திராட்சை

திராட்சை துரு நோய்

Phakopsora euvitis

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலையின் அடிப்பகுதியில் ஆரஞ்சு கலந்த பழுப்பு நிற பெருந்திரள் காணப்படும்.
  • இலைகள் முதிர்ச்சியடைந்து முன்கூட்டியே உதிர்ந்துவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

திராட்சை

அறிகுறிகள்

தொடக்கத்தில் ஆரஞ்சு கலந்த பழுப்பு நிற பெருந்திரள் இலையின் அடிப்பகுதியில் காணப்படும். பின்னர், சிறிய அளவில் மஞ்சள் முதல் பழுப்பு நிறம் வரையிலான காயங்கள் இலையின் இரு பக்கங்களிலும் காணப்படும். நோய் அதிகரிக்கையில் ஆரஞ்சு நிறங்கள் அடர்-பழுப்பு நிறத்திலிருந்து கிட்டத்தட்ட கருப்பு நிறமாக மாறும், இவை நீளமான காயங்களை உருவாக்கும். கடுமையான நோய்த் தாக்குதலால் முழு மரமும் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாக மாறி, இலைகளானது இறுதியில் முன்கூட்டியே முதிர்ச்சியடைந்து உதிர்ந்துவிடும். அதைத் தொடர்ந்த வளரும் பருவத்தில் தளிர்கள் மோசமான வளர்ச்சியைக் கொண்டிருக்கும், இதனால் கொடிகளின் வளர்ச்சி குன்றியிருக்கும். இந்நோயானது தளிர்களின் மோசமான வளர்ச்சி, பழங்களின் தரம் குன்றுதல் மற்றும் மகசூல் இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சல்ஃபர் கலந்த பூஞ்சைக் கொல்லியை இலைத்திரள்களில் தெளிக்கவும். பூஞ்சைக் கொல்லி நோய்க்கிருமிக்கு எதிராக செயல்படுவதை உறுதிப்படுத்த மழைக்காலங்களில் தெளிப்பதைத் தவிர்க்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். போர்டாக்ஸ் கலவை, கேப்டாஃபோல், டிஃபோலேடன், ப்ரோபிகோனசோல், டெபுகோனசோல் அல்லது அசோக்ஸிஸ்ட்ரோபின் ஆகியவற்றைக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்துங்கள், இவை நோய்க்கிருமிகளின் தாக்கத்தை கணிசமாகக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்த வளரும் பருவங்களில் பதினைந்து நாட்கள் இடைவெளியில் பேகோர் (0.1%) என்பவற்றை 3-4 முறை திராட்சைத் தோட்டங்களில் தெளிப்பதன் மூலம் துரு நோயைக் கட்டுப்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது பாகோப்சோரா விடிஸ் என்ற பூஞ்சையால் ஏற்படுகின்றன. பூஞ்சை வித்துக்கள் தாவர குப்பைகள் மற்றும் மாற்று புரவலன்கள் மீது உயிர்வாழ்கின்றன, மேலும் இவை காற்றின் மூலம் பரவுகின்றன. ஆரஞ்சு நிற துகள்கள் வடிவில் இலையின் கீழ்பரப்பில் இருக்கும் புள்ளிகளில் துரு நோயின் கிருமி உருவாகிறது. யூரிடினோஸ்போர்களின் (ஓம்பி தொற்றும் இரு கருச்சிதறல்களின்) மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற பெருந்திரள் இலையின் கீழ் பக்கத்தில் உருவாகிறது, இலையின் மேற்பரப்பில் கருமையான சிதைந்த புள்ளிகள் காணப்படும். 20° செல்சியஸிற்கு மேல் உள்ள வெப்பநிலை மற்றும் ஈரமான வானிலை ஆகியவை நோய் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். வித்துக்கள் காற்று மற்றும் காற்றோட்டங்கள் மூலம் எளிதாக பரவும்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பகுதியில் கிடைத்தால், எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகளைப் பயன்படுத்தவும்.
  • இலையின் அடிப்பகுதியில் துரு நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என உங்கள் கொடிகளை தவறாமல் கண்காணிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவர பாகங்களை சேகரித்து எரித்து விடவும்.
  • நல்ல காற்றோட்டத்திற்கு திராட்சைக் கொடிகளை சீர்திருத்தம் செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க