மக்காச்சோளம்

மக்காச்சோளத்தின் பின் வாடல் நோய்

Magnaporthiopsis maydis

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • பொதுவாக, பூப்பூக்கும் நிலைக்கு முன்பு அல்லது பூத்த பின் இந்த நோய் ஏற்படுகிறது.
  • தாவரங்கள் அடிப்புறத்தில் இருந்து நுனி வரை வாடத் தொடங்கும்.
  • இலைகள் முதலில் மந்தமான பச்சை நிறத்தைக் கொண்டிருக்கும், பிறகு வாடிவிடும்.
  • கீழ்ப்புற கணுவிடைப்பகுதிகள் நிறமாற்றமடைந்து, செம்பழுப்பு நிறமாகி, மென்மையாகவும், இறுதியாக வெறுமையாகி, உலர்ந்து விடக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மக்காச்சோளம்

அறிகுறிகள்

அறிகுறிகளானது பூக்கும் நிலையின்போது அல்லது பூப்பூத்த பிறகு ஏற்படுகிறது மற்றும் இதன் தீவிரம் மக்காச்சோளத்தின் வகை மற்றும் கால நிலைமைகளைப் பொறுத்து மாறுபடும். தாவரங்களின் அடிப்புறத்தில் இருக்கும் இலைகள் முதலில் வாடத் தொடங்கி, மந்தமான பச்சை நிறமாகும். படிப்படியாக, இவை உலர்ந்து, உட்புறமாக சுருளத் தொடங்கும், அதே நேரத்தில் அறிகுறிகளானது மேல்நோக்கிப் பரவும். பாதிக்கப்பட்ட தாவரங்களின் காதுகள் முறையாக வளராது, உமிகளில் காயங்கள் தென்படலாம் மற்றும் தானியங்களின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். சில சமயங்களில், மஞ்சள் அல்லது ஊதா அல்லது கரும் பழுப்பு நிறக் கோடுகள் தண்டுகள் அடிப்பகுதியில் காணப்படும். கடத்துத் திசு பகுதிகள் மற்றும் கணுவிடைப்பகுதிகள் செம்பழுப்பு நிறமாகும். சில நேரங்களில், இது தண்டை வெட்டிப் பார்க்கும்போது, அதன் குறுக்குப்பகுதியில் தெளிவாக காணப்படும். இறுதியாக, இவை உலர்ந்து, சுருங்கி, வெறுமையாகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

விதைகளுக்கு சிகிச்சையளிக்கவும் மற்றும்/அல்லது இந்த நோய்க்கிருமியின் தாக்கத்தைக் குறைக்கவும், நுண்ணுயிரிகளை அடிப்படையாகக் கொண்ட பல கரைசல்கள் ஆய்வுக் கூடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன: பூஞ்சை ட்ரிச்சூரஸ் ஸ்பைராலிஸ், ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிராமினோஃபேசியன்ஸ், எஸ். ஜிப்சோனி, எஸ். லிடிகஸ், எஸ். நோஜலேட்டர், எஸ். ரோச்செய், எஸ். அன்னுலேட்டஸ் மற்றும் நுரைமம் கேண்டிடா மால்டோசா, சி. கிளாப்ராடா, சி.ஸ்லூஃபி, ரோடோடோருலா ருப்ரா மற்றும் டிரிகோஸ்போரோன் குட்டானியம். விதைக்கும் நேரத்தில், பாதிக்கப்பட்ட மண்ணில் எதிர்க்கும் தன்மை கொண்ட பேசில்லஸ் சப்டிலீஸ் கொண்ட கரைசல்களைத் தெளிப்பதும் நோய்த்தொற்றைக் குறைக்கும்

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். இது மண் மற்றும் விதை வழியாகப் பரவும் நோய் என்பதால், சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து விதைகள் வாங்குவது பரிந்துரைக்கப்படுகிறது. பூசண நீர் குளியல் கொண்டு விதைகளுக்கு சிகிச்சை அளிப்பதும் நன்கு வேலை செய்யும். அஜாக்சிஸ்டிரோபின், பெனோமில் அல்லது கேப்டன் அல்லது பூஞ்சைக்கொல்லிகளின் கலவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகள் பூஞ்சைகளுக்கு எதிராக திறன் மிக்க வகையில் செயல்படும்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது மக்னபோர்தியோப்சிஸ் மேடிஸ் என்ற பூஞ்சைகளால் உருவாகிறது, இந்த பூஞ்சையானது மண்ணிலும், விதைகளின் மீதும் குளிர்காலத்தைச் செயலற்ற நிலையில் கழிக்கும். மண் அல்லது விதை மூலம் பரவும் வித்துக்கள் சிறிய காயங்கள் வழியாக நாற்றுகளின் வேர்களைப் பாதித்து, வளர்ச்சியடைகையில் படிப்படியாக திசுக்களில் குடியேறும். தாவரங்களில், இவை வேர்களில் இருந்து தண்டுகளுக்கும், காது மற்றும் தானியங்களுக்குள்ளும் இடம்பெயரும். நோய் வளர்ச்சிக்கான உகந்த நிலைகள்: சுமார் 24 டிகிரி செல்சியஸ் நிலையான வெப்பநிலை அல்லது 20 முதல் 32 டிகிரி செல்சியஸ் இடையே மாறுபடும் இயற்கையான வெப்பநிலை. அதிக வெப்பநிலை பூஞ்சையின் வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் உதாரணமாக, 36 ° செல்சியஸ் வெப்பநிலையில் குறைவாகக் காணப்படுகிறது. இந்த நோய் உலகின் பல பகுதிகளில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகள் கிடைக்கப்பெற்றால், அவற்றைத் தேர்வு செய்யவும்.
  • சான்றளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற விதைகளை வாங்கவும்.
  • நடவு செய்வதற்கு முன், பூஞ்சைகள் ஏதும் இருக்கின்றனவா என்று விதைகளைச் சோதிக்கவும்.
  • மண்ணில் அதிகப்படியான ஈரப்பதத்தைத் தவிர்க்க, நல்ல வடிகால் அமைப்பைத் திட்டமிடவும்.
  • பாதிக்கப்பட்ட பகுதிகளின் விதைகளைப் பயன்படுத்த வேண்டாம் அல்லது விதைக்க வேண்டாம்.
  • பருவத்தின்போது, நல்ல முறையில் உரங்கள் இடுவதை, முக்கியமாக சாம்பல்சத்துப் பயன்பாடு குறித்துத் திட்டமிடுங்கள்.
  • பல ஆண்டுகளுக்கு அரிசி அல்லது மற்ற புரவலன் அல்லாத தாவரங்கள் கொண்டு பயிர்ச் சுழற்சியினைத் திட்டமிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க