பருத்தி

பருத்தியின் ஸ்டெம்பிலியம் இலைப்புள்ளி நோய்

Stemphylium solani

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • மேல்புற இலைகளில் ஒரே மைய அமைப்புகளைக் கொண்ட காயங்கள், வெள்ளை நிற மையப்பகுதி மற்றும் ஊதா நிற ஓரங்கள் காணப்படும்.
  • இலைத் திசுக்களில் வெடிப்பு மற்றும் "குண்டடிபட்ட-துளை" போன்ற தோற்றம் காணப்படும்.
  • பொட்டாசியம் குறைப்பாட்டுடன் இறுக்கமாகத் தொடர்புடையது.

இதிலும் கூடக் காணப்படும்

7 பயிர்கள்
பருத்தி
கத்திரிக்காய்
வெள்ளைப் பூண்டு
வெங்காயம்
மேலும்

பருத்தி

அறிகுறிகள்

ஸ்டெம்பிலியம் இலைப்புள்ளிகள் சுமார் 2 செ.மீ. விட்டம், வட்ட வடிவில் மற்றும் ஊதா நிற விளிம்புகளைக் கொண்டிருக்கும். முதிர்ச்சியடைகையில், இவை வளர்ந்து ஒரே மையத்தைக் கொண்ட அமைப்பை உருவாக்கும், மேலும் இவை காயங்களினுள் வெள்ளை நிற மையப்பகுதியை உருவாக்கும், இது பின்னர் வெடித்து மற்றும் உதிர்ந்து, "குண்டடிபட்ட துளை" போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இந்தக் காயங்கள் பொதுவாக கவிகைகளில் உள்ள மேல்புற இலைகளில் உருவாகும் மற்றும் இவை இலை ஓரங்களில் உருவாக ஆரம்பித்து மற்றும் உட்புறம் படரும். பூப்பூக்கும் பிந்தைய நிலைகளில், தாவரங்களின் மேல்புற இலைகள் நோய் தொற்றுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடும், ஏனென்றால் அந்த நேரத்தில் தேவைப்படும் அதிகமான ஊட்டச்சத்துக்கள்தான் காரணம் ஆகும். இந்த நோயைக் கண்டறிந்து, பொட்டாசியத்தைக் கொண்டு சிகிச்சை அளித்தால், இவை இரண்டாம் நிலை நோய்த்தொற்றாக மாறும். ஆனால் இவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லையென்றால், பெருமளவிலான இலை உதிர்வு மற்றும் விளைச்சல் இழப்பிற்கு வழிவகுக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இது நாள் வரை, இந்த நோய்க்கு எதிரான உயிரியல் கட்டுப்பாட்டுத் தீர்வுகள் எதுவும் இல்லை. இதனைத் தவிர்க்க தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பூஞ்சைக் கொல்லிகள் கிடைக்கப்பெறுகின்றன (பைராகிளாஸ்டிரோபின், பைராகிளாஸ்டிரோபின்+ மெட்கொனாஜோல்) ஆனால் இவை பொருளாதார ரீதியாக சாத்தியமாக இல்லாததால் இவை பொதுவாகப் பரிந்துரைக்கப்படுவதில்லை.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது ஸ்டெம்பிலியம் சொலானி என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. அதிக ஈரப்பதம், அடிக்கடி மழை மற்றும் நீண்டகால வறட்சி போன்றவை இந்த நோய் ஏற்படுவதற்கும் மற்றும் வளர்ச்சி பெறுவதற்கும் ஆதரவாக உள்ளது. குறிப்பாக பூப் பூக்கும் அல்லது நெற்று உருவாகும் நேரத்தில், உடலியல் அல்லது ஊட்டச்சத்து அழுத்தம் ஒரு முக்கிய மூலக்கூறுகளாக உள்ளது. பொட்டாசியம் குறைபாடு முக்கிய காரணியாக உள்ளது, ஆனால் இது வறட்சி, பூச்சிகளின் அழுத்தம், மற்றும் மண்ணில் உள்ள நூற்புழுக்களினாலும் ஏற்படலாம். காற்று இந்தப் பூஞ்சை விதைகளை மற்ற தாவரங்களுக்குப் பரப்ப உதவுகிறது. 20-30 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை நோய்களின் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்தப் பூஞ்சையானது ஆல்டெர்நேரியா மற்றும் செர்கோஸ்போரா இனப் பூஞ்சைகளுடன் சேர்ந்து ஒரு வகையான நோய்ச் சிக்கலை உருவாக்கும், மற்றும் இவற்றை அதே வயலில் கண்டறியக்கூடும். பருத்தி, தக்காளி, உருளைக்கிழங்கு, மிளகு, கத்திரிக்காய் மற்றும் வெங்காயம் ஆகியவை மாற்றுப்புரவலன் தாவரங்களுள் அடங்கும்.


தடுப்பு முறைகள்

  • பொட்டாசியம் தேவைக்கான இடங்கள் குறித்து களத்தில் சோதனை செய்யவும், அடிப்படை உரமளித்தலின் மூலம் தேவையான இடங்களில் பொட்டாசிய உரத்தினை அளிக்கவும்.
  • குறைந்தபட்ச பொட்டாசிய தேவை கொண்ட நீண்ட பருவ வகையினங்களைப் பயிரிடவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்வெளிகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • சமச்சீர் உரங்களுடன் வீரியம் வாய்ந்த பயிர்கள் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • வறட்சி அழுத்தத்தைக் குறைக்க வழக்கமாக நீர்ப்பாசனம் செய்யவும்.
  • சரியான நேரத்தில் பொட்டாசியம் நிறைந்த உரங்களைப் பயன்படுத்தவும் (பிரித்துப் பயன்படுத்துதல்) குறிப்பாக மணல்மிகு மண்ணில் பயன்படுத்தவும்.
  • தேவைப்பட்டால், பூப்பூத்த முதல் நான்கு வாரங்களில் இலைவழிப் பயன்பாட்டிற்குத் திட்டமிடலாம்.
  • பிரச்சனைகளைச் சரிசெய்ய அதிகப்படியான பொட்டாசியம் கொண்டு உரமளிக்க வேன்டாம்.
  • வறட்சிகால அழுத்தங்களைக் குறைக்க நீர்ப்பாசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க