Macrophomina phaseolina
பூஞ்சைக்காளான்
கொண்டைக்கடலை வயல்களில், நோயின் ஆரம்பமானது தாவரங்கள் ஆங்காங்கே உலர்ந்து காட்சியளிக்கும். நோயின் முதல் அறிகுறிகள் இலைகள் மஞ்சள் நிறமாவதும் உலர்ந்து போவதும் ஆகும். இந்த பாதிக்கப்பட்ட இலைகள் பொதுவாக ஓரிரு நாட்களில் உதிர்ந்துவிடும், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் முழு தாவரமும் இறந்துவிடும். பாதிக்கப்பட்ட தாவரங்களின் இலைகள் மற்றும் தண்டு பொதுவாக வைக்கோல் நிறத்தில் இருக்கும், இருப்பினும் சில சந்தர்ப்பங்களில், கீழ்ப்புற இலைகள் மற்றும் தண்டுகள் பழுப்பு நிறமாற்றத்தைக் காட்டுகின்றன. மைய வேர் அடர்நிறமாகி, வறண்ட மண்ணில் மிகவும் உடையக்கூடியதாக ஆகும்.
இலை, தண்டு, பட்டை, பழக் கூழ் மற்றும் நீர்மக் கரைசல் மற்றும் வேப்ப எண்ணெய் போன்ற எண்ணெய் சாறுகள் போன்றவை மண்ணால் பரவும் நோய்க்கிருமி எம். ஃபெசியோலினாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. டிரைக்கோடெர்மா விரிடே மற்றும் டிரைக்கோடெர்மா ஹார்சியானம் போன்ற முரண்பாடான நோய்க்கிருமிகள் / உயிரி கட்டுப்பாட்டு முகவர்கள் நோய் ஏற்படுவதை குறைக்க உதவுகின்றன. விதை சிகிச்சைக்கு டி. ஹார்சியானம் + பி. ஃப்ளோரசன்ஸ் (இரண்டும் @ 5 கிராம் / கிலோ விதை) ஆகியவற்றை பயன்படுத்தவும், இதனை தொடர்ந்து விதைக்கும்போது, செறிவூட்டப்பட்ட டி. ஹார்சியானம் + பி. ஃப்ளோரசன்ஸ் @ 2.5 கிலோ / கிலோ பண்ணை எரு ஆகியவற்றை மண்ணில் பயன்படுத்தலாம்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். உலர் வேர் அழுகலின் வேதியியல் கட்டுப்பாடு பயனுள்ளதாக இருக்காது, ஏனெனில் எம். ஃபெசியோலினா பரந்த அளவிலான புரவலனை கொண்டுள்ளது மற்றும் நீண்ட காலத்திற்கு மண்ணில் உயிர் வாழக்கூடியது. நாற்றுகளாக இருக்கும்போது குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய கொண்டைக்கடலையில் ஏற்படும் இழப்பைக் குறைப்பதில் பூஞ்சைக் கொல்லிகளின் விதை சிகிச்சை ஓரளவிற்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். கார்பென்டாசிம் மற்றும் மான்கோசெப் ஆகியவற்றுடனான பூஞ்சைக் கொல்லி விதை சிகிச்சைகளை தொடர்ந்து மண்ணை நனைத்தல் நோய் ஏற்படுவதைக் கணிசமாகக் குறைக்கும்.
இது மேக்ரோபோமினா ஃபெசியோலினா என்ற பூஞ்சையின் மண் மூலம் பரவும் பூஞ்சை திரிபுகள் அல்லது வித்துக்கள் மூலம் தொடங்கப்பட்ட மண்ணால் பரவும் நோயாகும். சுற்றுப்புற வெப்பநிலை 30 - 35 டிகுரி செல்ஸியசுக்கு இடையில் இருக்கும்போது அறிகுறிகள் திடீரென்று தோன்றும். வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் அடிக்கடி ஈரப்பத அழுத்தத்துடன், பொதுவாக வெப்பமண்டல ஈரப்பதமான பகுதிகளில் பூஞ்சை மிகவும் தீவிரமாகும். இந்த நோய் பொதுவாக தாமதமாக பூக்கும் மற்றும் காய்க்கும் நிலைகளில் தோன்றும், இதனால் பாதிக்கப்பட்ட தாவரங்கள் முற்றிலும் காய்ந்து காணப்படும். புரவலன் பயிர் இல்லாத நிலையில், கிடைக்கக்கூடிய இறந்த கரிமப் பொருட்களில் போட்டிபோடும் மட்குண்ணிகளாக இது மண்ணில் உயிர்வாழ்கிறது. எம். ஃபெசியோலினா சாதகமான சூழ்நிலையில் 50 - 100% மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.

This page is powered by millions of live Plantix diagnoses. See where கொண்டைக்கடலையின் உலர் வேர் அழுகல் நோய் is spreading — district by district — with Crop Insights, part of Plantix Intelligence.