இஞ்சி

இஞ்சியின் இலைப்புள்ளி நோய்

Phyllosticta zingiberis

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • நீரில் தோய்த்தவாறு இலைப் புள்ளிகள் காணப்படும்.
  • அடர் நிற ஓரங்கள் மற்றும் மஞ்சள் நிற ஒளிவட்டத்தால் சூழப்பட்ட வெள்ளைப் புள்ளி காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
இஞ்சி

இஞ்சி

அறிகுறிகள்

இளம் இலைகளில் சிறிய, நீள்வட்ட வடிவ நீர் தோய்த்த புள்ளிகளாக இந்த நோய் தொடங்குகிறது. பின்னர் இவை மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்டு அடர் நிற ஓரங்களுடன் மையப்பகுதியில் வெண்ணிறத்தைக் கொண்டிருக்கும். புள்ளிகள் பெரிதாகி, ஒன்றிணைந்து பெரிய சிதைந்த திசுக்களைக் கொண்ட காயங்களாக உருவாகும். இலையின் பெரும்பகுதி காயங்களால் மூடப்பட்டிருக்கும் போது, அது உலர்ந்து இறுதியில் இறந்துவிடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கு எதிராக உயிரியல் ரீதியான கட்டுப்பாட்டு முறை எதுவும் இன்றுவரை எங்களுக்குத் தெரியவில்லை. நோய் ஏற்படுவதைக் குறைக்க அல்லது அறிகுறிகளின் ஈர்ப்பைக் குறைக்க ஏதேனும் வெற்றிகரமான முறை உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். போர்டியாக்ஸ் கலவையை தெளிக்கவும் அல்லது ஹெக்ஸகோனசோல் (0.1%), புரோபிகோனசோல் (0.1%) அல்லது கார்பென்டாசிம் + மான்கோசெப் ஆகியவற்றைக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளை நோய் முதலில் தென்பட்டதும் பயன்படுத்தவும், பிறகு 20 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை இலைத்திரள் வாயிலான தெளிப்பை மீண்டும் செய்யவும்.

இது எதனால் ஏற்படுகிறது

பைலோஸ்டிக்டா ஜிங்ஜிபெரிஸ் என்னும் மண்ணால் பரவும் பூஞ்சை மூலம் அறிகுறிகள் ஏற்படுகின்றன. மண்ணில் அல்லது பாதிக்கப்பட்ட தாவர குப்பைகளில் உள்ள வித்துக்களால் முதன்மை தொற்று ஏற்படுகிறது. காற்று மற்றும் மழை தூறல்கள் இரண்டாம் நிலை நோய்த்தொற்றுக்கு காரணமாக இருக்கின்றன. அதிக ஈரப்பதம் மற்றும் 20° செல்சியஸ் முதல் 28° செல்சியஸ் வரையான வெப்பநிலை ஆகியவை நோய்க்கிருமிக்கு சாதகமானது. இந்த நோய் வேர்த்தண்டுக்கிழங்குகளின் எண்ணிக்கை மற்றும் அளவைக் கணிசமாகக் குறைக்க வழிவகுக்கும். இரண்டு வார காலமான இலைகள் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன.


தடுப்பு முறைகள்

  • கிடைக்கப் பெற்றால் மிதமான எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் வகைகளை சாகுபடி செய்யவும்.
  • பாதிக்கப்பட்ட இலைகளை பறித்து அகற்றி விடவும் மற்றும்/அல்லது பாதிக்கப்பட்ட தாவரங்களை வேரோடு பிடுங்கி அழித்து விடவும்.
  • மண் தூவல்களைக் குறைக்க பசுந்தாவரப் பொருட்களைக் கொண்டு முறையாக தழைக்கூளம் இடவும்.
  • நோயைக் குறைக்க நிழலை வழங்கவும்.
  • பயிர் சுழற்சி நோய் ஏற்படுவதைக் குறைக்க உதவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க