மாங்கனி

மாம்பழ பொருக்கு நோய்

Elsinoë mangiferae

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • பழத்தில் சிறிய கருப்பு புண்களின் உருவாக்கம்.
  • பாதிக்கப்பட்ட தண்டு சாம்பல் புண்களால் சற்று வீங்கிய தோற்றத்துடன் காணப்படுதல்.
  • இலைகளில் வெளிர் நிற ஒளிவட்டத்துடன் பழுப்பு நிற புள்ளிகள்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மாங்கனி

அறிகுறிகள்

எல்சினோ மங்கிஃபெராவின் பூஞ்சையால் அறிகுறிகள் ஏற்படுகின்றன. வகை, தாவர பகுதி, தொற்றுநோய்களின் போது திசுக்களின் வயது, தாவர வீரியம் மற்றும் பசுமையான தன்மை போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடலாம். இளம் பழங்களில் சிறிய கருப்பு புண்கள் தோன்றும். நோய்த்தொற்று தீவிரமடைவதால் இலைகளில் வட்ட அல்லது ஒழுங்கற்ற பழுப்பு முதல் சாம்பல் நிற புண்கள் உருவாகின்றன. இலைகள் சுருங்கி, சிதைந்து, இலை உதிர்வு ஏற்படுகிறது. புண்கள் வெளிர்-பழுப்பு நிற தேமல்கள் அல்லது வடு திசுக்களாக உருவாகின்றன. கடுமையாக பாதிக்கப்பட்ட பழங்கள் முன்கூட்டியே உதிரக்கூடும், அதே நேரத்தில் மரத்தில் மீதமுள்ள பழங்களில் வடு திசுக்கள் உருவாகி, பழத்தை சந்தைப்படுத்த முடியாமல் போகக்கூடும். சற்று உப்பிய சாம்பல் நிற, ஓவல் முதல் நீள்வட்டப் புண்கள் தண்டு திசுக்களில் ஏற்படும். பெரிய, வெளிர்-பழுப்பு தோல் நிற தக்கை போன்ற பகுதிகளும் தண்டுகளில் காணப்படும். அரிதான சந்தர்ப்பங்களில், இலைகளில் புண்கள் ஏற்படும். ஒளிவட்டங்களுடன் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும் மற்றும் இலைகளின் ஓரங்களில் புண்கள் உருவாகும். இலைகளின் கீழ்பரப்பில் தக்கை போன்ற புண்களும் காணப்படுகின்றன. கடுமையான தொற்றுநோய்களின் கீழ் இலை உதிர்வும் ஏற்படலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இன்றைய நிலவரப்படி, இந்த பூஞ்சைக்கு எதிராக உயிரியல் கட்டுப்பாட்டு சிகிச்சை முறைகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. இருப்பினும், தாமிரம் கொண்ட பூசண கொல்லிகளை பாதிக்கப்பட்ட தாவர பாகங்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். ஆக்ஸிகுளோரைடு மற்றும் ஹைட்ராக்சைடு அல்லது ஆக்சைடு ஆகியவற்றின் செப்பு பூசண கொல்லிகளை குறைந்தபட்சம் பூ மொட்டு உருவாகும் கட்டத்திலிருந்து இரண்டு முதல் மூன்று வார இடைவெளியில் பூக்கும் வரை பயன்படுத்துங்கள். பூக்கும் மற்றும் பழங்கள் காய்க்கும்போது காப்பர் தெளிப்புகளை மான்கோசெப் கொண்டு மாற்றி தெளிக்கவும். ஈரமான நிலைமைகள் பூஞ்சை தொற்றுக்கு சாதகமாக இருப்பதால், பூஞ்சைக் கொல்லியின் அடிக்கடி பயன்பாடுகள் தேவைப்படுகின்றன. இது கழுவப்படுவதை ஈடுசெய்து, சிகிச்சையின் செயல்திறனை அதிகரிக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

சதுப்புநில தாழ்வான பழத்தோட்டங்களில் மாம்பழ பொருக்கு நோய் தோன்றும். பூக்கும் மற்றும் பழம் உருவாகும் ஆரம்ப நிலைகளில் ஏற்படும் நீடித்த மழையும் இதன் தோற்றத்திற்கு வழிவகுக்கும். இளம் திசுக்கள் மட்டுமே தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றன மற்றும் பழம் பாதி அளவை அடைந்தவுடன் தொற்றுநோயை எதிர்க்கும் திறனை கொண்டிருக்கும். இது வாழும் தாவர திசுக்களில் மட்டுமே வாழ முடியும். மழை தூரல் அல்லது காற்று மூலம் பூஞ்சை வித்துக்கள் பரவலாம், இதனால் இரண்டாம் நிலை தொற்று ஏற்படுகிறது. இல்லையெனில், அது மண் குப்பைகளில் உயிர்வாழும். அறிகுறிகளானது விதைப்புள்ளி நோயுடன் குழப்பிக்கொள்ளப்படும், விதைப்புள்ளி நோயில் உப்பாத காயங்கள் இருக்கும், இந்த பொருக்கு நோயில் உப்பிய கட்டமைப்புகள் காயங்களில் தென்படும்.


தடுப்பு முறைகள்

  • கடுமையாக பாதிக்கப்பட்ட மரங்களில், நோய் பரவும் அளவைக் குறைக்க பழைய பாதிக்கப்பட்ட தண்டுகளை சீர்திருத்தம் செய்வது நன்மை பயக்கும்.
  • தொற்று மற்றும் நோய் பரவுவதைத் தடுக்க, மண் பொருட்களில் உயிர்வாழக்கூடிய இறந்த திசுக்களை அகற்றி அழிக்கவும்.
  • வித்துக்கள் மழை சாரல் மூலம் எளிதில் பரவுகையில், இறந்த மஞ்சரிகள், இறந்த கிளைகள் மற்றும் பூசணமாகிய பழங்களை சீர்திருத்தம் செய்வது அறிவுறுத்தப்படுகிறது.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க