Pestalotiopsis psidii
பூஞ்சைக்காளான்
5 mins to read
இந்த நோய் பொதுவாக காய்களிலும், அரிதாக இலைகளிலும் ஏற்படுகிறது. பழங்களில் நோய்த்தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் பழுப்பு நிறத்தில், துருப்பிடித்த சிதைந்த பகுதிகளாக சிறிய அளவில் தோன்றும். நோய்த்தொற்று தீவிரமடைந்த கட்டங்களில், சிதைந்த பகுதிகள் இலைகளின் மேற்பரப்பைக் கிழிக்கின்றன. பாதிக்கப்பட்ட பழங்கள் வளர்ச்சியடையாமல், கடினமாக, உருக்குலைந்து விழுந்து விடும்.
பழங்களில் ஏற்படும் காயத்தைத் தடுக்க, பழங்களை நுரைப்பஞ்சு வலைகளைப் பயன்படுத்தி கட்டி வைக்கவும்.
கிடைக்கக்கூடிய உயிரியல் சிகிச்சைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். போர்டியாக்ஸ் கலவை அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு ஆகியவற்றின் பாதுகாப்புக்கான தெளிப்புகள் நோய் பரவுவதை போதுமான அளவு கட்டுப்படுத்தக்கூடும். மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு இளம் பழங்களுக்கு டைமெத்தோயேட் போன்ற முறை ரீதியான பூச்சிக்கொல்லிகளைப் பாதுகாப்புக்காக பயன்படுத்துவது சாதகமான முடிவுகளைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நோய் பூஞ்சையினால் ஏற்படுகிறது, உட்செலுத்தும் பொருளின் முதன்மை ஆதாரம் செயலற்ற நிலையில் இருக்கும் மைசீலியம் ஆகும். பூஞ்சையின் விரைவான தாக்குதல் பழங்களில் சேதத்தை ஏற்படுத்தும். காற்றினால் பரவும் பூஞ்சைச்சிதல், நீர் சாரல், பாதிக்கப்பட்ட தாவரங்களுக்கு அருகாமையில் இருத்தல், காயம் மற்றும் பாதிக்கப்பட்ட இலைகளைக் கொண்டு செல்லுதல் ஆகியவை நோய்த்தொற்று பரவலுக்கான இரண்டாம் நிலை காரணியாகும். பூஞ்சையானது ஈரப்பதமான சூழலில் 20 முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அடர்த்தியான விதானம் மற்றும் போதுமான காற்றோட்டம் இல்லாத நிலையில் வளரும்.