Pleospora allii
பூஞ்சைக்காளான்
ஆரம்ப அறிகுறிகளில் இலைகளில் சிறிய, நீரில் நனைத்த, வெள்ளை முதல் வெளிர் மஞ்சள் புள்ளிகள் அடங்கும். பொதுவாக, இந்த புண்கள் நிலவும் காற்றை எதிர்கொள்ளும் இலைகளின் பக்கத்தில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. காலப்போக்கில், இந்த சிறிய புண்கள் இலை பரப்பு நெடுகிலும் வளர்ந்து, இணைந்து மூழ்கிய, ஓவல் வடிவ அல்லது நீளமான, பழுப்பு நிற கொப்புளங்களாக, தோல் நிறம் முதல் பழுப்பு நிறம் வரையிலான மையங்களுடன் உருவாகும். செறிவு மண்டலங்களும் அவற்றின் மையத்தில் உருவாகக்கூடும். மேம்பட்ட கட்டங்களில், பெரிய சிதைந்த பகுதிகள் உருவாகி, அவை இலை அல்லது விதை தண்டினை குடைந்து, திசுக்களில் பரவலான கருகலை ஏற்படுத்தும்.
அசாதிராச்தா இண்டிகா (வேம்பு) மற்றும் டடுரா ஸ்ட்ராமோனியம் (ஜிம்ஸன்களை) ஆகியவற்றின் நீர்ம சாறுகள் ஸ்டெம்பிலியம் இலை கருகல் நோயின் உயிரியக்கக் கட்டுப்பாட்டுக்கு பயன்படுத்தலாம், இது வழக்கமான பூசண கொல்லிகளுக்கு நெருக்கமான செயல்திறன் கொண்டது. கண்ணாடிக்கூடிகளில், டிரைக்கோடெர்மா ஹார்சியானம் மற்றும் ஸ்டாச்சிபோட்ரிஸ் சார்டாரத்தை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளின் தடுப்பு அல்லது நோய் தீர்க்கும் பயன்பாடு நோய் நிகழ்வு மற்றும் அதன் தீவிரத்தை குறைக்கிறது (இரண்டு நிகழ்வுகளிலும் சுமார் 70%).
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். எஸ். வெசிகேரியத்தின் வளர்ச்சியைக் குறைப்பதில் அசோக்ஸிஸ்ட்ரோபின் + டிஃபெனோகோனசோல், போஸ்கலிட் + பைராக்ளோஸ்ட்ரோபின், குளோரோதலோனில், ஐப்ரோடியோன், மான்கோசெப் மற்றும் புரோக்ளோராஸ் ஆகிய செயல்பாடு பொருள்களின் கரைசல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பூஞ்சைக்கு (குளிர் மற்றும் வறண்ட வானிலை) நிலைமைகள் சாதகமற்றதாக இருக்கும்போது சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுவாக, பூஞ்சைக் கொல்லிகளின் செயல்திறன் தயாரிப்புகளை மாறி மாறி பயன்படுத்தும்போது மேம்பட்டதாக இருக்கிறது.
ஸ்டெம்பிலியம் இலை கருகல் நோய் ப்ளெஸ்போரா அல்லி என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது, இது முன்னர் ஸ்டெம்பிலியம் வெசிகேரியம் என்று அழைக்கப்பட்டது, இதன் மூலம் இந்நோய் இப்பெயர் பெற்றது. இது பாதிக்கப்பட்ட தாவர குப்பைகளில் உயிர்வாழ்கிறது மற்றும் வசந்த காலத்தில் சாதகமான வானிலை சூழலின் போது மீண்டும் வளர்ச்சியைத் தொடங்குகிறது. பின்னர் அது காற்றினால் அருகிலுள்ள தாவரங்களுக்கு பரவுகின்ற வித்துக்களை உருவாக்குகிறது. இது பொதுவாக இலை நுனிகள், முந்தைய நோய்களால் ஏற்பட்ட புண்கள் அல்லது வெறுமனே காயமடைந்த திசுக்கள் (எ.கா. பூச்சிகள் அல்லது ஆலங்கட்டி போன்றவற்றிலிருந்து) போன்ற இறந்த மற்றும் இறக்கும் வெங்காய திசுக்களை ஆக்கிரமிக்கிறது. நீண்ட கால வெதுவெதுப்பான ஈரமான நிலைமைகள் நோய் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. வானிலை வெப்பமாகவும் (18 - 25 ° செல்சியஸ்) மற்றும் இலைகளின் மேற்பரப்பு 24 மணி நேரத்திற்கும் மேலாக ஈரமாக இருந்தால் ஆரோக்கியமான இலைகளையும் தாக்கலாம். நோய்கள் பொதுவாக இலைகளை மட்டுமே தாக்குகின்றன, குமிழ்த்தண்டுகளை பாதிப்பதில்லை. முதிர்ந்த இலைகள் இளம் இலைகளை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன.

This page is powered by millions of live Plantix diagnoses. Build plant-disease detection like this into your own products with the API Toolkit, part of Plantix Intelligence.