பருத்தி

பருத்தியின் வேர் அழுகல் நோய்

Macrophomina phaseolina

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • தாவரங்கள் வாடி, இலைகள் உதிர்ந்துவிடும்.
  • தாவரங்கள் சாய்ந்து விடக்கூடும்.
  • வேர்களின் பட்டை மஞ்சள் நிறமாகும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பருத்தி

அறிகுறிகள்

பருத்தி செடிகளின் வாட்டமே இந்த நோயின் முதல் அறிகுறி ஆகும். மேலும் மிகுதியாகப் பாதிக்கப்பட்ட நிலைமைகளில், இதனால் இலைகள் முழுதும் உதிர்ந்து, பயிரே சாய்ந்துவிடக் கூடும். மிகுந்த வேகத்தோடு முன்னேறும் வாட்டமே இதன் இயல்பாகும். இந்த இயல்பே, இதே அறிகுறிகளைக் கொண்ட மற்ற நோயில் இருந்து வேர் அழுகல் நோயை வேறுபடுத்திக் காட்டும். ஆரம்பத்தில், விளைநிலத்தின் மிகக் குறைவான பயிர்களே பாதிக்கப்படுகிறது, ஆனால் காலப்போக்கில் இந்த நோய், பாதிக்கப்பட்ட பயிர்களைச் சுற்றி வட்ட வடிவில் பரவி, விளைநிலம் முழுதும் பரவிவிடுகிறது. பூமிக்கு மேல் உருவாகும் பருத்தி செடிகளின் வாட்டம் இந்த நோயின் தாமதமான வெளிப்பாடாகும். இது வேரின் அழுகலுக்கும், காற்றுக்கு வெளிப்பட்ட பாகங்களுக்கு நீர் மற்றும் ஊட்டச்சத்தின் போதுமான போக்குவரத்து நடைபெறாதவற்றின் அறிகுறியாகும். இறுதியில், பாதிக்கப்பட்ட தாவரங்கள் உறுதி நிலை இழந்து, காற்றால் எளிதாக சாய்க்கப்பட்டு, நிலத்திலிருந்து பிடுங்கப்படுகின்றன. வேர்களின் பட்டை ஆரோக்கியமான தாவரங்களுடன் ஒப்பிடும்போது ஒரு மஞ்சள் நிற தோற்றத்தைக் கொண்டு, பெரும்பாலும் துண்டு துண்டாக உதிர்ந்து விடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பருத்தி வேர் அழுகல் நோய்க்கு எதிராக திறன் மிக்க கட்டுப்பாடு வழங்கும் எந்த ஒரு உயிரின முகவரும் இருப்பதாக இந்நாள் வரை தெரியவில்லை. பூஞ்சை டிரிகோடெர்மாவின் சில இனங்களால் சிகிச்சை அளிக்கப்பட்ட பருத்தி நாற்றுக்கள் உயிர்வாழ்வது கணிசமாக அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அதை வியாபாரமயமாக்குவது சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஜிங்க் சல்பேட்-ன் சில கரிம தயாரிப்புகளைத் தெளிப்பதன் மூலம் அது பரவுவதைக் குறைக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூஞ்சைக் கொல்லிகளான திரம், தியோஃபானேட் மெத்தைல், ஜிங்க் சல்பேட் மற்றும் கேப்டன் ஆகியவை அடங்கிய பல்வேறு தயாரிப்புகளையும் விதைகளிலோ அல்லது மண்ணிலோ பயன்படுத்துவது, வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்படுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகள் விதைகளின் மூலமும் மண்ணின் மூலமும் பரவும் பூஞ்சையான, மேக்ரோஃபோமினா ஃபேஸியோலினா-வினால் தோன்றுகின்றன. இது உலகம் முழுவதிலும் பரவியிருக்கும் ஒரு முக்கியமான நோயாகும். இது மிளகு, முலாம்பழம் அல்லது வெள்ளரிக்காய் போன்ற, பரந்த அளவிலான 300 க்கும் மேற்பட்ட பல்வேறு மூலப்பயிர்களையும் பாதிக்கிறது. இந்த நோய்க்கிருமி மண்ணில் உயிர் வாழ்கிறது. குறிப்பாகப் பருத்தியின் வளர்ச்சிப் பருவத்தின் பிற்பகுதியில், இதை வேர்களில் இருந்து பிரித்து எடுக்கலாம். தாவரங்கள் வறட்சியை அனுபவிக்கும் போது மண்ணில் இது செழித்து வளர்கிறது. இந்த நோய் பெரும்பாலும் கோடைகாலத்தில் ஏற்பட்டு, இலையுதிர் காலம் நிலைகொண்ட பின் குறைந்து விடும். 15-20 சதவிகிதம் ஈரப்பதத்துடனான உலர்ந்த மண்ணும், 35 -லிருந்து 39 ° C வரையான வெப்பநிலையும், இந்தப் பூஞ்சைக்கான உகந்த நிலைகள்.


தடுப்பு முறைகள்

  • பூஞ்சை அல்லது வறட்சியை சகித்துக் கொள்ளக்கூடிய வகைகளை வளர்க்க வேண்டும்.
  • சாய்ந்து போகாத, வலுவான தண்டுகளுடன் கூடிய தாவர வகைகளைப் பயிரிடவும்.
  • பூக்கும் காலத்துக்குப் பின், வளரும் பருவத்தின் வறண்ட காலநிலை ஏற்படாத வண்ணம், விதைப்பு தேதியை மாற்றிக் கொள்ளவும்.
  • தாவரங்கள் இடையே பரந்த இடைவெளியை விடவும்.
  • குறிப்பாகப் பூக்கும் காலத்திற்குப் பின், நீர்ப்பாசனத்தின் மூலம் மண்ணில் நல்ல ஈரப்பதத்தைப் பராமரிக்கவும்.
  • சமச்சீரான உரமிடுதலைப் பராமரித்து, அதிக நைட்ரஜன் பயன்பாட்டைத் தவிர்க்கவும்.
  • அதிகமான விளைச்சல் இழப்புகளைத் தவிர்க்க சீக்கிரமே அறுவடை செய்துவிடவும்.
  • பயிர் மிச்சங்களைப் புதைக்க ஆழமாக உழுதல் வேண்டும்.
  • உழவுக்குப்பின் மண் மிச்சங்களை சூரிய ஒளியைக் கொண்டு கிருமி நாசம் செய்தலும் பயனுள்ளதாக இருக்கும்.
  • சிறிய கோதுமை, ஓட்ஸ், அரிசி, பார்லி மற்றும் கம்பு போன்ற மூலப் பயிர் அல்லாதவையோடு மூன்று ஆண்டுகளுக்குப் பயிர் சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க