Greenaria uvicola
பூஞ்சைக்காளான்
மிகவும் வெளிப்படையான அறிகுறிகள் பழங்களில் காணப்படுகின்றன. முதிர்ச்சியடைந்த பழங்களில் காணப்படும் பழுப்பு நிற, நீரில் நனைந்த காயமாக ஆரம்ப அறிகுறி காணப்படுகிறது. பழங்கள் பழுக்க ஆரம்பிக்கும் போது அவை இந்த நோய்த்தொற்றுக்கு அதிகம் ஆளாகின்றன. பழங்கள் பாதிக்கப்பட்டவுடன், அவை மென்மையாகி, சிறிய பூஞ்சை கனி கட்டமைப்புகள் அதன் மேற்பரப்பில் குவிந்த வளையங்களாக உருவாகின்றன. செறிவுடைய வளையங்களில் உள்ள காயம் விரைவாக பரவுகிறது, முழு பழமும் பொதுவாக குறுகிய காலத்திற்குள் பாதிக்கப்படைகிறது. வெளிர் நிறமுள்ள பழங்கள் நோய்த்தொற்று ஏற்பட்டால், அவை பழுப்பு நிறமாக மாறும். 2 முதல் 3 நாட்களுக்குப் பிறகு, பழத்தின் தோல் சிறு கருப்பு கொப்புளங்களால் சிதைந்துவிடும். ஈரமான சூழ்நிலையில், கொப்புளங்கள் ஒன்றிணைந்து பழத்தின் மேற்பரப்பில் ஒழுங்கற்ற கொப்புளங்களை உருவாக்குகின்றன. பழத்தின் தோல் கிழிந்துவிடும், பிறகு கிட்டத்தட்ட ஃபிலோஸ்டிக்டா ஆம்பெலிசிடா என்ற கருப்பு அழுகல் நோயில் ஏற்படுகின்றவாறு காய்ந்த கருப்பு பழங்களாக சுருங்கிவிடும். இளம் தளிர்கள் மற்றும் பழக் கொத்துகளின் தண்டுகளிலும் அறிகுறிகள் ஏற்படுகின்றன, ஆனால் அவை குறைவாகவே காணப்படுகின்றன. பாதிக்கப்பட்ட இலைகளில், அறிகுறிகள் மஞ்சள் நிற ஒளிவட்டத்துடன் சிறிய, மூழ்கிய, சிவப்பு-பழுப்பு நிற புள்ளிகளாக தோன்றும். வித்துக்கள் தளிர்கள், இலைக்காம்புகள் மற்றும் மலர்க்காம்புகள் ஆகியவற்றையும் பாதிக்கலாம். மலர்க்காம்புகள் பாதிக்கப்பட்டால், பழம் முதிர்ச்சியடையும் வரை பூஞ்சை செயலற்ற நிலையில் இருக்கும்.
எண்ணெய்கள், பாஸ்பரஸ் அமிலம், பொட்டாசியம் பை-கார்பனேட், பொட்டாசியம் மோனோபாஸ்பேட், ஆக்சிடேட், மக்கிய உர தேநீர் போன்ற கரிம அல்லது ஆபத்து குறைவான கலவைகள் கசப்பு அழுகல் நோய் ஏற்படுவதைக் குறைக்க உதவும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். பூப்பது முதல் அறுவடை வரை பூஞ்சைக் கொல்லிகளைக் கொண்டு சூடான பருவத்தில் பழங்களைப் பாதுகாக்கவும், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பயிர்வகைகளை பாதுகாக்கவும். பூஞ்சை காளான் மற்றும் கருப்பு அழுகல் போன்ற பிற நோய்கள் ஏற்படாமல் தடுக்க கோடையின் ஆரம்பம் முதல் நடுப்பகுதி வரை பூஞ்சைக் கொல்லியைத் தெளித்து நோயைக் கட்டுப்படுத்தலாம். வயல் மற்றும் சேமிப்பிடத்தில் இந்நோயை திறம்பட கட்டுப்படுத்த, ஐப்ரோடியன் 75 WG (0.2%), பிடர்டனோல் 25 WP (0.1%) மற்றும் தியோபனேட் மெத்தில் (0.1%) ஆகியவற்றை தெளிக்கவும்.
கிரீனேரியா யுவிகோலா என்ற பூஞ்சையால் சேதம் ஏற்படுகிறது, இது திராட்சைத் தோட்டத்தில் உள்ள தாவர குப்பைகள் குறிப்பாக காய்ந்த பழங்களில் குளிர்காலத்தை செயலற்ற நிலையில் கழிக்கும். தாவர குப்பைகளில் வளரும் பூஞ்சை திசு வித்துக்களை உருவாக்குகிறது. சூடான, ஈரப்பதமுடைய, மழை பொழிவு போன்ற வானிலை சூழல்கள் பூஞ்சை வளர்ச்சி மற்றும் வித்து உருவாக்கத்திற்கு சாதகமாக உள்ளன. வித்துக்கள் ஆரோக்கியமான பழத்தின் மீது பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு அறிகுறிகள் காணப்படுகின்றன, மேலும் பழம் காயமடைந்து இருந்தால் குறைந்த காலத்தில் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். இவை பொதுவாக குறைந்த வெப்பநிலையில் செயல்பாட்டில் இருக்கும். பழங்களில் இருக்கும் வித்துக்கள் மற்ற பழங்களுக்கு மழைச் சாரல் மூலம் பரவி அடுத்தடுத்த தொற்றுகளை ஏற்படுத்தலாம். கசப்பு அழுகல் நோய் பெரும்பாலும் கருப்பு அழுகல் நோய் என தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும்; இருப்பினும், கருப்பு அழுகலை ஏற்படுத்தும் பூஞ்சை முதிர்ச்சியடையாத பழங்களை பாதிக்கிறது, அதே நேரத்தில் கசப்பு அழுகல் நோயை ஏற்படுத்தும் பூஞ்சை முதிர்ந்த பழங்களை மட்டுமே பாதிக்கிறது.

Put your product in front of farmers the moment they diagnose திராட்சையின் கசப்பு அழுகல் நோய் — right when they need a solution.
Explore
Explore the live agronomic data that powers Plantix disease pages.
Discover