மக்காச்சோளம்

மக்காச்சோளத்தின் பழுப்பு கோடு அடிச்சாம்பல் நோய்

Sclerophthora rayssiae var. zeae

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் நீண்ட மஞ்சள் நிறம், பின்னர் பழுப்பு நிற கோடுகள்/வரிகள் ஏற்படும்.
  • இலைகளின் கீழ் பக்கத்தில் பூசண வளர்ச்சி.
  • முதிர்ச்சி அடைவதற்கு முன்னர் இலை உதிர்வு.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மக்காச்சோளம்

அறிகுறிகள்

ஆரம்ப கட்ட அறிகுறிகள் கீழ்ப்பகுதி இலைகளில் திரள்களாக அல்லது தெளிவில்லாத உருவத்தோற்றமாக காணப்படுகின்றன, இவை எரிந்த தோற்றத்தைக் கொடுக்கின்றன. இவை நீளமாக விரிவடைந்து குறுகிய நரம்புக்கு இடையேயான பட்டையாக (3-7 மி.மீ) ஒன்றிணைந்து முழு இலை நீளத்திற்கும் விரிவடையக்கூடும். இந்த மஞ்சள் நிற கோடுகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் முதல் ஊதா நிறமாக மாறி, இறுதியில் பழுப்பு நிறமாக மாறும். கீழ்ப்புற இலைகளில் நன்கு வரையறுக்கப்பட்ட ஓரங்களுடன் 3-7 மிமீ அகலத்துடன் காயங்கள் குறுகிய பச்சைய சோகை அல்லது மஞ்சள் கோடுகளாக உருவாகத் தொடங்கி, நரம்புகளால் பிரிக்கப்படுகின்றன. அதிக ஈரப்பதம் உள்ள நிலையில், சாம்பல் கலந்த வெள்ளை பூசண வளர்ச்சி இலைகளின் கீழ் பக்கத்தில் தோன்றும். இலை நரம்புகள் பாதிக்கப்படுவதில்லை, இதனால் சீரடுக்கு துண்டாக்குதல் அசாதாரணமானது. கடுமையான நோய்த்தொற்றின் கீழ் மட்டுமே, இலைகள் கிழிந்து போகின்றன. முன் கூட்டியே இலை உதிர்தல் மற்றும் கதிர் முளைப்பது தடுக்கப்படுதல் போன்றவை நோயின் பிற்கால கட்டங்களின் அறிகுறிகளாகும். தீவிரமான உச்சி நோய்க்கு மாறாக, அடிச்சாம்பல் நோயின் அறிகுறிகளுக்கு சொந்தமான எந்த குறைபாடும், குன்றிய வளர்ச்சியும் அல்லது இலை தடிப்பும் இதில் ஏற்படாது. விதை வளர்ச்சி அடக்கப்படலாம், பூக்கும் முன் பொட்டு போன்ற வெடிப்பு அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டால் தாவரம் இறக்கக்கூடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இன்றுவரை, அடிச்சாம்பல் நோய்க்கான உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் எதுவும் பயனுள்ளதாக இல்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் தாவரத்தின் மாசுபாட்டைத் தடுக்க பாதுகாப்பு பூஞ்சைக் கொல்லிகள் உதவும். விதைகளை அசைலாலனைன் பூஞ்சைக் கொல்லி மெட்டலாக்சைல் மூலம் சிகிச்சையளிக்கவும், அதைத் தொடர்ந்து நடவு செய்த 30 நாட்கள் வரை இலைத்திரள் பயன்பாட்டை பின்பற்றவும். நோய் தீர்க்கும் மற்றும் பாதுகாக்கும் முறையைப் போலவே மெஃபெனாக்ஸம் பயன்படுத்தப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகள் ஸ்கெலரோப்தோரா ரேசியே வர்.ஜியே என்ற பூஞ்சையால் ஏற்படுகின்றன. அடிக்கடி மழைப்பொழிவு (100 செ.மீ வருடாந்திர மழைப்பொழிவு) மற்றும் சூடான வெப்பநிலை (22-25° செல்சியஸ்) உள்ள பகுதிகளில் இது மிகவும் அழிவுகரமானதாக இருக்கும். பயிர் விதானத்தில் இந்த நோய்க்கு அதிக அளவு ஈரப்பதம் தேவைப்படுகிறது. தொடர்பு, விதை மாசுபாடு மற்றும் மழை சாரல் ஆகியவற்றின் வழியாக காற்றினால் வீசப்படும் பாதிக்கப்பட்ட இலை குப்பைகளால் சிதறல் ஏற்படுகிறது. விலங்கினச்சிதல்களைப் பொறுத்தவரை, உகந்த வளர்ச்சி நிலைமைகள் 18-30 டிகிரி செல்சியஸில் பூர்த்தி செய்யப்படுகின்றன. இந்த விலங்கினச்சிதல்களின் வடிவத்தில் நோய்க்கிருமி மண்ணில் உயிர்வாழ்கிறது, இவை 3 ஆண்டுகள் வரை வாழுவதற்கான சாத்தியத்தினை கொண்டது.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகள் அல்லது கலப்பினங்கள் கிடைக்கப்பெற்றால் அதனை தேர்வு செய்யவும்.
  • நடவு செய்வதற்கு முன், விதைகளை உலர்த்துவதன் மூலம் அதன் ஈரப்பதத்தை 14% ஆகக் குறைத்து, அடிச்சாம்பல் நோய் ஏற்படாமல் இருக்க பல மாதங்களுக்கு அவற்றை சேமித்து வைக்கவும்.
  • தாவரங்களுக்கு இடையில் நல்ல இடைவெளியை வழங்கவும்.
  • வயல்வெளியில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள களைகளைக் கட்டுப்படுத்தவும்.
  • வயலில் இருந்து தாவர எச்சங்களை அகற்றவும்.
  • கருவிகள் மற்றும் உபகரணங்களை சுத்தமாக வைத்திருக்கவும்.
  • பாதிக்கப்பட்ட மண் மற்றும் தாவரப் பொருட்களின் விநியோகத்தைத் தவிர்க்கவும்.
  • நண்டு புல், சோளம் மற்றும் கரும்பு போன்றவை எஸ்.ரேசியே வர்.ஜியே உடைய பிற புரவலன்கள் ஆகும்.
  • ஆரம்ப கட்டத்திலேயே பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றி வெளியேற்றவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க