பிஸ்தா பருப்பு

ஆல்டர்னேரியா பின் கருகல் நோய்

Alternaria alternata

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • அடர் பழுப்பு நிறத்தில், பரவலான, நுண்துகள் போன்ற புள்ளிகள் அல்லது கருப்பு மையங்கள் கொண்ட கொப்புளங்கள் இலைகளில் காணப்படும்.
  • இலைகள் வாடிப்போகுதல் மற்றும் சீக்கிரமே இலை உதிர்தல் போன்றவை காணப்படும்.
  • பழங்களில் பழுப்பு நிற, வட்ட வடிவ சிதைந்த புள்ளிகள், சிவப்பு நிற ஒளிவட்டத்தால் சூழப்பட்டிருக்கும்.
  • இவை பெரிதாகும்போது, ​​அவற்றில் பூசணம் உருவாகத் தொடங்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
பிஸ்தா பருப்பு

பிஸ்தா பருப்பு

அறிகுறிகள்

அறிகுறிகள் பொதுவாக கோடையில் தோன்றும் மற்றும் சிற்றிலைகளில் சுமார் 3 முதல் 7 மிமீ விட்டம் கொண்ட கோண அல்லது வட்டப் புள்ளிகள் தென்படுவது இவற்றின் அறிகுறிகளாகும். சில கடுமையான சந்தர்ப்பங்களில் அல்லது குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய வகைகளில், புள்ளிகள் 3 செமீ விட்டம் வரை கறைகளாக மாறும். இலைக்காம்புகள் மற்றும் இலை பரப்புகளின் முக்கிய நரம்புகளிலும் கருப்பு நிற சிதைவுகள் உள்ளன. கடுமையான தாக்குதலால் இலைகள் வாடி உதிர்ந்துவிடும். முதிர்ச்சியடையாத பழங்களில், பழுப்பு அல்லது கருப்பு புள்ளிகள் தோன்றும். முதிர்ந்த பழங்களில், புள்ளிகள் சற்றே பெரியதாக இருக்கும் (1 முதல் 5 மிமீ விட்டம் வரை) மற்றும் சிவப்பு நிற ஒளிவட்டத்தால் சூழப்பட்டிருக்கும். பழங்களில் பூஞ்சை உருவாகத் தொடங்கும், இது அவற்றின் சிதைவுக்கு வழிவகுக்கும். கடுமையான சந்தர்ப்பங்களில், இது உற்பத்தியின் தரத்தை கணிசமாகக் குறைக்கிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கத்தரித்து பிறகு மரங்கள் மற்றும் வெட்டுப்பகுதிகள் மீது போர்டியாக்ஸ் கலவையை தெளிக்கவும். மாற்றாக, பூண்டு அல்லது குதிரைவாலியின் கலவையை இலைகள் மற்றும் பழங்களில் தடவவும். நீங்கள் பேசிலஸ் சப்டிலிஸ் அடிப்படையிலான கரைசல்களைப் பயன்படுத்தலாம், இது பூஞ்சையின் வேட்டையாடும் இனங்களாகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப் பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த பூச்சி அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். இந்த நோய்க்கு எதிரான சிகிச்சைகளை கோடையின் தொடக்கத்தில், பழங்கள் பழுக்க வைக்கும் முன் தொடங்க வேண்டும். செயலில் உள்ள பொருட்கள் தியோபனேட்-மெத்தில், மானெப், தாமிர தயாரிப்புகளை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகள் நன்றாக வேலை செய்கின்றன. தொற்றுநோயைக் குறைக்க குறைந்தது இரண்டு சிகிச்சைகள் தேவை. சிகிச்சையின் செயல்திறன் அவற்றைப் பயன்படுத்தும் நேரம், மரத்தின் வயதிற்கு ஏற்ப பயன்பாடு மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்தின் பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்தது.

இது எதனால் ஏற்படுகிறது

அல்டர்நேரியா ஆல்டர்நேட்டா இனத்தைச் சேர்ந்த மூன்று பூஞ்சைகளின் குழுவால் இந்நோயின் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இவை மண்ணில் அல்லது தாவர குப்பைகளில் செயலற்ற நிலையில் இருக்கும். சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் போது, இவை காற்று, மழையால் பாதிக்கப்படக்கூடிய மரங்களுக்கு கொண்டு செல்லப்படும் வித்துகளை உருவாக்கும். அதிக ஈரப்பதத்துடன் தொடர்புடைய அதிக வெப்பநிலை, பனி உருவாக்கம், மாறி மாறி ஈரமான மற்றும் வெயில் காலங்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை பிஸ்தா மீதான இந்நோயின் வளர்ச்சியில் முக்கிய காரணிகளாகும். போட்ரியோஸ்பேரியா டோதிடியாவால் ஏற்படும் கதிர் மற்றும் தளிர் கருகல் அறிகுறிகளை இதனுடன் குழப்பிக்கொள்ளலாம். இவற்றைப் பிரித்துச் சொல்ல, ஈரப்பதமான சூழல் நிலவும் போது பாதிக்கப்பட்ட இலைகளைத் தேய்க்கவும்: அது விரல்களைக் கருமையாக்கினால், அது ஆல்டர்னேரியா ஆல்டர்நேட்டாவால் ஏற்படும் பின் கருகல் நோய் ஆகும்.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்து குறைந்த பாதிப்புக்குள்ளாகும் வகைகளையும் ஆரோக்கியமான விதைகளையும் பயன்படுத்தவும்.
  • விதானத்தின் காற்றோட்டத்தை அதிகப்படுத்த இறுக்கமான நடவுகளைத் தவிர்க்கவும்.
  • நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய பழத்தோட்டத்தை தவறாமல் பரிசோதிக்கவும்.
  • பழத்தோட்டத்தின் தரையில் களைகளை நிர்வகிக்கவும்.
  • ஆரம்ப அறிகுறிகள் தெரிந்துவிட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வெட்டி எரிக்கவும்.
  • நன்கு காற்றோட்டமான விதானங்களைப் பெற, செயலற்ற நிலையில் இருக்கும்போது மரங்களை கத்தரிக்கவும்.
  • தெளிப்பு நீர்ப்பாசனத்தைத் தவிர்க்கவும், குறிப்பாக பழம் பழுக்கும்போது தவிர்க்கவும்.
  • அறுவடைக்குப் பிந்தைய பயிர் எச்சங்களை அகற்றி எரிக்கவும்.
  • எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த தாவர பாகங்களை உரமாக்க வேண்டாம், ஏனெனில் இவை நோயை மற்றொரு பருவத்திற்கு கொண்டு செல்லும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க