, கதிரிழையின் முழு அடிப்பகுதியும் அழுகி காய்ந்துவிடும். கடுமையான தொற்றுநோய்களில், மொட்டுகள் முளைத்து, தண்டுகளின் நுனி பகுதிகள் கடுமையாக சேதமடைந்துவிடும். கத்தி வெட்டு கட்டம் என அழைக்கப்படும் மூன்றாவது கட்டத்தில் தண்டு அல்லது தண்டின் தோலில் குறுக்கு வெட்டுகள் காணப்படும். இலைகள் அகற்றப்படும் போது, தண்டுகளில் பெரிய வெளிப்படையான வெளிறிய திட்டுகள் காணப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கிடைக்கப்பெற்றால், நடவு செய்வதற்கு எதிர்ப்புத்திறன் அல்லது மிதமான எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளைப் பயன்படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு

தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கிடைக்கக்கூடிய உயிரியல் சிகிச்சைகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். போக்கா போயெங் நோயைக் குறைக்க காப்பர் ஆக்ஸிகுளோரைடு போன்ற பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்துங்கள்.

இது எதனால் ஏற்படுகிறது

ஃபுசேரியத்தின் பல்வேறு வகைகளால் இந்தச் சேதம் ஏற்படுகிறது : ஃபுசேரியம் சப்குளுட்டினன்ஸ், ஃபுசேரியம் சக்கரி, ஃபுசேரியம் மோனிலிஃபார்ம் ஷெல்டன். நோய்க்கிருமிகள் முதன்மையாக காற்றோட்டங்கள் மூலம் பரவலாம், காற்று மூலம் பரவும் வித்துகள் பூச்சிகள், துளைப்பான்கள் அல்லது இயற்கை வளர்ச்சியால் ஏற்படும் விரிசல்களால் ஏதேனும் காயத்தின் மூலம் தாவரங்களின் இலைகள், பூக்கள் மற்றும் தண்டுகளை காலனித்துவப்படுத்துகின்றன. இரண்டாம் கட்ட தொற்று பாதிக்கப்பட்ட கரணைக் குச்சிகள், பாசன நீர், சாரல் மழை மற்றும் மண் மூலம் ஏற்படுகிறது. தொற்று பொதுவாக ஒரு பகுதி விரிவடைந்த இலையின் ஓரத்தில் உள்ள கதிரிழை வழியாக ஏற்படுகிறது. கதிரிழைக்குள் நுழையும் வித்துகள் முளைத்து, கதிரிழை இலையின் உட்புற திசுக்களில் வளரும். இதன் விளைவாக இலைகள் உருக்குலைந்து போகும், குட்டையாகும். வித்துகளின் பரவல் பல்வேறு சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து இருக்கும், இது ஈரப்பதமான பருவத்தைத் தொடர்ந்து வரும் வறண்ட காலத்தில் அதிகம் காணப்படும். இந்தச் சூழல்களின் கீழ், இலை நோய்த்தொற்றுகள் விரைவாக ஏற்பட்டு, அதிகம் எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளும் கூட சில நேரங்களில் ஒரு விதமான இலை அறிகுறிகளைக் காட்டும். இயற்கையான சூழ்நிலையில் தாவர குப்பைகளில் நோய்க்கிருமி 12 மாத காலம் உயிர்வாழும்.


தடுப்பு முறைகள்

  • நோய் வராமல் தடுக்க ஆரோக்கியமான கரணைக் குச்சிகள்/விதை பொருட்களை பயன்படுத்தி நடவு செய்யவும்.
  • 99% ஈரப்பதத்தில் 2.5 மணி நேரம் 54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஈரமான சூடான காற்று வெப்பத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட பயிர்களிலிருந்து கரணைக் குச்சிகள் தயார் செய்யப்பட வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட வயல்களில் பயிர் சுழற்சியை மேற்கொள்ளுங்கள்.
  • 'உச்சி அழுகல்' அல்லது 'கத்தி வெட்டு' தென்படும் கரும்புகள் அல்லது கரணைக் குச்சிகள், கண்ணுக்குத் தெளிவாகப் புலப்பட்டவுடன் வயல்களில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
  • வேர் அமைப்புடன் பாதிக்கப்பட்ட மண் கொத்தை அப்படியே அகற்றி எரித்து விடவும்.
  • நோயுற்ற பயிர்களை கூடிய விரைவில் அறுவடை செய்துவிடுங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க