பருப்பு வகை

அவரை வகையின் (மைசூர் பருப்பு) ஸ்டெம்பிலியம் கருகல் நோய்

Pleospora herbarum

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் காணப்படும் சிறிய, வெளிர் பழுப்பு நிற புள்ளிகள் இணைந்து, முழு கிளைகளையும் விழுங்கிவிடும்.
  • அதிக ஒப்பு ஈரப்பதத்தில், நோயுற்ற இலைகள் சாம்பல் நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக இருக்கும்.
  • சில நாட்களிலேயே தாவரங்களில் உள்ள இலைகள் முழுவதும் உதிர்ந்துவிடும்.
  • தூரத்திலிருந்து பார்க்கும்போது, வயல்களில் ஒழுங்கற்ற பழுப்பு நிற திட்டுகள் காணப்படுகின்றன.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
பருப்பு வகை

பருப்பு வகை

அறிகுறிகள்

ஸ்டெம்பிலியம் கருகல் நோய் ஆரம்பத்தில் இலைகள் அல்லது வித்திலைகளில் சிறிய, வெளிர் பழுப்பு நிற புள்ளிகளாகத் தோன்றும். இந்த அறிகுறிகள் போட்ரிடிஸ் கருகல் நோய் அறிகுறிகளுடன் மிகவும் ஒத்தவை. இறுதியில், இந்த காயங்கள் இணைந்து பெரிய, ஒழுங்கற்ற வடிவிலான காயங்களை உருவாக்கி, முழு கிளைகளையும் விழுங்கிவிடும். வெளிறிய நிறம் முதல் தோல் நிறம் வரையிலான இலைகள் குறிப்பாக விதானத்தின் மேற்புறத்தில் தெளிவாகக் காணப்படுகின்றன. ஆரம்பத்தில், தண்டுகள் பச்சை நிறமாகவே இருக்கும், ஆனால் நோய் மேலும் அதிகரிக்கையில், இவை இறுதியில் தோல் நிறமாகவும் பின்னர் பழுப்பு நிறமாகவும் மாறும். அதிக ஒப்பு ஈரப்பதத்தில், நோயுற்ற இலைகள் சாம்பல் நிறம் முதல் கருப்பு நிறமாக இருக்கும். இவை தரையில் விழும்போது, இவை எதிர்கால நோய்த்தொற்றுகளுக்கு ஒரு புதிய உட்செலுத்தும் பொருள்களை வழங்குகின்றன. பெரும்பாலும், தாவரங்கள் ஒரு சில நாட்களில் முனை இலைகளுடன் மட்டுமே காணப்படும். தூரத்திலிருந்து பார்க்கும்போது, ஒழுங்கற்ற பழுப்பு நிற திட்டுகளை வயல்களில் காணலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

அசாதிரச்டா இண்டிகா (வேம்பு) மற்றும் டடுரா ஸ்ட்ராமோனியம் (ஜிம்ஸன் களை) ஆகியவற்றின் நீர்ம் சாறுகள் ஸ்டெம்பிலியம் இலை கருகல் நோயின் உயிரியக்கக் கட்டுப்பாட்டுக்கு பயன்படுத்தப்படலாம், இது வழக்கமான பூசண கொல்லிகளுக்கு நெருக்கமான செயல்திறன் கொண்டது. கண்ணாடி கூடிகளின் கீழ், டிரைக்கோடெர்மா ஹார்சியானம் மற்றும் ஸ்டாச்சிபோட்ரிஸ் சார்டாரத்தை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளின் தடுப்பு அல்லது நோய் தீர்க்கும் பயன்பாடு நோய் நிகழ்வு மற்றும் தீவிரத்தை குறைக்கிறது (இரண்டு நிகழ்வுகளிலும் சுமார் 70%).

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பயறு வகைகளின் ஸ்டெம்பிலியம் கருகல் நோய்க்கு எதிராக செயல்பட, வளரும் பருவத்தின் கடைசி மூன்றாம் பகுதியில் பூஞ்சைக் கொல்லிகளைத் தடுப்பு வழிமுறையாக பயன்படுத்த வேண்டும். சீக்கிரம் அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்றதாக இருக்கும். அசோக்ஸிஸ்ட்ரோபின் + டிஃபெனோகோனசோல், போஸ்கலிட் + பைராக்ளோஸ்ட்ரோபின், குளோரோத்தலோனில், ஐப்ரோடியோன், மான்கோசெப் மற்றும் புரோக்ளோராஸ் போன்ற செயல்பாட்டு பொருள்களை அடிப்படையாக கொண்ட கரைசல்கள் நன்றாக வேலை செய்யக்கூடும். பூஞ்சைக்கு (குளிர் மற்றும் வறண்ட வானிலை) நிலைமைகள் சாதகமற்றதாக இருக்கும்போது சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும். பொதுவாக, பூஞ்சைக் கொல்லிகளின் செயல்திறன் தயாரிப்புகளின் மாற்றத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இது எதனால் ஏற்படுகிறது

பயறு வகைகளின் ஸ்டெம்பிலியம் கருகல் நோய் ப்ளெஸ்போரா ஹெர்பரம் என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது, இது முன்னர் ஸ்டெம்பிலியம் ஹெர்பரம் என்று அழைக்கப்பட்டது, இதன் மூலம் இந்த நோய் இப்பெயர் பெற்றது. இது விதைகள் அல்லது வயலில் பாதிக்கப்பட்ட இறந்த தாவர குப்பைகள் மீது உயிர்வாழும் என்று கருதப்படுகிறது. பயறு தவிர, இந்த பூஞ்சை பரவலான பிற அகண்ட இலை தாவரங்களை பாதிக்கும். பருவத்தின் பிற்பகுதியில் நீண்ட கால இலை ஈரப்பதம் நோயின் வளர்ச்சிக்கு அவசியம். அறிகுறிகளின் நிகழ்வு மற்றும் தீவிரம் வெப்பநிலையைப் பொறுத்தது, 22 -30 ° செல்சியஸ் வரம்பு இவற்றுக்கு உகந்ததாக இருக்கும். இந்த நிலைமைகளில், தொற்றுநோயைத் தூண்டுவதற்கு 8 முதல் 12 மணிநேர இலை ஈரப்பதம் போதுமானது. துணை நிலைமைகளில், எடுத்துக்காட்டாக 15 முதல் 20 ° செல்சியஸ் வரையிலான காற்று வெப்பநிலை, ஈரப்பத காலத்தின் நீளத்தை கணிசமாக அதிகரிக்கும் (24 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்டது). முதிர்ந்த தாவரங்கள் இளைய தாவரங்களை விட நோயால் சீக்கிரம் பாதிக்கப்படக்கூடும், குறிப்பாக அவை தழைச்சத்து அழுத்தத்தில் இருக்கும்போது, அதிகம் பாதிக்கப்படும்.


தடுப்பு முறைகள்

  • சாத்தியமானால் சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட தூய்மையான விதைகளை தேர்வு செய்யவும்.
  • எதிர்ப்பு சக்தி கொண்ட வகைகளை (நிறைய கிடைக்கின்றன) தேர்வு செய்யவும்.
  • நல்ல காற்றோட்டத்திற்கு தாவர அடர்த்தியை குறைக்கவும்.
  • நடவு செய்வதற்கு முன் வயலில் நல்ல வடிகாலினை உறுதி செய்யவும்.
  • நோயின் தீவிரத்தை அதிகரிக்கும் அதிகப்படியான தழைச்சத்து பயன்பாடுகளைத் தவிர்க்கவும்.
  • அறுவடைக்குப் பிறகு நிலத்தை உழுவதன் மூலம் தாவர குப்பைகளை அகற்றி புதைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க