பருத்தி

பருத்தியின் துரு நோய்

Phakopsora gossypii

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • முதிர்ந்த இலைகளின் மேற்பரப்பில் சிறிய, பிரகாசமான மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறக் கொப்புளங்கள் காணப்படும்.
  • இலைகளின் அடிப்புறத்தில் அதே நிறத்தையுடைய கொப்புளங்கள், ஆனால் சற்றுப் பெரிய, கரடு முரடான தோற்றத்துடன் காணப்படும்.
  • பருவத்தின் பிற்பகுதியில், இவை பூக்காம்பிலை மற்றும் நெற்றுகளிலும் தோன்றக்கூடும்.
  • கடுமையான நோய்த்தொற்றுகள் இலை உதிர்வை ஏற்படுத்தும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பருத்தி

அறிகுறிகள்

வெப்பமண்டலத் துரு நோயின் முதல் அறிகுறிகள் முதிர்ந்த இலைகளில் தோன்றும். இவை பெரும்பாலும் இலையின் மேற்பரப்பில் சிறிய வடிவில், பிரகாசமான மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறக் காயங்களாகத் தோன்றும். கீழ்ப்பகுதியில், ஒத்த நிறங்களின் புள்ளிகள் ஆனால் சற்றுப் பெரிய மற்றும் கரடு முரடான தோற்றத்தில் காணப்படும். நோய் அதிகரிக்கையில், இவை பெரிதாகி, உப்பி, மஞ்சள் ஒளிவட்டங்களால் சூழப்பட்ட வெளிர் பழுப்பு நிற கொப்புளங்களாக மாறும். இவை வெடித்து, வித்துக்கள் வெளியாகையில், இவை பெரும்பாலும் இணைந்து, ஒழுங்கற்ற கரும் பழுப்பு நிறப் புள்ளிகளை உருவாக்கும். தண்டுகள் மற்றும் காம்புகள் மீது இந்த கொப்புளங்கள் பொதுவாக நீளவாக்கில் மற்றும் அதிகம் உப்பாமல் காணப்படும். நோய் அதிகரிக்கையில், தாவரங்களில் முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே இலைகள் உதிர்ந்து, சிறிய அளவிலான நெற்றுக்கு வழிவகுக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கொரிம்பியா சிட்ரியோடோரியா 1%, சிம்போபோகன் நார்டஸ் 0,5% மற்றும் தைமஸ் வல்காரில் 0.3% ஆகியவற்றின் நறுமண எண்ணெயை உடைய தயாரிப்புகள் நோயின் தீவிரத்தையும், நோய் ஏற்படுவதையும் குறைக்கிறது. மேலும் இந்தக் கலவை பிற துரு நோய்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். சரியான பூஞ்சைக் கொல்லிகளைத் தேர்வு செய்து, அவற்றைச் சரியான நேரத்தில் பயன்படுத்துவது மிகவும் முக்கியமாகும். ஹெக்சாகோனாஸோல் மற்றும் பிராப்பிகோனாஸோல் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1-2 மிலி) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளை விதைத்த 75 நாட்கள் கழித்து, 15 நாட்கள் இடைவெளியில் 120 நாட்கள் வரை விளைச்சல் இழப்புகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தலாம். கிராம்மாப் புல்லில் இருந்து வித்துக்கள் உருவாவதற்கு முன் மான்கோஸெப் 0.25% தெளிக்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

பருத்தியின் துரு நோய் ஒரு தீவிரமான நோயாகும். இது பகோப்சோரா காசிப்பி என்னும் பூஞ்சையினால் ஏற்படுகிறது. இது விதை அல்லது மண் மூலம் பரவும் நோய் அல்ல, இது உயிர்வாழ்வதற்கு பச்சை நிறத்தில் உயிருடன் இருக்கும் திசுக்கள் தேவை. பருவத்தின் போது, பருத்தியின் கொப்புளங்களில் உற்பத்தி செய்யப்படும் வித்துக்கள் வயல்களைச் சுற்றியிருக்கும் கிராம்மாப் புற்களைப் பாதித்து (பாட்டிலோயுவா எஸ்பிபி), இலைகளில் நீளமான பழுப்பு அல்லது கருப்புப் புள்ளிகளை ஏற்படுத்தும். அடுத்தப் பருவத்தின் ஆரம்பத்தில், புற்களில் உற்பத்தி செய்யப்பட்ட வித்துக்கள், பருத்தித் தாவரங்களைப் பாதித்து, தனது வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்யும். வித்துக்களானது இலைத் திசுக்களில் உள்ள துளைகள் அல்லது காயங்கள் வழியாக செல்லாமல், தாவரங்களின் அணுக்களில் நேரடியாக ஊடுருவும். அதிக ஈரப்பதம், இலை ஈரப்பதம் மற்றும் மிதமானது முதல் வெது வெதுப்பான வெப்பநிலை இந்த நோய்க்கு உகந்ததாகும்.


தடுப்பு முறைகள்

  • சீக்கிரம் நடவு செய்யவும், சாத்தியமானால் சீக்கிரம் முதிர்ச்சியடையும் வகையைத் தேர்வு செய்யவும்.
  • மாற்றாக, வறட்சியானக் காலங்களைப் பயனாக்கிக் கொள்வதற்கு தாமதமாக நடவு செய்யவும்.
  • கவிகை சீக்கிரம் உலர்வதற்கு அகண்ட வரிசை இடைவெளியைப் பயன்படுத்தவும்.
  • உங்கள் தாவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து, மாற்றுப் புரவலன்களை களைந்தெறிந்துவிடவும், குறிப்பாக கிராம்மாப் புற்களைக் களைந்தெறியவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க